Post by radha on Jan 29, 2016 6:26:13 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA
சமூகம் » ஆனந்த ஜோதி in TAMIL HINDU
Published: January 28, 2016
தெய்வத்தின் குரல்: உபகாரப் பணியிலும் அபகாரம்
யுத்த காரியந்தானென்றில்லை, ரொம்பவும் சாத்விகமாக ஒரு நல்லது செய்யப் போனால்கூட ஒருத்தருக்கு உபகாரமென்று செய்வது, வேறு யாராவது ஒருத்தருக்கு ஏதாவது அபகாரம் செய்துவிடுகிறது.
நான் ஒன்று நினைத்துக் கொள்வதுண்டு, மில் துணி பகிஷ்காரம் பண்ணிக் கதரை அபிவிருத்தி பண்ண வேண்டுமென்று காந்தி தீவிரமாக இருந்த காலம். சீமையிலிருந்துதான் அப்போது மில் துணி வரும். ஆகையினால் மில் துணி பகிஷ்காரம் என்பதில், ‘ஒரு கல்லில் இரண்டு மாங்காய்' என்கிற மாதிரி இரண்டு லட்சியங்கள் பூர்த்தி ஆயின. சுதேசியத்தை ஆதரித்து விதேசியத்தை பகிஷ்கரிப்பது என்பது ஒன்று. Man-power -ஐ (மனித சக்தியை) ஆதரித்து மெஷின் பவரை எதிர்ப்பது என்பது இன்னொன்று.
இந்தக் கொள்கைகளில் எனக்கும் அபிமானம் உண்டு. அப்போது ராமேசுவர யாத்திரை போயிருந்தோம். இந்த நல்ல சமயத்தில் மடத்துச் சிப்பந்திகளையெல்லாம் ஆலைத் துணியை விட்டுவிட்டுக் கதர் உடுத்தும் பழக்கத்தை மேற்கொள்ளச் செய்ய வேண்டும் என்று தோன்றிற்று. அக்காலத்திலே அங்கங்கே மில் துணிகளைச் சொக்கப்பானை மாதிரி கொளுத்தி சுதேசி அபிமானிகள் விழா நடத்துவது வழக்கம்.
எனக்கென்னவோ, அசேதனமான துணிதான் என்றாலும் அதைக்கூட நெருப்பில் போட்டுக் கொளுத்துவது என்றால் இம்சை மாதிரி தோன்றிற்று. இப்படியில்லாமல், சாத்விகமாக, குளிர்ச்சியாக, ‘ஜலசமாதி' என்று சொல்கிறார்களே, அப்படி ஆலையில் உற்பத்தியான வஸ்திரங்களை சமுத்திரத்தில் போட்டுவிட்டு, மடத்துச் சிப்பந்திகள் எல்லாரையும் கதர் கட்டிக்கொள்ளும்படிப் பண்ணலாமென்று நினைத்தேன்.
அப்படியே தனுஷ்கோடியில் எல்லாரும் ஸ்நானம் செய்தவுடன், மில் துணி உடுத்திக்கொண்டிருந்தவர்கள் அதை சமுத்திரத்திலே போட்டுவிட்டுக் கதர் கட்டிக் கொள்ள ஆரம்பித்தார்கள். மதுரையிலிருந்து இதற்காக நிறையக் கதர் வஸ்திரங்கள் தருவித்திருந்தோம். தலா இரண்டு ஜோடி கதர் சோமனும் (வேஷ்டியும்) மேல்வேஷ்டியும் கொடுத்தது.
கைத்தொழிலை ஆதரிப்பது manual labour (உடலுழைப்பு) என்றால் மட்டமாக நினைக்காமல் யாராயிருந்தாலும் ராட்டினத்தைச் சுற்றி நூற்பது, அதனாலேயே வீண்பேச்சு முதலியவற்றில் போகாமல் ஒரு டிசிப்ளினில் வருவது, நம் தேசத்துக்கு என்று என்ன உண்டோ அதோடு திருப்தியாயிருந்து, விதேசச் சரக்குகளில் மோகத்தை விட்டு நம்முடைய பண்பாட்டைக் காப்பாற்றுவது, நம் நாட்டுப் பணம் அநியாயமாக வெளி தேசத்துக்குப் போகாமல் தடுப்பது, பல ஏழைகளுக்கு ஜீவனோபாயம் கிடைக்கப் பண்ணுவது, என்று இத்தனை அம்சங்கள் மில் துணியை பகிஷ்கரித்துக் கதரை ஆதரிப்பதில் இருக்கிறதல்லவா? அதனால் இது ரொம்ப நல்ல திட்டமாகத்தானே தெரிகிறது?
