Post by kramans on Jun 19, 2012 20:19:51 GMT 5.5
அஷ்டதிக் பாலகர்!
பொதுவாக மக்கள் செய்கின்ற நற்காரியங்களையும் தீயகாரியங்களையும் ஆதித்யன், சந்திரன், அஷ்டதிக் பாலகர்கள் கண்காணித்துக் கொண்டு அச்செயல்களுக்கு ஸாக்ஷியாக இருக்கின்றனர் என மஹாபாரதம் சொல்லும். எனவே மனிதன், தர்ம வடிவாயமைந்த அவர்களுடைய அருளைப் பெறுவதற்கும் தீயவற்றை யகற்றி, நற்காரியங்களைச் செய்து வந்தால் எல்லா மங்களங்களையும் பெறுகின்றான் என்பது அச்செய்யுளின் கருத்தாகும். அஷ்டதிக் பாலகர்களைத் துதிப்பதால் எல்லா நிறைவுகளையும் பெறலாம்.
இந்திரன்
இந்திரன் - இவரை உபாசிப்பதால் மக்கள் ஐச்வர்யத்தையும் ஸூகத்தையும் பெறுகின்றனர்.
இவரது த்யான ஸ்லோகம்!
ஐராவத கஜாரூடம்
ஸ்வர்ணவர்ணம் கிரீடிநம்
ஸகஸ்ர நயநம் ஸக்ரம்
வஜ்ரபாணிம் விபாவயேத்
அக்நி
அக்நி- இவரை உபாசித்து ஒளி மிக்க திருமேனியைப் பெறுவதோடு, நற்பயன்களையும் அடையலாம்.
இவரது த்யான ஸ்லோகம்!
ஸப்தார்சிஷம் ச பிப்ராணம்
அக்ஷமாலாம் கமண்டலும்
ஜ்வாலாமாலாகுலம் ரக்தம்
ஸக்திஹஸ்தம் சகாஸநம்
யமன்
யமன்- இவரை உபாசித்து தீவினைப் பயனை அகற்றி, நல்வினைப் பயனைப் பெற்று விளங்கலாம். இவர் தர்மத்தின் வடிவம்.
இவரது த்யான ஸ்லோகம்!
க்ருதாந்தம் மஹிஷாரூடம்
தண்டஹஸ்தம் பயாநகம்
காலபாஸதரம் க்ருஷ்ணம்
த்யாயேத் தக்ஷிணதிக்பதிம்
நிர்ருதி
நிர்ருதி - இவரை உபசிப்பதால் பகைவர்கள் பயம் விலகும்.
இவரது த்யான ஸ்லோகம்!
ரக்தநேத்ரம் ஸவாரூடம்
நீலோத்பல தளப்ரபம்
க்ருபாணபாணி மாஸ்ரௌகம்
பிபந்தம் ராக்ஷஸேஸ்வரம்
வருணன்
வருணன் - இவர் மழையைப் பொழிந்து பயிர்களை வளரச் செய்து மக்களுக்குக் களிப்பை உண்டுபண்ணி ஸூகத்தைக் கொடுப்பவர்.
இவரது த்யான ஸ்லோகம்!
நாகபாஸதரம் ஹ்ருஷ்டம்
ரக்தௌகத்யுதி விக்ரஹம்
ஸஸாங்க தவளம் த்யாயேத்
வருணம் மகராஸநம்
வாயு
வாயு- இவர் வடிவமட்ட்றவர். மக்களுடைய ப்ராணணுக்கு ஆதாரமாய் உள்ளவர். இவரை உபாசிப்பதால் நீண்ட ஆயுளையும், பலத்தையும் பெறலாம்.
இவரது த்யான ஸ்லோகம்!
ஆபீதம் ஹரிதச்சாயம்
விலோலத்வஜ தாரிணம்
ப்ராணபூதம்ச பூதாநாம்
ஹரிணஸ்தம் ஸமீரணம்
குபேரன்
குபேரன் மக்களுக்கு ஸூகத்தைக் கொடுத்து ஸம்பத்தையும் செல்வத்தையும் வளரச் செய்பவர்.
இவரது த்யான ஸ்லோகம்!
குபேரம் மநுஜாஸீநம்
ஸகர்வம் கர்வவிக்ரஹம்
ஸ்வர்ணச்சாயம் கதாஹஸ்தம்
உத்தராதிபதிம் ஸ்மரேத்
ஈசாநன்
ஈசாநன் - இவர் மங்கள வடிவினன். இவர் மக்களுக்கு அறிவை வளரச் செய்து ஞானத்தைப் பெருக்கி விடுதலையைக் கொடுப்பவர்.
இவரது த்யான ஸ்லோகம்!
ஈஸாநம் வ்ருஷபாரூடம்
த்ரிஸூலம் வ்யாலதாரிணம்
சரச்சந்த்ர ஸமாகாரம்
த்ரிநேத்ரம் நீலகண்டகம்
Sri Kanchi Maha Periva Thiruvadigal Charanam