Post by radha on Jun 11, 2012 3:20:07 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA:,RESPECTFUL PRANAMS TO SRI MAHA PERIVA
மது(ரை) ர கான மணி அய்யர்
[MaduraiManiIyer02m-705261.jpg]
காஞ்சி மாமுனிவர் பெரியவாளுக்கு மணி அய்யரின் பாட்டு என்றால் உயிர். பிரபல எழுத்தாளர் பரணீதரன் அவர்கள் பெரியவாளுடன் இருந்தபோது மணி அய்யரின் கச்சேரியை பற்றி எழுதியதாவது:
ஒரு சமயம் சென்னை தியாகராய நகரில் மதுரை மணி அய்யரின் கச்சேரி ஒரு மண்டபத்தில் நடந்தது. சுமார் 200 ரசிகர்கள் மெய் மறந்து அய்யரின் கச்சேரியை கேட்கிறார்கள். மணி அய்யருக்கு அப்போது உடல் நலம் குன்றி, கண் பார்வைகள் நலிந்து போன சமயம்.
கச்சேரியின்போது மகா பெரியவாள் தனக்கு முன்பு தட்டில் வைத்திருந்த ஆரஞ்ச் பழத்தின் சுளைகளை எடுத்துவிட்டு அதன் மூடியால் தரையில் மணி அய்யரின் பாட்டுக்கு தாளம் போட்டு ரசிக்கிறார். கச்சேரி முடிந்ததும் மணி அய்யர் ” நான் பாடும்போது லயம் தப்பாமல் தாளம் போட்டு வந்தாரே, அவர் யார்?” என்று கேட்க, உடன் பாடியவர் மகாபெரியவாள் தான் என்று சொல்ல மணி அய்யர் தன்னை அறியாமல் “கைலாசநாதா! கபாலீஸ்வரா! என் தெய்வத்தை பார்க்க முடியவில்லையே” என்றாராம். இதை கேட்ட அத்தனை ரசிகர்களின் கண்களில் தாரையாக கண்ணீர் வந்தது என்று தனது அனுபவத்தை எழுதியிருக்கிறார்.
ஒரு சமயம் நாட்டில், பஞ்சம் பட்டினி ஆகியவற்றால் மக்கள் அவதிப்பட்டபோது பெரியவாள் மதுரை மணி அய்யரிடம் ” நீ கச்சேரியில் கோளறு பதிகம் பாடு, நவகிரக கீர்த்தனைகளை பாடு” என்றார். அவரது வேண்டுகோளை ஏற்று கடைசிவரை தன் கச்சேரியின்போது அவைகளைப் பாடாமல் இருக்கமாட்டார்.
மதுரை மணி ஐயர்
மதுரை மணி ஐயர்.
தோற்றம் 25-10-1912; மறைவு 8- 6 -1968.
இசை உலகில் அரியக்குடி, மகாராஜபுரம் விஸ்வநாத அய்யர், மதுரை மணி அய்யர், முசிறி, ராஜரத்னம் பிள்ளை, புல்லாங்குழல் மாலி, வீணை தனம்மாள், சாம்பசிவ அய்யர் போன்றோருக்கு தனி இடம் உண்டு. ஜி. என். பி எனும் நட்சத்திரம் இந்த பட்டியலில் பிறகு வந்து சேர்ந்து பிரகாசித்தது எல்லாருக்கும் தெரியும்.
மதுரை மணி என்றால் எங்கள் குடும்பத்தினருக்கு ஒரு தனி அபிமானம் உண்டு. மதுரை மணி பாட்டு கேட்க வேண்டும் என்று நீண்ட தூரம் நடந்து சென்று கேட்டு வந்தவர்களை எனக்குத் தெரியும். மணி அய்யர் பாட்டு கேட்க என்றே ரெகார்ட் பிளேயர், ரேடியோ, காசட் பிளேயர் என்று வாங்கிக் குவித்த காலம் ஒன்று உண்டு.
