Post by radha on Jun 10, 2012 7:05:00 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA:,RESPECTFUL PRANAM TO SRI KANCHI MAHA PERIVA
வரம் தருவாய் வாயு மைந்தா !!
ஆஞ்சநேய சுவாமிகளின் விசேஷமே அலாதியானது. இவரை வணங்குவோர் எவ்விதக் குறையும் இல்லாமல், மிகச் சிறப்பாக வாழ்வார்கள். பாரதப் போரில் அர்ஜுனனின் தேர்க் கொடியில் அவர் இருந்ததால் பாண்டவர்களுக்கு வெற்றி கிடைத்தது என்பார்கள். அவரது மகிமையை விளக்கும் சில துதிகள் தொகுக்கப்பட்டுள்ளன.
கோஷ்பதி க்ருதவாராசிம்
மசகீக்க்ருத ராக்ஷஸம் |
ராமாயண மஹாமாலா ||
ரத்னம் வந்தே னீலாத்மஜம்
கடலை குளம்படி போல் செய்தவரும், கொசுக்களை அடித்து அழிப்பது போல் அரக்கர்களை அழித்தவரும், ராமாயணம் எனும் ஒப்பற்ற மாலையின் ரத்னம் போன்று விளங்குபவரும், வாயு பகவானின் புதல்வருமான அனுமனைத் தியானிக்கிறேன் என்று இத்துதி கூறுகிறது. சிரஞ்சீவியான ஆஞ்சநேயரின் அருமை பெருமைகளை, பொருள் பொதிந்த எளிய வார்த்தைகள் மூலம் அவரது பக்தர்கள் புரிந்து கொள்ள இத்துதி பெரிதும் உதவுகிறது.
s.chakpak.com/se_images/15700_-1_564_none/hanuman-2-wallpaper.jpg
உல்லங்க்ய ஸிந்தோ : ஸலீலம் ஸலீலம்
யச்சோகவஹ்னிம்
ஜனகாத்மஜாயா : |
ஆதாய தேனைவ ததாஹ லங்காம்
நமாமி தம்
ப்ராஞ்சலிராஞ்ஜநேயம் ||
சமுத்திரத்தை மிகவும் விளையாட்டாகக் கடந்து, அன்னை ஜானகியின் சோகமென்ற நெருப்பினை எடுத்துக் கொண்டு, அந்த நெருப்பினைக் கொண்டே இலங்கையை அனுமார் எரித்தார். அத்தகைய சாஹஸச்செயல் புரிந்த வாயுபகவானின் மைந்தனை கைகூப்பி வணங்குகிறேன் என இந்தச் ஸ்லோகம் கூறுகிறது.
dhirendra.files.wordpress.com/2009/04/copy-of-lord_hanuman_1.jpg?w=510
ஆஞ்சநேய மதிபாடலானனம்
காஞ்சனாத்ரி கமனீய விக்ரஹம் |
பாரிஜாத தருமூல வாஸினம்
பாவயாமி பவமான நந்தனம் !!
செந்தாமரை போன்ற முகம் உள்ளவராக விளங்குகிறார் ஆஞ்சநேயர். பொன் மலை போன்ற உடலினை உடையவர். பாற்கடலைக் கடைந்த போது பல உயர்ந்த விஷயங்கள் வெளியே வந்தன. அப்படி வந்தவற்றில் ஒன்று தான் பாரிஜாத மரம். அதை தேவேந்திரன் எடுத்துக் கொண்டான். சத்யபாமா விருப்பப்பட்டதனால் கிருஷ்ண பரமாத்மா அத்தனை அவளுடைய நந்தவனத்தில் கொண்டு வந்து வைத்து வளரச் செய்தார். அத்தகைய உயர்ந்த மரத்தின் அடியில் அமர்ந்திருப்பவர் ஆஞ்சநேயர்.
www.dlshq.org/download/hindufestimg/hanuman.jpg
யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம்
தத்ர தத்ர கருதமஸ்த காஞ்சலிம் |
பாஷ்பவாரி பரிபூர்ண லோசனம்
மாருதீம் நமத ராக்ஷ ஸாந்தகம் ||
எங்கெல்லாம் ஸ்ரீ ராமரது புகழ் பாடப்படுகிறதோ, பேசப்படுகிறதோ அங்கெல்லாம் சிரமேற்கூப்பிய கையுடனும் ஆனந்தக் கண்ணீருடன் தோன்றுபவர் ஹனுமான். ‘ராம் ராம்’ என எங்கெல்லாம் சொல்லப்படுகிறதோ அங்கெல்லாம் நம் கண்களுக்குத் தெரியாமல் ஆஞ்சநேயர் கண்ணீர் மல்க நின்று கேட்பார். அரக்கர்களுக்கு எமனாக விளங்கும் ஆஞ்சநேயரை வணங்குகிறேன் என இத்துதி கூறுகிறது.
