Post by radha on Jun 16, 2012 4:39:01 GMT 5.5
OM GURUPYO NAMAHA:,RESPECTFUL PRANAMS TO SRI KANCHI PERIVA
கருணை தெய்வம் காஞ்சி மகான் (23)
‘காமாட்சிதாசன்’ சீனிவாசன், கிரகஸ்தர்தான். ஆனால் முறையே வருமானம் ஏதும் தொடர்ந்து வருவதில்லை. அதேநேரம், கடந்த 50 வருடங்களாக, தினசரி பூஜைக்கு ஒரு குறையும் இல்லை!
தேவி மகாத்மியம் பாராயணம் (700 ஸ்லோகம்), ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் (300 ஸ்லோகம்) மற்றும் நவாவர்ண அர்ச்சனை, ஸ்ரீமடத்தில் செய்வது போலவே ஸ்ரீருத்ரம், சமகம், தினமும் மூன்று கால பூஜை என அமர்க்களப்படும், அவரின் இல்லம்.
அவரின் வீடு ஸ்ரீகாமாட்சியின் அருளால் நிரம்பியிருந்தது; அவரின் மனம் பெரியவாளின் நினைவுகளிலேயே மூழ்கியிருந்தது. உணர்ச்சி மேலிட, சம்பவம் ஒன்றை நினைவுகூர்ந்தார் காமாட்சிதாசன் சீனிவாசன்…
”ஒருமுறை, உத்தமதானபுரத்துக்கு ஒன்பது சந்நியாசிகள் வந்திருந்தாங்க. அவங்க எல்லாருமே கையில் தண்டம் வைச்சிருப்பாங்க. சந்நியாசிகளின் அனுஷ்டானங்களில், தண்டம் வைச்சுக்கறதும் ஒண்ணு. அது சாதுர்மாஸ்ய காலம்! ஒன்பது சந்நியாசிகளும், மத்தியான நேரத்துல அம்பாளைத் தரிசனம் பண்றதுக்காக வந்தாங்க.
‘எங்களை மகாபெரியவா அனுப்பிச்சு வைச்சார். ‘சின்ன பையன் ஒருத்தனுக்குப் பூஜை பண்ணி வைச்சிருக்கேன். உங்களுக்கு ஏதோ சந்தேகம்னு சொன்னேளே, அவன்கிட்ட கேளுங்கோ, நிவர்த்தி பண்ணி வைப்பான்’னு அவர் சொன்னார்’ன்னாங்க.
எனக்குத் தூக்கிவாரிப் போட்டுச்சு. சின்னவனான எங்கிட்ட, இந்த சந்நியாசிகளைப் பெரியவா அனுப்பி வைச்சிருக்காரேன்னு பயம் வந்துடுச்சு! இருந்தாலும், ‘என்ன சந்தேகம்? கேளுங்கோ’ன்னேன்.
அவர்கள் தங்களது சந்தேகத்தைச் சொன்னார்கள். ஆனால், அவர்கள் என்ன கேட்டார்கள்; நான் என்ன பதில் சொன்னேன்னு எதுவுமே எனக்கு நினைவில்லை! ஏதோ, மனப்பாடம் பண்ணி கடகடன்னு ஒப்பிக்கற பள்ளிச்சிறுவன் மாதிரி, தடதடன்னு பதில் சொல்லிட்டேன்.
அப்புறம் அந்த ஒன்பது சந்நியாசிகளும், பெரியவாகிட்டப் போய், நான் சொன்ன பதில்களைச் சொல்லியிருக்கா. ‘எங்களுக்குப் பரம திருப்தி’ன்னு காஞ்சி மகானை நமஸ்காரம் பண்ணியிருக்கா.
இது எதுவுமே தெரியாம, அடுத்த மாசம் பெரியவாளைத் தரிசனம் பண்றதுக்காகப் போயிருந்தேன். அப்ப பெரியவா, ‘உன்னைப் பார்க்கச் சொல்லி, ஒன்பது சந்நியாசிகளை அனுப்பி வைச்சேனே! உன்னை வந்து பார்த்தாளா?’ன்னு கேட்டார்.
எனக்கு உடம்பே நடுங்கிடுச்சு. தப்பா எதுவும் உளறிக் கொட்டிட்டோமோன்னு புரியாம மலங்க மலங்க முழிச்சேன். ‘ஆமாம் பெரியவா… வந்திருந்தாங்க; அவங்க கேட்டதுக்குப் பதிலும் சொன்னேன், பெரியவா’ன்னு திக்கித் திக்கிச் சொன்னேன்.
‘அவா எல்லாரும் இங்கே வந்து, நீ சொன்னதையெல்லாம் எங்கிட்ட தெரிவிச்சா. சரியாத்தான் சொல்லியிருக்கே! உனக்குக் காமாட்சியோட அனுக்கிரகம் இருக்கு. நீ எப்படித் தப்பா சொல்லுவே? சரியாத்தான் சொல்லுவே!’ன்னு மெள்ளச் சிரிச்ச பெரியவா, கைதூக்கி ஆசீர்வாதம் பண்ணினார். அப்படியே சிலிர்த்துப் போச்சு உடம்பு!” எனக் கண்களில் ஆச்சரியம் பொங்க விவரித்தவர், இன்னொரு சம்பவத்தையும் தெரிவித்தார்.