மணி அய்யரின் வாழ்க்கைக் குறிப்பைத் தேடுபவர்கள் கீழே கொடுக்கப் பட்டுள்ள தளத்தைச் சொடுக்கிப் பெறலாம்.
en.wikipedia.org/wiki/Madurai_Mani_Iyer
சங்கீத கலாநிதி, கான கலாதரர், இசைப் பேரறிஞர், இன்னும் எவ்வளவோ பட்டங்களுக்கு சொந்தக்காரரான இந்த மேதை, திருமண வாழ்வுக்கு தம் பெரு நோய் காரணமாகத தகுதி பெற்றிருக்கவில்லை. அவரது சகோதரி பிள்ளையான திரு டி வி சங்கர நாராயணனை (சங்கரநாராயணன் அவர்களின் தந்தை, திரு டி எஸ் வேம்பு ஐயர் அவர்கள், மதுரை மணி ஐயர் அவர்களுடன் பல மேடைகளில் பாடியவர்) தம் பிரதம சீடராகக் கொண்டவர் இவர். அதற்கு முன்பே சாவித்ரி கணேசன் என்ற பெண் சிறந்த சீடராக இருந்து அரியலூர் ரயில் விபத்தில் அகாலமரணம் எய்திவிட்டார்.
ஸ்வரம் பாடுவதில் நிகரற்று விளங்கிய மதுரை மணி, ராக ஆலாபனைகளை தேவையானபோது விஸ்தாரமாகப் பாடுவார். அந்தந்த கிருதிக்குத் தக்கவாறு சுருக்கமாகவோ, நடுத்தரமாகவோ, விவரித்தோ பாடும் திறன் மணியின் சிறப்பு. அவரால் பிரபலம் அடைந்த கீர்த்தனைகள் ஏராளம். நளினகாந்தி போன்ற அப்போது அபூர்வமாக இருந்த ராகங்களை சர்வ சாதாரணமாக பாடும் திறன் அவரது சொத்து. தமிழ் கீர்த்தனைகளுக்கு உயிர் கொடுத்து கண்ணில் நீர் வரும்படியாக நிரவல் செய்வது அவரது விசேஷ அம்சம். கண் தெரியாத நிலையில் அவர் எத்தனையோ பிறவி என்று நிரவல் செய்யும்போது கேட்போருக்கு மெய் சிலிர்க்கும். பக்க வாத்தியக்காரர்களை அரவணைத்து, ஊக்குவித்துச் செல்வது அவருக்கு கை வந்த கலை.
சங்கீத உலகில் இலவசமாகவும் கொடுத்ததை வாங்கிக்கொண்டும் கச்சேரி செய்ததில் மதுரை மணியின் ரெகார்ட் பிறரால் மீற முடியாததாகும். . சுருதி சுத்தம் அவரது பெருமையை இன்னும் கூட்டியது.
“மணி அய்யர்வாள்! போன மாசம் கல்யாணத்திலே உங்க கச்சேரி கேட்டேன். நீங்க பாடின காபி (ராகம்) அருமை!” என்று பாராட்டிய பெரியவரிடம் “கல்யாணம்னா காபி நன்னா இல்லேன்னா ரொம்ப தப்பாயிடுமே ” என்று அவர் ஜோக் அடித்ததை நான் நேரில் கேட்டு ரசித்திருக்கிறேன்.
இயலாது போன அவரது கடைசி நாட்களில், அவரை கைத் தாங்கலாக தூக்கி வந்து மேடை ஏற்றுவார்கள். அந்த நிலையிலும் அவர் அளித்த இசை அமுதம் அசல் தேவ லோகத்து சரக்குதான்!
” ஒரு ஊரில் சங்கீத ரசிகர்கள் எல்லாரையும் ஒருசேர பார்க்கவேண்டும் என்றால் அங்கு மதுரை மணி கச்சேரி நடக்கும் போது போய்ப் பாருங்கள் “ என்று கல்கி ஒருமுறை சிறப்பித்து எழுதினார்.
Age cannot wither nor custom stale his infinite variety என்று ஷேக்ஸ்பியர் வார்த்தைகளை கையாண்டு பாராட்டினார் அரவங்காடு நண்பர் ஒருவர். முக்காலும் உண்மை. முழுதும் உண்மை.
காஞ்சிப் பெரியவர் கூப்பிட்ட போது, ‘இன்னும் குளிக்கவில்லையே’ என்று சொன்ன மதுரை மணியிடம், “உனக்கு உன் இசைதான் ஆசாரம், அனுஷ்டானம் எல்லாம். குளிக்காட்டா பரவா இல்லே.” என்று சொன்னாராம் பெரியவர். இதை விட பெரிய பாராட்டு ஒன்று கிடைக்குமா எவருக்கும்!