ஆனால் இப்படிப் பண்ணினால் தங்கள் வியாபாரமே போய்விடும். தாங்கள் தலையில் துணியைப் போட்டுக் கொள்ளும்படியாகிவிடும், என்று லங்காஷயர், மாஞ்செஸ்டர் மில்காரர்களெல்லாம் கூ கூ என்று கூப்பாடு போட்டார்கள். முதலில், ‘அதற்காக அப்பாவி இண்டியன்தான் அகப்பட்டானா, தலையிலே கை வைக்க?'என்றுதான் தோன்றிற்று.
அப்புறம் யோசித்துப் பார்த்ததில், வெள்ளைக்காரர்கள் வஞ்சகமாக வியாபார சாமர்த்தியங்கள் செய்து அபரிமித லாபம் பண்ணுவதும், வியாபாரம் என்று ஆரம்பித்துத் தங்களுடைய வாழ்க்கை முறை, ஆட்சி, மதம் ஆகியவற்றையும் பிற தேசங்களில் விஸ்தரித்து அவற்றின் வயிற்றிலடித்துத் தங்களைப் போஷாக்குப் பண்ணிக் கொள்வதும் மகா தப்புதான். என்றாலும், அவர்கள் தேசத்தில் கருப்பு நிலக்கரியையும் வெளுப்புச் சாக்குக் கட்டியையும் விட்டால் வேறே விளைபொருள் கிடையாதே.
ஆனதால் அவர்கள் ஆலைத் தொழில் பண்ணி ஏற்றுமதி செய்து பிற தேசங்களிடமிருந்துதானே தங்களுடைய எல்லா வாழ்க்கைத் தேவைகளுக்குமானதை சம்பாதித்துக் கொள்ளவேண்டும்? இதில் ஒரு ‘அயிட்ட'மாக வெளிதேசத்துப் பருத்தியை அவர்கள் தருவித்து நூலாய் நூற்றுத் துணியாகப் பண்ணி ஏற்றுமதி செய்வதையும் அடியோடு தப்பு என்று சொல்ல முடியாது போலிருக்கே.
அவர்கள் ஆசைப்படுகிற மாதிரி, இதில் தாங்களே ஏகபோக்கியம் பெற்று அபரிமித லாபம் எடுக்கவேண்டும்; அந்தந்த தேசத்து நெசவாளிகள் நாசமாகப் போனாலும் போகட்டும், தாங்கள் தான் விருத்தியாக வேண்டும் என்பது நியாயமே இல்லையென்றாலும், ஏதோ ஒரு அளவு, ஒரு quota அவர்களுக்கும் விட்டுக்கொடுத்து அவர்கள் மில்களை நடத்தவிட்டால்தானே அந்த ஜனங்களும் வாழ முடியும் போலிருக்கிறது?' என்று தோன்றிற்று.
இங்கிலாந்து மாதிரியேதான் இன்னும் சில தேசங்களும், ஏற்றுமதி பண்ணினால்தான் அவற்றைச் சேர்ந்த ஜன சமூகங்களுக்கு ஜீவனோபாயம் கிடைக்கும். அதைக் கொண்டுதான் அவர்கள் வாழ்க்கைக்குத் தேவையான பண்டங்களை இறக்குமதி செய்துகொள்ள முடியும். ஆனபடியால் இந்தியா, சைனா மாதிரி பெரிய தேசங்களில் வாழ்க்கைக்கு வேண்டிய எல்லாப் பண்டங்களையும் ஸ்வேதசியமாகவே பண்ணிச் சமாளித்துக்கொண்டுவிடுவது, self-sufficiency தன்னிறைவு பெற்று ரொம்பவும் அத்தியாவசியமான இறக்குமதியோடு நிறுத்திக்கொண்டு விடுவது என்று வைத்துவிட்டால் ஏற்றுமதியையே நம்பி உயிர் வாழ்கிற தேசத்து ஜனங்கள், பாவம், என்ன பண்ணுவார்கள்? லங்காஷயர்க்காரன் கூ கூ என்று கத்துவதில் அடாவடி இருக்கத்தான் செய்கிறதென்றாலுங்கூட, நாமும் சுதேசியக் கொள்கையில் ரொம்பக் கடுமையாக இருந்தால் அதனால் ‘ஜெனுவி'னாகவே சில பேர் கஷ்டத்துக்கு ஆளாகும்படிதானே ஆகும் போலிருக்கிறது?'என்று தோன்ற ஆரம்பித்தது.
