Post by saanuputhiran on Aug 27, 2016 10:44:51 GMT 5.5
ஸ்ரீமஹாஸ்வாமி கராவலம்பம்
மாயப் பிறப்பறுக்கும் குறுநகைக் கோமளமே
காயப் பிணிநீக்கும் கற்பகமே கண்ணொளியே
ஞான வொளியோடு நல்நயத்தை ஈய்ந்தவரே
தூய மனதோடே நெறிதவறா வாழ்வுபெற
காலைப் பொழுதினிலே கற்பகத்தாள் பணிகின்றோம்
கச்சியம் பதியோனே கைதூக்கிக் காத்தருள்வாய் !
கலியின் வினைபோக்கும் கனிச்சொல் அறமுடனே
வலியின் துயர்போக்கும் தேமதுர வாக்காலே
கதியாய் பொற்றாமரையாய் பொக்கிஷமாய் வந்திங்கே
கிலியும் விட்டொழிய கதியாகி அருள்வோனே
காலைப் பொழுதினிலே கற்பகத்தாள் பணிகின்றோம்
கச்சியம் பதியோனே கைதூக்கிக் காத்தருள்வாய் !
தூயப் பொன்நிறமாய் கனிமார்பில் பூதியுமாய்
கச்சித் திருத்தாயும் சூடிடும்நல் குங்குமமும்
காணும் மனமதிலே மகிழ்வூட்டும் இனியவனே
தேனினும் இனிதான தளிர்வாழ்வும் நல்கிடவே
காலைப் பொழுதினிலே கற்பகத்தாள் பணிகின்றோம்
கச்சியம் பதியோனே கைதூக்கிக் காத்தருள்வாய் !
களிறாம் கஜராஜன் பெற்றதொரு முத்திபோலே
அறியா மாந்தருக்கும் அருளுகின்ற பேரொளியே
கால்நடையாய் களமெங்கும் சுற்றிவந்த பேரிறையே
தளிராய் நற்கதியாய் கச்சியேகன் அருள்பெறவே
காலைப் பொழுதினிலே கற்பகத்தாள் பணிகின்றோம்
கச்சியம் பதியோனே கைதூக்கிக் காத்தருள்வாய் !
தண்டம் வலக்கரமும் கமண்டலம் இடக்கரமும்
அண்டம் காத்துவரக் கோடிதனில் உதித்தோனே
கண்டம் நீக்குமருட் கற்பகனாம் நின்னுருவை
சிந்தையிற் தாம்கொண்டே தியானித்தோம் குருபரனே
காலைப் பொழுதினிலே கற்பகத்தாள் பணிகின்றோம்
கச்சியம் பதியோனே கைதூக்கிக் காத்தருள்வாய் !
உலகோர் குறைபொறுத்து குன்றாது வாழ்விக்க
உலகாள் சடையோனின் அவதாரப் பரம்பொருளே
நித்திரை கலைந்தெம்மை திருவடியின் அருள்பெறவே
நற்றிறை நாயகத்துச் சீரருளாய் வாய்த்தவனே
காலைப் பொழுதினிலேகற்பகத்தாள் பணிகின்றோம்
கச்சியம் பதியோனே கைதூக்கிக் காத்தருள்வாய் !
ஒன்றாய் செவ்வுறவாய் கற்பகமாய் தோன்றியநல்
திருவின் திருத்தாளின் அருள்வேண்டிச் சரண்புகுந்தோம்
பலவாய் பல்பொருளாய் பரவெளியில் அருட்புரியும்
திருவின் திருவொளியாய் தரணிபெற்ற ஸ்ரீசரணா
காலைப் பொழுதினிலேகற்பகத்தாள் பணிகின்றோம்
கச்சியம் பதியோனே கைதூக்கிக் காத்தருள்வாய் !
அகமும் புறமுந்தான் அனுதினமும் தூய்தொளிர
அகமும் நின்னுருவாய் நிறைந்தேக அருள்செய்வாய்
அகமும் மகிழ்ந்திடவே அமுதமெனத் திகழ்பவனே
அகமுள் நல்லமுதாய் ஆக்கிடும்உன் அருள்வேண்டி
அனுதினமுந் துதிசெய்தோம் ஆச்சார்ய சங்கரனே!
கச்சியம் பதியோனே கைதூக்கிக் காத்தருள்வாய் !
ஸ்ரீ ஆச்சார்ய பக்தஸ்ரேஷ்டரான “ஸரஸ கவி” ஸ்ரீ லக்ஷ்மீகாந்த சர்மா எனும் மஹானுபாவர் இயற்றிய ப்ராதஸ்மரண பூர்வக கராவலம்ப ஸ்தோத்திரத்தினைத் தழுவியதோர் அருட்பாவாக இதனை எழுதும் பாக்கியம் கிட்டியமைக்கு ஸ்ரீமஹாஸ்வாமிகளின் கமலபாதங்களில் நமஸ்கரிக்கின்றேன்.
