Post by radha on Jun 15, 2012 7:40:15 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA:,RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA.
கே: சென்னையில் உள்ள உங்கள் குருகிருபா பள்ளியைப் பற்றிக் கூற முடியுமா?
ப: காஞ்சி மகா பெரியவரின் ஆசியுடன் அவருடைய ஆன்மீக சிந்தனைகளையும் இசையுடன் சேர்த்துப் பரப்ப எண்ணி ஆரம்பிக்கப்பட்ட பள்ளி அது. இசையை வியாபார நோக்கோடு இல்லாமல் ஆத்மார்த்த மாக பக்தி மார்க்கத்தைப் பரப்ப வேண்டும் என்று அவர் சொன்னதை ஏற்றுக் கோயில்களில் மாணவர்களை பாடச் செய்வது, ஏழை மாணவர்களுக்கு இலவசமாக இசையைக் கற்றுக்கொடுப்பது என்று செய்து வருகிறோம். என்னைப்போல் பலருக்கும் அவரே மாதா, பிதா, குரு, தெய்வமாகவும் இருக்கிறார் என்பது பலரும் அறிந்ததுதான். அவர் எழுதிய தெய்வத்தின் குரலில் கூறியுள்ளபடி கடவுள் என்னை இசையின் மூலம் ஆன்மீகத்தைப் பரப்பச் சொல்லியுள்ளதாய் நினைத்துச் செய்து வருகிறேன்.
கே: Fusion Music என்று எதிர் துருவமாக இருக்கும் இரு இசைகளை இணைத்து வழங்க முயற்சிப்பது பற்றி தங்கள் கருத்து என்ன? அதை நீங்கள் வரவேற்கிறீர்களா?
ப: நிச்சயமாக. நான்கூட ப்ரஸல்ஸ் நாட்டில் ஒரு முறை இதை முயற்சி செய்துபார்த்தேன். நம் பாரம்பரியமிக்க கர்னாடக இசை உலகம் முழுதும் சென்றடைய அது சிறந்த வழி என்றும் கூறலாம். நம் நாட்டில் இருந்து மற்றவர்களுக்கு அள்ளி வழங்கக் கூடிய செல்வங்கள் என்னவென்றால் கலையும் கலாச்சாரமும்தான். அதனால் அவரவருக்குப் பிடித்தமான இசை வழியாகப் பற்பல நுணுக்கங்கள் நிறைந்த கர்னாடக இசையையும் சேர்த்து வழங்குவதால் கர்னாடக இசையின் பெருமை உயருமே தவிரக் குறையாது.
கே: ஒரு பாடகர் தன் கச்சேரிக்கு செல்லும் பொழுது அன்றைக்குப் பாட வேண்டிய பாடல்களுக்கான ஒரு திட்டத்துடன் செல்வார் இல்லையா? அப்படி இருக்க, ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த பாடலுக்கான சீட்டைக் கொடுத்துப் பாடச் சொல்வது சரியா?
ப: அது தவறு என்று கூற முடியாது. ஒரு நல்ல இசை வித்தகருக்கு அழகு, மேடை ஏறிய பத்து நிமிடங்களிலேயே அன்றைய ரசிகர்களின் ரசனை நாடியைப் பிடித்து விடுவதுதான். அதற்கேற்பத் தனது திட்டங்களை உடனுக்குடன் மாற்றிக் கொண்டு சபையறிந்து பாடுவதிலேயே கச்சேரியின் பாதி வெற்றி கிடைத்து விடுகிறது. ரசிகர்களின் நெஞ்சைக் கொள்ளை கொள்ளும் முதல் வழி அடிப்படைகள் மாறாமல் செய்யும் இந்தச் சின்ன தீர்க்க தரிசனம்தான். என்னையும் என் பாட்டையும் பிடித்திருக்கிறது என எனக்கு அறியச் செய்யும் வகையில் சீட்டு அனுப்பும் ரசிகர்களை மகிழ்விப்பதும் எங்கள் கடமையே!
கே: உங்கள் கச்சேரிகளில் அதிகமாகத் தமிழ்ப் பாடல்களும், முக்கியமாகத் திருப்புகழும் பாடக் காரணம் என்ன?
ப: சிறு வயதிலிருந்தே திருப்புகழில் எனக்கு நிறைய ஈடுபாடு. திருப்புகழ் என் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்த ஒன்று என்று சொன்னால் மிகையல்ல. என் கனவில் ஒருமுறை மகாப் பெரியவர் தோன்றி திருப்புகழை விடாமல் பாடுமாறு கூறினார். திருப்புகழை மனமுருகிப் பாடும் பல நேரங்களில் எனக்குப் பல நன்மைகள் ஏற்பட்டதுண்டு. வடபழனி கோயிலின் திருப்புகழ் சபாவில் வருடந்தோறும் இசை நிகழ்ச்சி நடத்தும் பொறுப்பு என்னைத் தேடி வந்தது. என் இசையின் இரு கண்கள் தேவாரமும் திருப்புகழும் தான். அடுத்த முறை அமெரிக்கா வரும் பொழுது திருப்புகழ் பிரச்சாரம் ஒன்று செய்யவேண்டும் என்றுகூட நினைத்திருக்கிறேன்.