yogadharma.files.wordpress.com/2008/12/hanuman-blessing.jpg?w=510
புத்திர்பலம் யசோ தைர்யம்
நிர்பயத்வம் அரோகதாம் |
அஜாட்யம் வாக்படுத்வஞ்ச
ஹனூமத் ஸ்மரணாத் பவேத் ||
புத்தி, பலம், புகழ், உறுதிப்பாடு, அஞ்சாநெஞ்சம், ஆரோக்கியம், சுறுசுறுப்பு, சொல்வன்மை இத்தனையும் தருகிறார் ஆஞ்சநேயர். பொதுவாக இவை எல்லாம் ஒன்றுசேர ஒருவரிடத்தில் இருக்க வாய்ப்பில்லை. ஒன்று இருந்தால் ஒன்று இல்லை. அப்படியில்லாமல் மேற்கண்ட குணங்கள் எல்லாமும் பெற அருள் பொழிகிறார் ஆஞ்சநேயர்..
www.sarnam.com/images/hanuman5.jpg
ஸர்வகல்யாணதாதாரம்
ஸர்வ பாப ப்ராணாசனம் |
அபார கருணாமூர்த்திம் ஆஞ்சநேயம்
நமாம்யஹம் ||
அனைத்து நன்மைகளையும் அருளுபவர் ஆஞ்சநேயர். கருணைக்கடல். பக்தர்களின் பாபங்களை அகற்றுபவர். ராமநாமம் ஜபிப்பவர்கள் அனைவரையும் தடுத்தாட்கொள்பவர்.
அஸாத்ய ஸாதகஸ்வாமின்
அஸாத்யம் தவ கிம் வத |
ராமதூத தயாஸிந்தோ
மத்கார்யம் ஸாதய ப்ரபோ ||
ஆஞ்சநேயரால் செய்ய முடியாத, முடிக்க முடியாத காரியம் என ஒன்றும் இருக்க முடியாது. எத்தகைய அரிய செயல்களையும் இலகுவாக நிகழ்த்தக் கூடியவர். கடலைத் தாண்டி இலங்கைக்குச் சென்று, அசோகவனத்தில் சீதையைக் கண்டு, அவரிடம் மோதிரத்தைக் கொடுத்து, சூடாமணியை வாங்கிக் கொண்டு வந்து ராமரிடம் கொடுத்துத் தன் திறமையை வெளிக் காட்டியவர். அப்படிப்பட்ட திறமை வாய்ந்த மாருதியே, என் வேண்டுகோளையும் நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும்.
நன்றி — வேதாரண்யம் ராமகிருஷ்ண சர்மா தொகுத்த ‘அனுமானின் தியான சுலோகங்கள்’
Sri Kanchi Maha Periva Thiruvadigal Charana
வரம் தருவாய் வாயு மைந்தா !!
ஆஞ்சநேய சுவாமிகளின் விசேஷமே அலாதியானது. இவரை வணங்குவோர் எவ்விதக் குறையும் இல்லாமல், மிகச் சிறப்பாக வாழ்வார்கள். பாரதப் போரில் அர்ஜுனனின் தேர்க் கொடியில் அவர் இருந்ததால் பாண்டவர்களுக்கு வெற்றி கிடைத்தது என்பார்கள். அவரது மகிமையை விளக்கும் சில துதிகள் தொகுக்கப்பட்டுள்ளன.
கோஷ்பதி க்ருதவாராசிம்
மசகீக்க்ருத ராக்ஷஸம் |
ராமாயண மஹாமாலா ||
ரத்னம் வந்தே னீலாத்மஜம்
கடலை குளம்படி போல் செய்தவரும், கொசுக்களை அடித்து அழிப்பது போல் அரக்கர்களை அழித்தவரும், ராமாயணம் எனும் ஒப்பற்ற மாலையின் ரத்னம் போன்று விளங்குபவரும், வாயு பகவானின் புதல்வருமான அனுமனைத் தியானிக்கிறேன் என்று இத்துதி கூறுகிறது. சிரஞ்சீவியான ஆஞ்சநேயரின் அருமை பெருமைகளை, பொருள் பொதிந்த எளிய வார்த்தைகள் மூலம் அவரது பக்தர்கள் புரிந்து கொள்ள இத்துதி பெரிதும் உதவுகிறது.
