Post by hemalathak on Jun 22, 2012 19:07:21 GMT 5.5
தெய்வத்தின் குரல் ( முதல் பாகம்)
அத்வைதம்
ஸ்வாமி எதற்கு? அத்வைத அமைதிக்கே
மிகவும் கிரமமாக நடந்துவரும் இந்தப் பிரபஞ்சத்தைச் சிருஷ்டித்து நடத்தி வருகிறவனாக ஒரு கடவுள் இருந்தேயாக வேண்டும் என்பது ஆஸ்திகர்களின் கட்சி. "ஒரு காரியம் செய்தால் அதற்கு ஒரு விளைவு இருந்தே தீருகிறது. இவ்வாறு நம் காரியங்களைப் பார்த்து அதற்குப் பலனைத் தருபவர் அந்த ஆண்டவனே" என்று ஆஸ்திகர் சொல்கிறார்கள். 'இருந்தால் இருக்கட்டுமே, அவனிடம் எதற்காக பக்தி செலுத்த வேண்டும்' என்று கேட்கலாம். "நம்மைக் கேட்டுக் கொண்டா அவன்
நம்மைப் படைத்தான்? அவன் நம்மைப் படைத்தால் நமக்குக் கஷ்டங்கள்தானே இருக்கிறது அவனிடம் பக்தி எதற்கு?" என்று ஆட்சேபிக்கலாம்.
"கஷ்டங்களைத் தீர்க்கவும் அவனால் முடியும். அதற்காக பக்தி செலுத்துங்கள்" என்று ஆஸ்திகர் சொன்னால் மற்றவர்கள் அதையும்
ஆட்சேபிக்கலாம். "நாம் பிரார்த்தனை செய்தால்தான் அவன் கஷ்டத்தைப் போக்குவான் என்றால், உங்கள் ஸ்வாமி நீங்கள் சொல்வதுபோல் கிருபா சமுத்திரமாக இல்லை என்றே அர்த்தம்' எனலாம். 'இன்ன காரியத்துக்கு இன்ன விளைவு என்று அவன்தான் பலனைத் தருகிறான் என்கிறீர்கள். அப்படியானால் நம் பாபத்துக்காக அவனே தண்டனையாகத் கஷ்டத்தைத் தரும்போது, அதை மாற்றும்படி நாம் பிரார்த்தனை செய்யலாமா?' என்றும் கேட்கலாம். மகானாகிய நீலகண்ட தீக்ஷிதர் தம்முடைய 'ஆனந்த ஸாகர ஸ்தவ'த்தில் இதற்குப் பதில் சொல்லுகிறார். 'அம்மா மீனாக்ஷி, உன்னிடம் எதையும் சொல்லவே வேண்டாம். சகலமும் தெரிந்தவள் c. ஆனாலும் உன்னிடம் கஷ்டங்களை வாய் விட்டுச் சொல்லாவிட்டால் மனம் புண்ணாகிறது. வாய்விட்டுச் சொல்லிவிட்டாலே தற்காலிகமாக ஒரு ஆறுதலாக, தெம்பாக இருக்கிறது. அதனாலேயே உனக்கு எல்லாம் தெரிந்திருந்தாலும் நான் என் குறைகளைச் சொல்கிறேன்" என்கிறார்.
கஷ்டங்களைச் சொல்லிக் கொள்ளாமல் யாராலும் இருக்க முடியாது.
வெளிப்படச் சொன்னாலே அதில் ஒரு நிம்மதி பிறக்கிறது. கண்ட இடத்தில் போய்ச் சொல்லிக் கொள்ளாமல் - கேட்பவர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்களோ என்றில்லாம்ல் - பகவானிடம் கஷ்டத்தைச் சொல்லிக் கொள்ளலாம். அவன் கிருபா சமுத்திரமாக இருந்து நாம் கேட்காமலே கஷ்ட நிவருத்தி தந்தாலும் சரி, அல்லது பலனைத் தரும் பலதாதா என்கிற முறையில் நம் பாவத்துக்குத் தண்டித்தே தீருவான் என்றாலும் சரி, அல்லது கஷ்டத்தை மாற்றாமலே அதைத் தாங்கிக் கொள்ளும் பக்குவத்தை நமக்குத் தந்தாலும் சரி, அவனிடம் முறையிட்டுக் கொள்வதே நமக்கு ஒரளவு சாந்தி.
ANNAMALAI GURU ARUNACHALA GURU
ADHVAITHA THATHUVA AANANDA MAYA GURU
GURU GURU GURUVENA GURU PUGAZH PAADUVOM
GURU GURU GURUVENA GURUPADHAM NAADUVOM.
SHREE MAHA PERIAVA THIRUVADIGAL CHARANAM