Sri Kanchi Maha Periva Thiruvadigal Charanam
மது(ரை) ர கான மணி அய்யர்
[MaduraiManiIyer02m-705261.jpg]
காஞ்சி மாமுனிவர் பெரியவாளுக்கு மணி அய்யரின் பாட்டு என்றால் உயிர். பிரபல எழுத்தாளர் பரணீதரன் அவர்கள் பெரியவாளுடன் இருந்தபோது மணி அய்யரின் கச்சேரியை பற்றி எழுதியதாவது:
ஒரு சமயம் சென்னை தியாகராய நகரில் மதுரை மணி அய்யரின் கச்சேரி ஒரு மண்டபத்தில் நடந்தது. சுமார் 200 ரசிகர்கள் மெய் மறந்து அய்யரின் கச்சேரியை கேட்கிறார்கள். மணி அய்யருக்கு அப்போது உடல் நலம் குன்றி, கண் பார்வைகள் நலிந்து போன சமயம்.
கச்சேரியின்போது மகா பெரியவாள் தனக்கு முன்பு தட்டில் வைத்திருந்த ஆரஞ்ச் பழத்தின் சுளைகளை எடுத்துவிட்டு அதன் மூடியால் தரையில் மணி அய்யரின் பாட்டுக்கு தாளம் போட்டு ரசிக்கிறார். கச்சேரி முடிந்ததும் மணி அய்யர் ” நான் பாடும்போது லயம் தப்பாமல் தாளம் போட்டு வந்தாரே, அவர் யார்?” என்று கேட்க, உடன் பாடியவர் மகாபெரியவாள் தான் என்று சொல்ல மணி அய்யர் தன்னை அறியாமல் “கைலாசநாதா! கபாலீஸ்வரா! என் தெய்வத்தை பார்க்க முடியவில்லையே” என்றாராம். இதை கேட்ட அத்தனை ரசிகர்களின் கண்களில் தாரையாக கண்ணீர் வந்தது என்று தனது அனுபவத்தை எழுதியிருக்கிறார்.
ஒரு சமயம் நாட்டில், பஞ்சம் பட்டினி ஆகியவற்றால் மக்கள் அவதிப்பட்டபோது பெரியவாள் மதுரை மணி அய்யரிடம் ” நீ கச்சேரியில் கோளறு பதிகம் பாடு, நவகிரக கீர்த்தனைகளை பாடு” என்றார். அவரது வேண்டுகோளை ஏற்று கடைசிவரை தன் கச்சேரியின்போது அவைகளைப் பாடாமல் இருக்கமாட்டார்.
மதுரை மணி ஐயர்
மதுரை மணி ஐயர்.
தோற்றம் 25-10-1912; மறைவு 8- 6 -1968.
இசை உலகில் அரியக்குடி, மகாராஜபுரம் விஸ்வநாத அய்யர், மதுரை மணி அய்யர், முசிறி, ராஜரத்னம் பிள்ளை, புல்லாங்குழல் மாலி, வீணை தனம்மாள், சாம்பசிவ அய்யர் போன்றோருக்கு தனி இடம் உண்டு. ஜி. என். பி எனும் நட்சத்திரம் இந்த பட்டியலில் பிறகு வந்து சேர்ந்து பிரகாசித்தது எல்லாருக்கும் தெரியும்.
மதுரை மணி என்றால் எங்கள் குடும்பத்தினருக்கு ஒரு தனி அபிமானம் உண்டு. மதுரை மணி பாட்டு கேட்க வேண்டும் என்று நீண்ட தூரம் நடந்து சென்று கேட்டு வந்தவர்களை எனக்குத் தெரியும். மணி அய்யர் பாட்டு கேட்க என்றே ரெகார்ட் பிளேயர், ரேடியோ, காசட் பிளேயர் என்று வாங்கிக் குவித்த காலம் ஒன்று உண்டு.