Sri Kanchi Maha Periva Thiruvadigal Charanam
கருணை தெய்வம் காஞ்சி மகான் (23)
‘காமாட்சிதாசன்’ சீனிவாசன், கிரகஸ்தர்தான். ஆனால் முறையே வருமானம் ஏதும் தொடர்ந்து வருவதில்லை. அதேநேரம், கடந்த 50 வருடங்களாக, தினசரி பூஜைக்கு ஒரு குறையும் இல்லை!
தேவி மகாத்மியம் பாராயணம் (700 ஸ்லோகம்), ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் (300 ஸ்லோகம்) மற்றும் நவாவர்ண அர்ச்சனை, ஸ்ரீமடத்தில் செய்வது போலவே ஸ்ரீருத்ரம், சமகம், தினமும் மூன்று கால பூஜை என அமர்க்களப்படும், அவரின் இல்லம்.
அவரின் வீடு ஸ்ரீகாமாட்சியின் அருளால் நிரம்பியிருந்தது; அவரின் மனம் பெரியவாளின் நினைவுகளிலேயே மூழ்கியிருந்தது. உணர்ச்சி மேலிட, சம்பவம் ஒன்றை நினைவுகூர்ந்தார் காமாட்சிதாசன் சீனிவாசன்…
”ஒருமுறை, உத்தமதானபுரத்துக்கு ஒன்பது சந்நியாசிகள் வந்திருந்தாங்க. அவங்க எல்லாருமே கையில் தண்டம் வைச்சிருப்பாங்க. சந்நியாசிகளின் அனுஷ்டானங்களில், தண்டம் வைச்சுக்கறதும் ஒண்ணு. அது சாதுர்மாஸ்ய காலம்! ஒன்பது சந்நியாசிகளும், மத்தியான நேரத்துல அம்பாளைத் தரிசனம் பண்றதுக்காக வந்தாங்க.
‘எங்களை மகாபெரியவா அனுப்பிச்சு வைச்சார். ‘சின்ன பையன் ஒருத்தனுக்குப் பூஜை பண்ணி வைச்சிருக்கேன். உங்களுக்கு ஏதோ சந்தேகம்னு சொன்னேளே, அவன்கிட்ட கேளுங்கோ, நிவர்த்தி பண்ணி வைப்பான்’னு அவர் சொன்னார்’ன்னாங்க.
எனக்குத் தூக்கிவாரிப் போட்டுச்சு. சின்னவனான எங்கிட்ட, இந்த சந்நியாசிகளைப் பெரியவா அனுப்பி வைச்சிருக்காரேன்னு பயம் வந்துடுச்சு! இருந்தாலும், ‘என்ன சந்தேகம்? கேளுங்கோ’ன்னேன்.
அவர்கள் தங்களது சந்தேகத்தைச் சொன்னார்கள். ஆனால், அவர்கள் என்ன கேட்டார்கள்; நான் என்ன பதில் சொன்னேன்னு எதுவுமே எனக்கு நினைவில்லை! ஏதோ, மனப்பாடம் பண்ணி கடகடன்னு ஒப்பிக்கற பள்ளிச்சிறுவன் மாதிரி, தடதடன்னு பதில் சொல்லிட்டேன்.
அப்புறம் அந்த ஒன்பது சந்நியாசிகளும், பெரியவாகிட்டப் போய், நான் சொன்ன பதில்களைச் சொல்லியிருக்கா. ‘எங்களுக்குப் பரம திருப்தி’ன்னு காஞ்சி மகானை நமஸ்காரம் பண்ணியிருக்கா.
இது எதுவுமே தெரியாம, அடுத்த மாசம் பெரியவாளைத் தரிசனம் பண்றதுக்காகப் போயிருந்தேன். அப்ப பெரியவா, ‘உன்னைப் பார்க்கச் சொல்லி, ஒன்பது சந்நியாசிகளை அனுப்பி வைச்சேனே! உன்னை வந்து பார்த்தாளா?’ன்னு கேட்டார்.
எனக்கு உடம்பே நடுங்கிடுச்சு. தப்பா எதுவும் உளறிக் கொட்டிட்டோமோன்னு புரியாம மலங்க மலங்க முழிச்சேன். ‘ஆமாம் பெரியவா… வந்திருந்தாங்க; அவங்க கேட்டதுக்குப் பதிலும் சொன்னேன், பெரியவா’ன்னு திக்கித் திக்கிச் சொன்னேன்.
‘அவா எல்லாரும் இங்கே வந்து, நீ சொன்னதையெல்லாம் எங்கிட்ட தெரிவிச்சா. சரியாத்தான் சொல்லியிருக்கே! உனக்குக் காமாட்சியோட அனுக்கிரகம் இருக்கு. நீ எப்படித் தப்பா சொல்லுவே? சரியாத்தான் சொல்லுவே!’ன்னு மெள்ளச் சிரிச்ச பெரியவா, கைதூக்கி ஆசீர்வாதம் பண்ணினார். அப்படியே சிலிர்த்துப் போச்சு உடம்பு!” எனக் கண்களில் ஆச்சரியம் பொங்க விவரித்தவர், இன்னொரு சம்பவத்தையும் தெரிவித்தார்.
Sri Kanchi Maha Periva Thiruvadigal Charanam