மேலும், நாம் அறிந்த மொழியில் பக்தி செய்வது சுலபமல்லவா? மும்மூர்த்திகளின் வழியில் வந்த இசையைப் பாடும்பொழுது அதில் நம் தாய் மொழியையும் கலந்து விட்டால் அந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை என்பது அனுபவித்துப் பார்க்க வேண்டிய ஒன்று. நம் ரத்தத்தில் ஊறிய மொழியில் பாடுவது இயல்பாகவும் அமையும். நம் மக்களின் சிலர் கர்னாடக இசை நமக்கான ஒன்றல்ல என்று ஒதுங்கிவிட்டனர். அவர்களையும் இத்துறைக்கு ஈர்க்கத் தமிழ்ப்பாடல்கள் உதவுகின்றன. பல கிராமங்களில் கூட என் தமிழ்ப்பாடல்களுக்கு ரசிகர்கள் இருப்பதாய் வந்து கூறும் பொழுது மகிழ்ச்சி பொங்குகிறது.
கே: இந்த சங்கீத சாகரத்தில் நீங்கள் இன்னும் என்ன சாதிக்க விரும்புகிறீர்கள்?
ப: சொல்லப் போனால் டிசம்பர் மாதத்தில் ஒவ்வொரு சபாவாக சென்று பாடிக் கொண்டிருப்பதில் தற்பொழுது ஒரு சின்னச் சலிப்பு கூட ஏற்படுகிறது. அதனால் இனி செய்யப் போகும் நிகழ்ச்சிகளை மற்றவருக்கு உதவும்படியோ அல்லது தர்ம காரியத்துக் காகவோ செய்ய நினைத்திருக்கிறேன். கேளிக்கையைவிட ஞானம்தான் அதிகம் தேவை (enlightenment is more required than entertainment) என்று வரவரத் தோன்ற ஆரம்பித்து உள்ளது. வாழ்க்கையின் கலாச்சாரத்திற்கும் இசைக்கும் தொடர்பு உண்டு என்பதை இளைய தலைமுறைக்கு எடுத்துக் கூறுவதே நான் செய்ய வேண்டிய முதல் கடமையாக நினைக்கிறேன்.
பேராசையும், அதிகப்படியான தேடல்களும் என்னை நெருங்கி விடாமல் இருக்க வேண்டும் எனக் கண்ணும் கருத்துமாக இருக்கிறேன். எழுத்தாளர் சுஜாதா ஒருமுறை என்னிடம் பேசிக் கொண்டிருந்த பொழுது தான் எழுதும் அடுத்த படத்தில் என்னைப் பாடச் சொல்லிக் கேட்டார். நான் போடும் உடைக்குக் கொஞ்சம் கூட பொருந்தாத உலகம் அது என்று கூறி மறுத்து விட்டேன்.
கே: அமெரிக்க இசை ரசிகர்களுக்கும் தென்றல் வாசகர்களுக்கும் தாங்கள் கூற விரும்புவது?
ப: அமெரிக்காவில் உள்ளவர்களின் இசை ஆர்வத்தை காணும்பொழுது எதிர்காலத்தில் பல இசை மேதைகள் இங்கிருந்தும் தோன்றக் கூடும் என்று நம்பத் தோன்றுகிறது. அதுவும் இந்த நாட்டில் குடியிருப்புப் பகுதிகளில் தெருக்களில் உள்ள அமைதியைக் காணும் பொழுது இங்கு இசையை வளர்ப்பது சுலபம் என்றே தோன்றுகிறது.
நம்மைப் படைத்த இறைவனின் கருணையின் எல்லைதான் இசை. அது தனிமனிதச் சொத்தல்ல. அனைவருக்கும் சொந்தம். குரல் வளமிருப்போர் ஒரு நல்ல குருவை அணுகி இசையை கற்றுக் கொண்டு, இசைக்கான மரியாதையைக் காக்க வேண்டும். நம் முன்னோர்களிடமிருந்து இசை நமக்கு நல்ல முறையில் வந்ததைப் போல் நாமும் நமது அடுத்த தலைமுறைக்கு அதைப் பத்திரமாகக் கொண்டு சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
சந்தித்து உரையாடியவர்: லதா ஸ்ரீனிவாசன்
நன்றி – தென்றல் மாத இதழ் – செப்டம்பர் 2003
Sri Kanchi Maha Periva Thiruvadigal Charanam
கே: சென்னையில் உள்ள உங்கள் குருகிருபா பள்ளியைப் பற்றிக் கூற முடியுமா?