மணி அய்யரின் வாழ்க்கைக் குறிப்பைத் தேடுபவர்கள் கீழே கொடுக்கப் பட்டுள்ள தளத்தைச் சொடுக்கிப் பெறலாம்.
en.wikipedia.org/wiki/Madurai_Mani_Iyer
சங்கீத கலாநிதி, கான கலாதரர், இசைப் பேரறிஞர், இன்னும் எவ்வளவோ பட்டங்களுக்கு சொந்தக்காரரான இந்த மேதை, திருமண வாழ்வுக்கு தம் பெரு நோய் காரணமாகத தகுதி பெற்றிருக்கவில்லை. அவரது சகோதரி பிள்ளையான திரு டி வி சங்கர நாராயணனை (சங்கரநாராயணன் அவர்களின் தந்தை, திரு டி எஸ் வேம்பு ஐயர் அவர்கள், மதுரை மணி ஐயர் அவர்களுடன் பல மேடைகளில் பாடியவர்) தம் பிரதம சீடராகக் கொண்டவர் இவர். அதற்கு முன்பே சாவித்ரி கணேசன் என்ற பெண் சிறந்த சீடராக இருந்து அரியலூர் ரயில் விபத்தில் அகாலமரணம் எய்திவிட்டார்.
ஸ்வரம் பாடுவதில் நிகரற்று விளங்கிய மதுரை மணி, ராக ஆலாபனைகளை தேவையானபோது விஸ்தாரமாகப் பாடுவார். அந்தந்த கிருதிக்குத் தக்கவாறு சுருக்கமாகவோ, நடுத்தரமாகவோ, விவரித்தோ பாடும் திறன் மணியின் சிறப்பு. அவரால் பிரபலம் அடைந்த கீர்த்தனைகள் ஏராளம். நளினகாந்தி போன்ற அப்போது அபூர்வமாக இருந்த ராகங்களை சர்வ சாதாரணமாக பாடும் திறன் அவரது சொத்து. தமிழ் கீர்த்தனைகளுக்கு உயிர் கொடுத்து கண்ணில் நீர் வரும்படியாக நிரவல் செய்வது அவரது விசேஷ அம்சம். கண் தெரியாத நிலையில் அவர் எத்தனையோ பிறவி என்று நிரவல் செய்யும்போது கேட்போருக்கு மெய் சிலிர்க்கும். பக்க வாத்தியக்காரர்களை அரவணைத்து, ஊக்குவித்துச் செல்வது அவருக்கு கை வந்த கலை.
சங்கீத உலகில் இலவசமாகவும் கொடுத்ததை வாங்கிக்கொண்டும் கச்சேரி செய்ததில் மதுரை மணியின் ரெகார்ட் பிறரால் மீற முடியாததாகும். . சுருதி சுத்தம் அவரது பெருமையை இன்னும் கூட்டியது.
“மணி அய்யர்வாள்! போன மாசம் கல்யாணத்திலே உங்க கச்சேரி கேட்டேன். நீங்க பாடின காபி (ராகம்) அருமை!” என்று பாராட்டிய பெரியவரிடம் “கல்யாணம்னா காபி நன்னா இல்லேன்னா ரொம்ப தப்பாயிடுமே ” என்று அவர் ஜோக் அடித்ததை நான் நேரில் கேட்டு ரசித்திருக்கிறேன்.
இயலாது போன அவரது கடைசி நாட்களில், அவரை கைத் தாங்கலாக தூக்கி வந்து மேடை ஏற்றுவார்கள். அந்த நிலையிலும் அவர் அளித்த இசை அமுதம் அசல் தேவ லோகத்து சரக்குதான்!
” ஒரு ஊரில் சங்கீத ரசிகர்கள் எல்லாரையும் ஒருசேர பார்க்கவேண்டும் என்றால் அங்கு மதுரை மணி கச்சேரி நடக்கும் போது போய்ப் பாருங்கள் “ என்று கல்கி ஒருமுறை சிறப்பித்து எழுதினார்.
Age cannot wither nor custom stale his infinite variety என்று ஷேக்ஸ்பியர் வார்த்தைகளை கையாண்டு பாராட்டினார் அரவங்காடு நண்பர் ஒருவர். முக்காலும் உண்மை. முழுதும் உண்மை.
காஞ்சிப் பெரியவர் கூப்பிட்ட போது, ‘இன்னும் குளிக்கவில்லையே’ என்று சொன்ன மதுரை மணியிடம், “உனக்கு உன் இசைதான் ஆசாரம், அனுஷ்டானம் எல்லாம். குளிக்காட்டா பரவா இல்லே.” என்று சொன்னாராம் பெரியவர். இதை விட பெரிய பாராட்டு ஒன்று கிடைக்குமா எவருக்கும்!
Sri Kanchi Maha Periva Thiruvadigal Charanam