அதற்கப்புறம் என்னை பொறுத்தமட்டில் மில் துணி வேண்டாம் என்று வைத்தது வைத்ததுதான் என்று ஆக்கிக்கொண்டுவிட்டாலும் மற்றவர்கள் விஷயமாக எதுவும் ‘கம்பெல்' பண்ணவேண்டாமென்று விட்டுவிட்டேன்.
எதற்குச் சொல்ல வந்தேன் என்றால், நம் தேச ஜனங்களின் தொழில் கெட்டுப்போகப்படாது. நம் பணம் அநியாயமாக வெளியூருக்குப் போய் அவன் கொழுக்கப்படாது. நம்மை இளைக்கப்பண்ணி அவன் கொழுக்கப்படாது, என்பதற்காக ஒரு நல்ல ஏற்பாடு செய்தால், அதனாலுங்கூட ‘ஜெனுவ'னாகவே எவனாவது பாதிக்கப்படுகிறான்.
எந்த நல்ல திட்டம் கொண்டுவந்தாலும் அதுவும் யாருக்கோ கெடுதல் செய்கிறது என்றுதான் அர்த்தம்.
Keywords: தெய்வத்தின் குரல், காஞ்சி மகா பெரியவா, இந்து மத தத்துவம், உபகார பணி, தொழில் பக்தி
IN: ஆனந்த ஜோதி |
சமூகம் » ஆனந்த ஜோதி in TAMIL HINDU
Published: January 28, 2016
தெய்வத்தின் குரல்: உபகாரப் பணியிலும் அபகாரம்
யுத்த காரியந்தானென்றில்லை, ரொம்பவும் சாத்விகமாக ஒரு நல்லது செய்யப் போனால்கூட ஒருத்தருக்கு உபகாரமென்று செய்வது, வேறு யாராவது ஒருத்தருக்கு ஏதாவது அபகாரம் செய்துவிடுகிறது.
நான் ஒன்று நினைத்துக் கொள்வதுண்டு, மில் துணி பகிஷ்காரம் பண்ணிக் கதரை அபிவிருத்தி பண்ண வேண்டுமென்று காந்தி தீவிரமாக இருந்த காலம். சீமையிலிருந்துதான் அப்போது மில் துணி வரும். ஆகையினால் மில் துணி பகிஷ்காரம் என்பதில், ‘ஒரு கல்லில் இரண்டு மாங்காய்' என்கிற மாதிரி இரண்டு லட்சியங்கள் பூர்த்தி ஆயின. சுதேசியத்தை ஆதரித்து விதேசியத்தை பகிஷ்கரிப்பது என்பது ஒன்று. Man-power -ஐ (மனித சக்தியை) ஆதரித்து மெஷின் பவரை எதிர்ப்பது என்பது இன்னொன்று.
இந்தக் கொள்கைகளில் எனக்கும் அபிமானம் உண்டு. அப்போது ராமேசுவர யாத்திரை போயிருந்தோம். இந்த நல்ல சமயத்தில் மடத்துச் சிப்பந்திகளையெல்லாம் ஆலைத் துணியை விட்டுவிட்டுக் கதர் உடுத்தும் பழக்கத்தை மேற்கொள்ளச் செய்ய வேண்டும் என்று தோன்றிற்று. அக்காலத்திலே அங்கங்கே மில் துணிகளைச் சொக்கப்பானை மாதிரி கொளுத்தி சுதேசி அபிமானிகள் விழா நடத்துவது வழக்கம்.