ப: காஞ்சி மகா பெரியவரின் ஆசியுடன் அவருடைய ஆன்மீக சிந்தனைகளையும் இசையுடன் சேர்த்துப் பரப்ப எண்ணி ஆரம்பிக்கப்பட்ட பள்ளி அது. இசையை வியாபார நோக்கோடு இல்லாமல் ஆத்மார்த்த மாக பக்தி மார்க்கத்தைப் பரப்ப வேண்டும் என்று அவர் சொன்னதை ஏற்றுக் கோயில்களில் மாணவர்களை பாடச் செய்வது, ஏழை மாணவர்களுக்கு இலவசமாக இசையைக் கற்றுக்கொடுப்பது என்று செய்து வருகிறோம். என்னைப்போல் பலருக்கும் அவரே மாதா, பிதா, குரு, தெய்வமாகவும் இருக்கிறார் என்பது பலரும் அறிந்ததுதான். அவர் எழுதிய தெய்வத்தின் குரலில் கூறியுள்ளபடி கடவுள் என்னை இசையின் மூலம் ஆன்மீகத்தைப் பரப்பச் சொல்லியுள்ளதாய் நினைத்துச் செய்து வருகிறேன்.
கே: Fusion Music என்று எதிர் துருவமாக இருக்கும் இரு இசைகளை இணைத்து வழங்க முயற்சிப்பது பற்றி தங்கள் கருத்து என்ன? அதை நீங்கள் வரவேற்கிறீர்களா?
ப: நிச்சயமாக. நான்கூட ப்ரஸல்ஸ் நாட்டில் ஒரு முறை இதை முயற்சி செய்துபார்த்தேன். நம் பாரம்பரியமிக்க கர்னாடக இசை உலகம் முழுதும் சென்றடைய அது சிறந்த வழி என்றும் கூறலாம். நம் நாட்டில் இருந்து மற்றவர்களுக்கு அள்ளி வழங்கக் கூடிய செல்வங்கள் என்னவென்றால் கலையும் கலாச்சாரமும்தான். அதனால் அவரவருக்குப் பிடித்தமான இசை வழியாகப் பற்பல நுணுக்கங்கள் நிறைந்த கர்னாடக இசையையும் சேர்த்து வழங்குவதால் கர்னாடக இசையின் பெருமை உயருமே தவிரக் குறையாது.
கே: ஒரு பாடகர் தன் கச்சேரிக்கு செல்லும் பொழுது அன்றைக்குப் பாட வேண்டிய பாடல்களுக்கான ஒரு திட்டத்துடன் செல்வார் இல்லையா? அப்படி இருக்க, ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த பாடலுக்கான சீட்டைக் கொடுத்துப் பாடச் சொல்வது சரியா?
ப: அது தவறு என்று கூற முடியாது. ஒரு நல்ல இசை வித்தகருக்கு அழகு, மேடை ஏறிய பத்து நிமிடங்களிலேயே அன்றைய ரசிகர்களின் ரசனை நாடியைப் பிடித்து விடுவதுதான். அதற்கேற்பத் தனது திட்டங்களை உடனுக்குடன் மாற்றிக் கொண்டு சபையறிந்து பாடுவதிலேயே கச்சேரியின் பாதி வெற்றி கிடைத்து விடுகிறது. ரசிகர்களின் நெஞ்சைக் கொள்ளை கொள்ளும் முதல் வழி அடிப்படைகள் மாறாமல் செய்யும் இந்தச் சின்ன தீர்க்க தரிசனம்தான். என்னையும் என் பாட்டையும் பிடித்திருக்கிறது என எனக்கு அறியச் செய்யும் வகையில் சீட்டு அனுப்பும் ரசிகர்களை மகிழ்விப்பதும் எங்கள் கடமையே!
கே: உங்கள் கச்சேரிகளில் அதிகமாகத் தமிழ்ப் பாடல்களும், முக்கியமாகத் திருப்புகழும் பாடக் காரணம் என்ன?
ப: சிறு வயதிலிருந்தே திருப்புகழில் எனக்கு நிறைய ஈடுபாடு. திருப்புகழ் என் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்த ஒன்று என்று சொன்னால் மிகையல்ல. என் கனவில் ஒருமுறை மகாப் பெரியவர் தோன்றி திருப்புகழை விடாமல் பாடுமாறு கூறினார். திருப்புகழை மனமுருகிப் பாடும் பல நேரங்களில் எனக்குப் பல நன்மைகள் ஏற்பட்டதுண்டு. வடபழனி கோயிலின் திருப்புகழ் சபாவில் வருடந்தோறும் இசை நிகழ்ச்சி நடத்தும் பொறுப்பு என்னைத் தேடி வந்தது. என் இசையின் இரு கண்கள் தேவாரமும் திருப்புகழும் தான். அடுத்த முறை அமெரிக்கா வரும் பொழுது திருப்புகழ் பிரச்சாரம் ஒன்று செய்யவேண்டும் என்றுகூட நினைத்திருக்கிறேன்.
