|
Post by sbalasubramanian on Jun 20, 2012 23:22:02 GMT 5.5
ýசுவாமிகளை இந்த மாதிரி ராப்பகல் போட்டு பிடுங்கப்படாது' என்று மடத்து காரர்களும் என்னை சுற்றி இருக்கிறவர்களும் ஜனங்களை கோபித்துகொள்கிறார்கள். 'சுவாமிகளுக்கும் சரீரம் இல்லையா? அதற்கு சிரமம் இருக்காதா? என்று சொல்லி (குறை சொல்லிகொள்ள வருகிறவர்களை) தடுக்கிறார்கள், விரட்டிக்கூட அடிக்கிறார்கள்.
இது சரிதானா? என் ஒருத்தனுக்கு சரீர சிரமம் ஏற்படும் என்பதற்காக இத்தனை பேர் மனசில் இருக்கிற ஸ்ரமத்தை, கொதித்து கொண்டு இருக்கிற தவிப்பை சொல்லிக்கொண்டு ஏதோ ஒரு தாபசமனம் அடைவதை தடுப்பது நியாயம் ஆகுமா?
நான் எதற்காக இருக்கிறேன்? இந்த வாழ்க்கை - வாழ்நாள் எதற்காக ஏற்பட்டு இருக்கிறது? ஜனங்களுடைய கஷ்டங்களை கேட்டு ஆறுதல் சொல்வதற்காகத்தான் இந்த வாழ்க்கை ஏற்பட்டு இருக்கிறது. ஜனங்கள் ராவும் பகலும் படுகிற துக்க பாரத்தை லேசாகுவதற்கு தான் இந்த சரீரம் ராவும் பகலும் தன்னால் ஆன உபகாரத்தை செய்ய வேண்டும் என்று ஏற்பட்டு இருக்கிறது.
நான் லேசாக்குகிறேன் அதற்காக ஏதோ பண்ணுகிறேன். பண்ணுகிற சக்தி எனக்கு இருக்கிறது - என்றெல்லாம் இல்லை. ஜனங்கள் தாங்களே தங்களை லேசாக்கி கொள்வதற்கு என்னை ஒரு கருவியாக வைத்து இருக்கிறது என்று சொல்லுகிறேன்.
நன்றி: மைத்ரீம் பஜத புத்தகத்தில் இருந்து, (அண்ணா ஸ்ரீ. ரா. கணபதி அவர்கள் எழுதியது).
|
|
|
Post by krsiyer on Jun 21, 2012 16:15:49 GMT 5.5
what a define thought of Maha Periva ! thanks for sharing. jaya jaya sankara, hara hara sankara !
|
|