எனக்கென்னவோ, அசேதனமான துணிதான் என்றாலும் அதைக்கூட நெருப்பில் போட்டுக் கொளுத்துவது என்றால் இம்சை மாதிரி தோன்றிற்று. இப்படியில்லாமல், சாத்விகமாக, குளிர்ச்சியாக, ‘ஜலசமாதி' என்று சொல்கிறார்களே, அப்படி ஆலையில் உற்பத்தியான வஸ்திரங்களை சமுத்திரத்தில் போட்டுவிட்டு, மடத்துச் சிப்பந்திகள் எல்லாரையும் கதர் கட்டிக்கொள்ளும்படிப் பண்ணலாமென்று நினைத்தேன்.
அப்படியே தனுஷ்கோடியில் எல்லாரும் ஸ்நானம் செய்தவுடன், மில் துணி உடுத்திக்கொண்டிருந்தவர்கள் அதை சமுத்திரத்திலே போட்டுவிட்டுக் கதர் கட்டிக் கொள்ள ஆரம்பித்தார்கள். மதுரையிலிருந்து இதற்காக நிறையக் கதர் வஸ்திரங்கள் தருவித்திருந்தோம். தலா இரண்டு ஜோடி கதர் சோமனும் (வேஷ்டியும்) மேல்வேஷ்டியும் கொடுத்தது.
கைத்தொழிலை ஆதரிப்பது manual labour (உடலுழைப்பு) என்றால் மட்டமாக நினைக்காமல் யாராயிருந்தாலும் ராட்டினத்தைச் சுற்றி நூற்பது, அதனாலேயே வீண்பேச்சு முதலியவற்றில் போகாமல் ஒரு டிசிப்ளினில் வருவது, நம் தேசத்துக்கு என்று என்ன உண்டோ அதோடு திருப்தியாயிருந்து, விதேசச் சரக்குகளில் மோகத்தை விட்டு நம்முடைய பண்பாட்டைக் காப்பாற்றுவது, நம் நாட்டுப் பணம் அநியாயமாக வெளி தேசத்துக்குப் போகாமல் தடுப்பது, பல ஏழைகளுக்கு ஜீவனோபாயம் கிடைக்கப் பண்ணுவது, என்று இத்தனை அம்சங்கள் மில் துணியை பகிஷ்கரித்துக் கதரை ஆதரிப்பதில் இருக்கிறதல்லவா? அதனால் இது ரொம்ப நல்ல திட்டமாகத்தானே தெரிகிறது?
ஆனால் இப்படிப் பண்ணினால் தங்கள் வியாபாரமே போய்விடும். தாங்கள் தலையில் துணியைப் போட்டுக் கொள்ளும்படியாகிவிடும், என்று லங்காஷயர், மாஞ்செஸ்டர் மில்காரர்களெல்லாம் கூ கூ என்று கூப்பாடு போட்டார்கள். முதலில், ‘அதற்காக அப்பாவி இண்டியன்தான் அகப்பட்டானா, தலையிலே கை வைக்க?'என்றுதான் தோன்றிற்று.
அப்புறம் யோசித்துப் பார்த்ததில், வெள்ளைக்காரர்கள் வஞ்சகமாக வியாபார சாமர்த்தியங்கள் செய்து அபரிமித லாபம் பண்ணுவதும், வியாபாரம் என்று ஆரம்பித்துத் தங்களுடைய வாழ்க்கை முறை, ஆட்சி, மதம் ஆகியவற்றையும் பிற தேசங்களில் விஸ்தரித்து அவற்றின் வயிற்றிலடித்துத் தங்களைப் போஷாக்குப் பண்ணிக் கொள்வதும் மகா தப்புதான். என்றாலும், அவர்கள் தேசத்தில் கருப்பு நிலக்கரியையும் வெளுப்புச் சாக்குக் கட்டியையும் விட்டால் வேறே விளைபொருள் கிடையாதே.