மேலும், நாம் அறிந்த மொழியில் பக்தி செய்வது சுலபமல்லவா? மும்மூர்த்திகளின் வழியில் வந்த இசையைப் பாடும்பொழுது அதில் நம் தாய் மொழியையும் கலந்து விட்டால் அந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை என்பது அனுபவித்துப் பார்க்க வேண்டிய ஒன்று. நம் ரத்தத்தில் ஊறிய மொழியில் பாடுவது இயல்பாகவும் அமையும். நம் மக்களின் சிலர் கர்னாடக இசை நமக்கான ஒன்றல்ல என்று ஒதுங்கிவிட்டனர். அவர்களையும் இத்துறைக்கு ஈர்க்கத் தமிழ்ப்பாடல்கள் உதவுகின்றன. பல கிராமங்களில் கூட என் தமிழ்ப்பாடல்களுக்கு ரசிகர்கள் இருப்பதாய் வந்து கூறும் பொழுது மகிழ்ச்சி பொங்குகிறது.
கே: இந்த சங்கீத சாகரத்தில் நீங்கள் இன்னும் என்ன சாதிக்க விரும்புகிறீர்கள்?
ப: சொல்லப் போனால் டிசம்பர் மாதத்தில் ஒவ்வொரு சபாவாக சென்று பாடிக் கொண்டிருப்பதில் தற்பொழுது ஒரு சின்னச் சலிப்பு கூட ஏற்படுகிறது. அதனால் இனி செய்யப் போகும் நிகழ்ச்சிகளை மற்றவருக்கு உதவும்படியோ அல்லது தர்ம காரியத்துக் காகவோ செய்ய நினைத்திருக்கிறேன். கேளிக்கையைவிட ஞானம்தான் அதிகம் தேவை (enlightenment is more required than entertainment) என்று வரவரத் தோன்ற ஆரம்பித்து உள்ளது. வாழ்க்கையின் கலாச்சாரத்திற்கும் இசைக்கும் தொடர்பு உண்டு என்பதை இளைய தலைமுறைக்கு எடுத்துக் கூறுவதே நான் செய்ய வேண்டிய முதல் கடமையாக நினைக்கிறேன்.
பேராசையும், அதிகப்படியான தேடல்களும் என்னை நெருங்கி விடாமல் இருக்க வேண்டும் எனக் கண்ணும் கருத்துமாக இருக்கிறேன். எழுத்தாளர் சுஜாதா ஒருமுறை என்னிடம் பேசிக் கொண்டிருந்த பொழுது தான் எழுதும் அடுத்த படத்தில் என்னைப் பாடச் சொல்லிக் கேட்டார். நான் போடும் உடைக்குக் கொஞ்சம் கூட பொருந்தாத உலகம் அது என்று கூறி மறுத்து விட்டேன்.
கே: அமெரிக்க இசை ரசிகர்களுக்கும் தென்றல் வாசகர்களுக்கும் தாங்கள் கூற விரும்புவது?
ப: அமெரிக்காவில் உள்ளவர்களின் இசை ஆர்வத்தை காணும்பொழுது எதிர்காலத்தில் பல இசை மேதைகள் இங்கிருந்தும் தோன்றக் கூடும் என்று நம்பத் தோன்றுகிறது. அதுவும் இந்த நாட்டில் குடியிருப்புப் பகுதிகளில் தெருக்களில் உள்ள அமைதியைக் காணும் பொழுது இங்கு இசையை வளர்ப்பது சுலபம் என்றே தோன்றுகிறது.
நம்மைப் படைத்த இறைவனின் கருணையின் எல்லைதான் இசை. அது தனிமனிதச் சொத்தல்ல. அனைவருக்கும் சொந்தம். குரல் வளமிருப்போர் ஒரு நல்ல குருவை அணுகி இசையை கற்றுக் கொண்டு, இசைக்கான மரியாதையைக் காக்க வேண்டும். நம் முன்னோர்களிடமிருந்து இசை நமக்கு நல்ல முறையில் வந்ததைப் போல் நாமும் நமது அடுத்த தலைமுறைக்கு அதைப் பத்திரமாகக் கொண்டு சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
சந்தித்து உரையாடியவர்: லதா ஸ்ரீனிவாசன்
நன்றி – தென்றல் மாத இதழ் – செப்டம்பர் 2003
Sri Kanchi Maha Periva Thiruvadigal Charanam