|
Post by Sumi on Jun 14, 2012 14:59:47 GMT 5.5
Source: Maha Periyaval Darisana Anubhavangal Part 6
ஸ்ரீமடத்து வேலைக்காரன், தன் குழந்தைகளை 'தொடப்பக்கட்டை' என்று சொல்லி திட்டுவது வழக்கம். அவன் மனைவியும் மடத்தை கூட்டி பெருக்கும் பணியில் இருந்ததால், அவனுடைய இரண்டு பெண் பிள்ளைகளும் மடத்துக்குள் வந்து சுற்றி கொண்டிருக்கும்.
ஒருநாள், பெரியவாள் வருவதை கவனிக்காமல் தன் மகளை, 'தொடப்பக்கட்டை' என்று கூப்பிட்டான் வேலைக்காரன்.
பெரியவாள் அவனை கூப்பிடச் சொன்னார்கள்.
"கொழந்தைக்கு என்ன பேரு?"
"லட்சுமி.."
"பின்னே தொடப்பக்கட்டைன்னு கூப்பிட்டியே...
தெய்வத்தின் பெயரை வைச்சிட்டு, இப்படியெல்லாம் கூப்பிடலாமா...? துடைப்பம் என்பது, பணக்கார வீட்டிலேயும் இருக்கும், ஏழை வீட்டிலேயும் இருக்கும். துடைப்பம் இல்லேன்னா வீடு பாழாகி போகும். இப்படி அலட்சியமா சொல்லக்கூடாது.."
வேலைக்காரன் நடுங்கி போய் நமஸ்காரம் செய்து கன்னத்தில் போட்டுக்கொண்டான்.
துடைப்பக்கட்டைகாக பரிந்து வாதாடிய ஒரே வக்கீல், நமது மகா பெரியவாள் என்று துணிந்து சொல்லலாம்!
|
|
|
Post by krsiyer on Jun 14, 2012 15:44:55 GMT 5.5
Good, enjoyable incident ! thanks for sharing jaya jaya sankara, hara hara sankara !
|
|
|
Post by sbalasubramanian on Jun 16, 2012 22:56:40 GMT 5.5
Periava thiruvadigal charanam.
Manam, Vakku, Kayam should always be synchronized with one another. Be keep our mouth words always clear like crystal, not hurting to any body through out our life.
Thanks for a good message.
|
|