ஆனதால் அவர்கள் ஆலைத் தொழில் பண்ணி ஏற்றுமதி செய்து பிற தேசங்களிடமிருந்துதானே தங்களுடைய எல்லா வாழ்க்கைத் தேவைகளுக்குமானதை சம்பாதித்துக் கொள்ளவேண்டும்? இதில் ஒரு ‘அயிட்ட'மாக வெளிதேசத்துப் பருத்தியை அவர்கள் தருவித்து நூலாய் நூற்றுத் துணியாகப் பண்ணி ஏற்றுமதி செய்வதையும் அடியோடு தப்பு என்று சொல்ல முடியாது போலிருக்கே.
அவர்கள் ஆசைப்படுகிற மாதிரி, இதில் தாங்களே ஏகபோக்கியம் பெற்று அபரிமித லாபம் எடுக்கவேண்டும்; அந்தந்த தேசத்து நெசவாளிகள் நாசமாகப் போனாலும் போகட்டும், தாங்கள் தான் விருத்தியாக வேண்டும் என்பது நியாயமே இல்லையென்றாலும், ஏதோ ஒரு அளவு, ஒரு quota அவர்களுக்கும் விட்டுக்கொடுத்து அவர்கள் மில்களை நடத்தவிட்டால்தானே அந்த ஜனங்களும் வாழ முடியும் போலிருக்கிறது?' என்று தோன்றிற்று.
இங்கிலாந்து மாதிரியேதான் இன்னும் சில தேசங்களும், ஏற்றுமதி பண்ணினால்தான் அவற்றைச் சேர்ந்த ஜன சமூகங்களுக்கு ஜீவனோபாயம் கிடைக்கும். அதைக் கொண்டுதான் அவர்கள் வாழ்க்கைக்குத் தேவையான பண்டங்களை இறக்குமதி செய்துகொள்ள முடியும். ஆனபடியால் இந்தியா, சைனா மாதிரி பெரிய தேசங்களில் வாழ்க்கைக்கு வேண்டிய எல்லாப் பண்டங்களையும் ஸ்வேதசியமாகவே பண்ணிச் சமாளித்துக்கொண்டுவிடுவது, self-sufficiency தன்னிறைவு பெற்று ரொம்பவும் அத்தியாவசியமான இறக்குமதியோடு நிறுத்திக்கொண்டு விடுவது என்று வைத்துவிட்டால் ஏற்றுமதியையே நம்பி உயிர் வாழ்கிற தேசத்து ஜனங்கள், பாவம், என்ன பண்ணுவார்கள்? லங்காஷயர்க்காரன் கூ கூ என்று கத்துவதில் அடாவடி இருக்கத்தான் செய்கிறதென்றாலுங்கூட, நாமும் சுதேசியக் கொள்கையில் ரொம்பக் கடுமையாக இருந்தால் அதனால் ‘ஜெனுவி'னாகவே சில பேர் கஷ்டத்துக்கு ஆளாகும்படிதானே ஆகும் போலிருக்கிறது?'என்று தோன்ற ஆரம்பித்தது.
அதற்கப்புறம் என்னை பொறுத்தமட்டில் மில் துணி வேண்டாம் என்று வைத்தது வைத்ததுதான் என்று ஆக்கிக்கொண்டுவிட்டாலும் மற்றவர்கள் விஷயமாக எதுவும் ‘கம்பெல்' பண்ணவேண்டாமென்று விட்டுவிட்டேன்.
எதற்குச் சொல்ல வந்தேன் என்றால், நம் தேச ஜனங்களின் தொழில் கெட்டுப்போகப்படாது. நம் பணம் அநியாயமாக வெளியூருக்குப் போய் அவன் கொழுக்கப்படாது. நம்மை இளைக்கப்பண்ணி அவன் கொழுக்கப்படாது, என்பதற்காக ஒரு நல்ல ஏற்பாடு செய்தால், அதனாலுங்கூட ‘ஜெனுவ'னாகவே எவனாவது பாதிக்கப்படுகிறான்.
எந்த நல்ல திட்டம் கொண்டுவந்தாலும் அதுவும் யாருக்கோ கெடுதல் செய்கிறது என்றுதான் அர்த்தம்.
Keywords: தெய்வத்தின் குரல், காஞ்சி மகா பெரியவா, இந்து மத தத்துவம், உபகார பணி, தொழில் பக்தி
IN: ஆனந்த ஜோதி |