Post by kramans on Jun 21, 2012 12:44:49 GMT 5.5
நீர் இன்றி!
நீர் இன்றி ஒரு உயிரும் நிலைக்காது (வாழ்க்கை நிலை இல்லாவிட்டாலும்). ஒரு உயிர் உடலில் நிலைத்திட, உடல் இயங்கிட, நம் மூளை உரைக்கிற கட்டளைகளை கொண்டு செல்லும் நரம்புகளை பலப்படித்திட, ரத்தத்துடன் கலந்து உடல் முழுவதும் ஓடி உடல் சூட்டை சமன்படுத்தி தன் கடமையை செய்கிறது நீர். நீர் தத்துவம் இல்லாத இடத்தில் ஒரு உயிரும் இல்லாததே இதற்கு சான்று. இது வினஜானத்தின் தீர்ப்பு!
சரி! நாம் அன்மீகதுக்கு வருவோம்! எல்லோருக்கும் தெரியும்! நீர் பஞ்சபூதங்களில் ஒன்று! பஞ்சபூதங்கள் பின் வருகிற வரிசையில் தோன்றியது
முதலில் ஆகாயம் பின்னர் காற்று, நீர், அக்னி கடைசியாக பூமி. நீரினுடைய சக்தி என்பது அளவிடமுடியாது! சின்ன நீரோடையாக ஓடும் போது நமக்குள் இன்பத்தையும், ஆரவாரிக்கும் வெள்ள பெருக்கில் மிகுந்த பயத்தையும் உருவாக்கும். அதே நீர் சுத்தமாக ஓடும் போது கங்கையாகவும் அசுத்தப்பட்டால் சக்கடையாகவும் உருவகப்படுத்தபடுகிறது. ஆனால் நீரினுடைய மூல தத்வம் என்பது எதையும் கழுவி சுத்தபடுத்தி, கழுவப்படும்பொருளின் உண்மை நிலைக்கு அதை திரும்பி கொடுப்பது என்பதாகும். உடலாகட்டும், பொருளாகட்டும் நீரினால் கழுவியபின் உணர்ந்தால் அதன் மூல நிலைக்கு திரும்புவதை உணரலாம். ஆதலால் ஒவ்வொரு முறையும் நீர் நமக்கு அப்படிப்பட்ட மஹா உண்மையை நமக்கு உணர்த்துகிறது. உன் மூல நிலை இதுதான்! அதை உணர்ந்து அதற்கே திரும்பி செல் என்று சொல்லாமல் சொல்கிறது!
அப்படி நம்மை நமக்கு உணர்த்துகிற நீரை நாம் எவ்வளவு புனிதமாக நினைக்கவேண்டும்? எப்படி உபயோகிக்கவேண்டும்?
• குளிக்க தொடங்கும் முன் ஒரு கப் தண்ணீரில் "ஓம்" என்று எழுதினால் அது கங்கை நீராக மாறும். அதில் குளிக்க, அது கைலாச சுத்தியை நமக்கு கொடுக்கும்.
• சாப்பிட தொடங்கும்முன் கொஞ்சம் நீரை கையில் வைத்து "ஏதேனும் மந்திரம்" சொல்லி நீரை அன்னத்தில் தெளித்து சாப்பிட, அந்த அன்னத்தில் நாம் அறியாமல் ஏதேனும் குறை இருந்தால் அது விலகும். அப்படி சாப்பிட அது நல்ல புத்தியை நமக்கு கொடுக்கும்.
• நீர் அருந்தும்போது வலதுகையில் பத்திரத்தை வைத்து அருந்தவேண்டும். வலது கையல் சாப்பிடும் போது, இடது கையால் நீரை அருந்த அனுமதி உள்ளது. அப்படி இடது கையால் நீரை அருந்தும்போது, வலது கையை சாப்பிடும் தட்டில் அல்லது இலையில் வைக்கவேண்டும். அப்படி இன்றி அருந்த்தகூடாது.
• நித்ய பூஜை செய்பவர்கள், லிங்கம், விக்ரகம், சாளிக்ரம் இவைகளுக்கு பெரிதாக ஒன்றும் செய்ய தெரியாவிட்டாலும், ஒரு பாத்திரத்தில் நீர் எடுத்து, அதில் ஒரு வில்வமோ, துளசியோ, கொஞ்சம் விபூதியோ, குங்குமமோ, ஏதேனும் ஒரு புஷ்பமோ, அல்லது சுத்த நீரோ கலந்து அபிஷேகம் செய்தால் அதுவே இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படும். இதனால் தான் கோயில்களில் வேறு எத்தனையோ விதமான வாசனை திரவியங்களை உபயோகித்தாலும் கடைசியில் சுத்த நீரினால் ஒருமுறை அபிஷேகம் செய்வார்கள். அது அந்த சிலையை நிர்குணமாக மாற்றி, அதை பார்ப்பவர்கள் கனிவுக்கு ஏற்ப மாற்றிவிடும்.
• இந்த உலகத்தில் நம் வாசனையால் உருவாகிற பல விதமான குணங்களையும், சுத்த நீர், தன் மென்மையான தன்மையால், நிர்குணமாக மாற்றி இயற்கையின் குணத்திற்கு மாற்றிவிடும்.
• நீர் முற்றிட (மிக குளிர்ந்தாலும், மிக கொதித்தாலும்) கெடுதலையே செய்யும். அது தன்னுள் தேங்கி நிற்கும் குளிரும் சூடும் விலகும்வரை தன்னிலைக்கு வருவதில்லை!
• குளம், நதி, கடல், தடாகம் இவைகளில் குளிக்கவோ, சுத்தம் பண்ணவோ நாம் நினைத்தால், நேரடியாக நம் காலை நீரில் பதிக்காமல் (மிதிக்காமல்), கொஞ்சம் நீரை கையில் எடுத்து கால் கைகளில் சுத்தம் பண்ணியபின் அதிகம் சலனத்தை நீரில் எர்ப்படுத்தாமல், சற்று கனமான பொருள் எப்படி நீரில் முழ்குமோ, அப்படி மூழ்கி குளிக்கவேண்டும்.
• இடுப்பு அல்லது கழுத்து வரை நீரில் நின்று மந்திரம் ஜபம் பண்ண அதன் பலன் இரட்டிப்பாகும். பண்ணி பாருங்கள் அதன் சக்தியை உணர.
• அப்படியானால் குளிக்கும் போது மௌனமாக இருந்து ஏன் மனதினுள் உங்களுக்கு தெரிந்த மந்திரத்தை ஜெபிக்ககூடாது?
• நல்லது நடக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் ஒருபோதும் பஞ்சபூதங்களை த்வேஷம் செய்யாதீர்கள்!
• ஒவ்வொரு துளியும் எவ்வளவு முக்கியம் என்று உணர, சதுரகிரி, வெள்ளியங்கிரி, பர்வதமலை போன்ற புண்ணிய ஸ்தலங்களுக்கு செல்லுங்கள். உங்களுக்கு அதை இறைவன் உணர்த்துவான்! உங்களை நீங்கள் திருத்திகொள்ளலாம்!
Sri Kanchi Maha Periva Thiruvadigal Charanam