|
Post by kramans on Jun 21, 2012 21:57:50 GMT 5.5
பக்தி மட்டும் இருந்தால் போதாது! ஒரு அரசன், அவன் மனைவி இருவரும் குருவிடம் உபதேசம் பெற்றனர். உபதேசம் பெறுவதற்கு முன் வரை, தினமும் ஏழை, எளியவர்களுக்கு உணவளித்து, அவர்களை திருப்தி செய்து வந்தான் அந்த அரசன். நிறைய தான, தர்மங்களும் செய்து வந்தான். உபதேசம் பெற்ற போது, “பக்தி தான் முக்கியம்…’ என்று உபதேசித்தார் அந்த குரு. இதைக் கேட்ட அரசன், தான, தர்மம் செய்வதையே விட்டு விட்டான்.
பசி, தாகம் என்று வருபவர்களுக்கு எதுவும் கொடுப்பதில்லை. “ஹரி, ஹரி’ என்று பக்தி செய்து கொண்டிருந்தான். அரசனும், அரசியும் அந்திம காலம் வந்து இறந்தனர்; ஆனால், இவர்களது ஆவி, பசி தாகத்தால் வருந்தியது; ஏழைகளின் பசி தாகம் இவர்களை துரத்தியது.
அப்போது எதிர்பட்ட வாமதேவர் என்ற முனிவரைக் கண்டு வணங்கி, இதன் காரணம் என்னவென்று கேட்டனர். முனிவரும், “நீங்கள் பசியுடன் வந்தவர்களுக்கு உதவாமல், உங்கள் பசியைப் போக்கி உண்டு களித்தீர்கள். ஹரி பக்தி செய்தால் மட்டும் போதாது; ஹரி எல்லா உயிர்களிலும் இருக்கிறார்.
“மற்ற உயிர்களிலுள்ள ஹரியை நீங்கள் நினைக்காமல் பக்தி செய்தீர்கள். துயரப்பட்டவர்களுக்கு உதவாமல், இன்ப வாழ்க்கை அனுபவித்தீர்கள். ஹரி பக்தி என்பது, உங்கள் சுயநலத்துக்காக செய்யப்பட்டதாகிறது. அதனால், பசி, தாகம் என்பவை உங்களைத் தொடர்ந்து வந்து துன்பப்படுத்துகிறது… என்றார்.
பசி தாகத்தால் துன்பப்பட்ட அரசன், அரசி ஆகியோரது ஆவிகள், தங்களது சரீரங்கள் ஆற்றில் மிதந்து வருவதை கண்டு, அதையே புசித்துக் கொண்டிருந்தன. பசித்தவனுக்கு அன்னம் இடாமல் தானே உண்பவன், தன் சடலத்தையே தின்றவனாவான் என்பது நீதி. இதிலிருந்து பக்தி மட்டும் இருந்தால் போதாது; தான, தர்மங்களையும், தன் கடமைகளையும் ஒழுங்காக செய்ய வேண்டும் என்று தெரிகிறதல்லவா?
Sri Kanchi Maha Periva Thiruvadigal Charanam
|
|
|
Post by krsiyer on Jun 22, 2012 16:31:48 GMT 5.5
are baabre ! great story. thanks for sharing jaya jaya sankara, hara hara sankara !
|
|
|
Post by cnupne on Jun 22, 2012 16:52:34 GMT 5.5
ஒரு முறை காஞ்சி ஆச்சார்யர்கள் ஜெயேந்திர சரஸ்வதியுடன் பூனாவில் உள்ள ஹரிஜன் பஸ்தியும் அதற்க்கப்புறம் பணக்கார இருப்பிடம் சிந்த் ஹௌசிங் சொசைட்டி சென்றேன். ஹரிஜன் பஸ்தியில் வெகு பவ்யமாக பக்தியுடன் செவி சாய்த்து கொண்டிருந்தார் ஆனால் அடுத்த சபையில் பக்தி குறைவாகவும் ஆடம்பரம் அதிகமாக தென் பட்டது ஜெயேந்திர சரஸ்வதி சுவாமி அருள் அளித்த மடலிருண்டு வெகு தெளிவாக விட்டது ஹரி ஜன என்றால் ஹரிக்கு மிக பிரியமானவர் ஆகவே அவர்களை ஒதுக்க வேண்டாம் வெறுக்க வேண்டாம். வாழ்க்கைக்கு பக்தி மிக்க அவசியம் ஆனால் பக்தியே வாழ்க்கை ஆகிவிடக்கூடாது . மானிட தர்மத்தை எப்பவுமே நிலை நாட்டவும்
|
|
|
Post by krsiyer on Jun 22, 2012 20:16:37 GMT 5.5
well said member cnupne! jaya jaya sankara, hara hara sankara !
|
|
|
Post by sbalasubramanian on Jun 22, 2012 23:06:43 GMT 5.5
Maha periava thiruvadigal charanam.
Great message. Maha bharadha Karnan also suffers like that we know. ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர!!!!.
|
|