- சாணு புத்திரன்.
மாயப் பிறப்பறுக்கும் குறுநகைக் கோமளமே
காயப் பிணிநீக்கும் கற்பகமே கண்ணொளியே
ஞான வொளியோடு நல்நயத்தை ஈய்ந்தவரே
தூய மனதோடே நெறிதவறா வாழ்வுபெற
காலைப் பொழுதினிலே கற்பகத்தாள் பணிகின்றோம்
கச்சியம் பதியோனே கைதூக்கிக் காத்தருள்வாய் !
கலியின் வினைபோக்கும் கனிச்சொல் அறமுடனே
வலியின் துயர்போக்கும் தேமதுர வாக்காலே
கதியாய் பொற்றாமரையாய் பொக்கிஷமாய் வந்திங்கே
கிலியும் விட்டொழிய கதியாகி அருள்வோனே
காலைப் பொழுதினிலே கற்பகத்தாள் பணிகின்றோம்
கச்சியம் பதியோனே கைதூக்கிக் காத்தருள்வாய் !
தூயப் பொன்நிறமாய் கனிமார்பில் பூதியுமாய்
கச்சித் திருத்தாயும் சூடிடும்நல் குங்குமமும்
காணும் மனமதிலே மகிழ்வூட்டும் இனியவனே
தேனினும் இனிதான தளிர்வாழ்வும் நல்கிடவே
காலைப் பொழுதினிலே கற்பகத்தாள் பணிகின்றோம்
கச்சியம் பதியோனே கைதூக்கிக் காத்தருள்வாய் !
களிறாம் கஜராஜன் பெற்றதொரு முத்திபோலே
அறியா மாந்தருக்கும் அருளுகின்ற பேரொளியே
கால்நடையாய் களமெங்கும் சுற்றிவந்த பேரிறையே
தளிராய் நற்கதியாய் கச்சியேகன் அருள்பெறவே
காலைப் பொழுதினிலே கற்பகத்தாள் பணிகின்றோம்
கச்சியம் பதியோனே கைதூக்கிக் காத்தருள்வாய் !
தண்டம் வலக்கரமும் கமண்டலம் இடக்கரமும்
அண்டம் காத்துவரக் கோடிதனில் உதித்தோனே
கண்டம் நீக்குமருட் கற்பகனாம் நின்னுருவை
சிந்தையிற் தாம்கொண்டே தியானித்தோம் குருபரனே
காலைப் பொழுதினிலே கற்பகத்தாள் பணிகின்றோம்
கச்சியம் பதியோனே கைதூக்கிக் காத்தருள்வாய் !
உலகோர் குறைபொறுத்து குன்றாது வாழ்விக்க
உலகாள் சடையோனின் அவதாரப் பரம்பொருளே
நித்திரை கலைந்தெம்மை திருவடியின் அருள்பெறவே
நற்றிறை நாயகத்துச் சீரருளாய் வாய்த்தவனே
காலைப் பொழுதினிலேகற்பகத்தாள் பணிகின்றோம்
கச்சியம் பதியோனே கைதூக்கிக் காத்தருள்வாய் !
ஒன்றாய் செவ்வுறவாய் கற்பகமாய் தோன்றியநல்
திருவின் திருத்தாளின் அருள்வேண்டிச் சரண்புகுந்தோம்
பலவாய் பல்பொருளாய் பரவெளியில் அருட்புரியும்
திருவின் திருவொளியாய் தரணிபெற்ற ஸ்ரீசரணா
காலைப் பொழுதினிலேகற்பகத்தாள் பணிகின்றோம்
கச்சியம் பதியோனே கைதூக்கிக் காத்தருள்வாய் !
அகமும் புறமுந்தான் அனுதினமும் தூய்தொளிர
அகமும் நின்னுருவாய் நிறைந்தேக அருள்செய்வாய்
அகமும் மகிழ்ந்திடவே அமுதமெனத் திகழ்பவனே
அகமுள் நல்லமுதாய் ஆக்கிடும்உன் அருள்வேண்டி
அனுதினமுந் துதிசெய்தோம் ஆச்சார்ய சங்கரனே!
கச்சியம் பதியோனே கைதூக்கிக் காத்தருள்வாய் !
ஸ்ரீ ஆச்சார்ய பக்தஸ்ரேஷ்டரான “ஸரஸ கவி” ஸ்ரீ லக்ஷ்மீகாந்த சர்மா எனும் மஹானுபாவர் இயற்றிய ப்ராதஸ்மரண பூர்வக கராவலம்ப ஸ்தோத்திரத்தினைத் தழுவியதோர் அருட்பாவாக இதனை எழுதும் பாக்கியம் கிட்டியமைக்கு ஸ்ரீமஹாஸ்வாமிகளின் கமலபாதங்களில் நமஸ்கரிக்கின்றேன்.
- சாணு புத்திரன்.