s.chakpak.com/se_images/15700_-1_564_none/hanuman-2-wallpaper.jpg
உல்லங்க்ய ஸிந்தோ : ஸலீலம் ஸலீலம்
யச்சோகவஹ்னிம்
ஜனகாத்மஜாயா : |
ஆதாய தேனைவ ததாஹ லங்காம்
நமாமி தம்
ப்ராஞ்சலிராஞ்ஜநேயம் ||
சமுத்திரத்தை மிகவும் விளையாட்டாகக் கடந்து, அன்னை ஜானகியின் சோகமென்ற நெருப்பினை எடுத்துக் கொண்டு, அந்த நெருப்பினைக் கொண்டே இலங்கையை அனுமார் எரித்தார். அத்தகைய சாஹஸச்செயல் புரிந்த வாயுபகவானின் மைந்தனை கைகூப்பி வணங்குகிறேன் என இந்தச் ஸ்லோகம் கூறுகிறது.
dhirendra.files.wordpress.com/2009/04/copy-of-lord_hanuman_1.jpg?w=510
ஆஞ்சநேய மதிபாடலானனம்
காஞ்சனாத்ரி கமனீய விக்ரஹம் |
பாரிஜாத தருமூல வாஸினம்
பாவயாமி பவமான நந்தனம் !!
செந்தாமரை போன்ற முகம் உள்ளவராக விளங்குகிறார் ஆஞ்சநேயர். பொன் மலை போன்ற உடலினை உடையவர். பாற்கடலைக் கடைந்த போது பல உயர்ந்த விஷயங்கள் வெளியே வந்தன. அப்படி வந்தவற்றில் ஒன்று தான் பாரிஜாத மரம். அதை தேவேந்திரன் எடுத்துக் கொண்டான். சத்யபாமா விருப்பப்பட்டதனால் கிருஷ்ண பரமாத்மா அத்தனை அவளுடைய நந்தவனத்தில் கொண்டு வந்து வைத்து வளரச் செய்தார். அத்தகைய உயர்ந்த மரத்தின் அடியில் அமர்ந்திருப்பவர் ஆஞ்சநேயர்.
www.dlshq.org/download/hindufestimg/hanuman.jpg
யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம்
தத்ர தத்ர கருதமஸ்த காஞ்சலிம் |
பாஷ்பவாரி பரிபூர்ண லோசனம்
மாருதீம் நமத ராக்ஷ ஸாந்தகம் ||
எங்கெல்லாம் ஸ்ரீ ராமரது புகழ் பாடப்படுகிறதோ, பேசப்படுகிறதோ அங்கெல்லாம் சிரமேற்கூப்பிய கையுடனும் ஆனந்தக் கண்ணீருடன் தோன்றுபவர் ஹனுமான். ‘ராம் ராம்’ என எங்கெல்லாம் சொல்லப்படுகிறதோ அங்கெல்லாம் நம் கண்களுக்குத் தெரியாமல் ஆஞ்சநேயர் கண்ணீர் மல்க நின்று கேட்பார். அரக்கர்களுக்கு எமனாக விளங்கும் ஆஞ்சநேயரை வணங்குகிறேன் என இத்துதி கூறுகிறது.
yogadharma.files.wordpress.com/2008/12/hanuman-blessing.jpg?w=510
புத்திர்பலம் யசோ தைர்யம்
நிர்பயத்வம் அரோகதாம் |
அஜாட்யம் வாக்படுத்வஞ்ச
ஹனூமத் ஸ்மரணாத் பவேத் ||
புத்தி, பலம், புகழ், உறுதிப்பாடு, அஞ்சாநெஞ்சம், ஆரோக்கியம், சுறுசுறுப்பு, சொல்வன்மை இத்தனையும் தருகிறார் ஆஞ்சநேயர். பொதுவாக இவை எல்லாம் ஒன்றுசேர ஒருவரிடத்தில் இருக்க வாய்ப்பில்லை. ஒன்று இருந்தால் ஒன்று இல்லை. அப்படியில்லாமல் மேற்கண்ட குணங்கள் எல்லாமும் பெற அருள் பொழிகிறார் ஆஞ்சநேயர்..
www.sarnam.com/images/hanuman5.jpg
ஸர்வகல்யாணதாதாரம்
ஸர்வ பாப ப்ராணாசனம் |
அபார கருணாமூர்த்திம் ஆஞ்சநேயம்
நமாம்யஹம் ||
அனைத்து நன்மைகளையும் அருளுபவர் ஆஞ்சநேயர். கருணைக்கடல். பக்தர்களின் பாபங்களை அகற்றுபவர். ராமநாமம் ஜபிப்பவர்கள் அனைவரையும் தடுத்தாட்கொள்பவர்.
அஸாத்ய ஸாதகஸ்வாமின்
அஸாத்யம் தவ கிம் வத |
ராமதூத தயாஸிந்தோ
மத்கார்யம் ஸாதய ப்ரபோ ||
ஆஞ்சநேயரால் செய்ய முடியாத, முடிக்க முடியாத காரியம் என ஒன்றும் இருக்க முடியாது. எத்தகைய அரிய செயல்களையும் இலகுவாக நிகழ்த்தக் கூடியவர். கடலைத் தாண்டி இலங்கைக்குச் சென்று, அசோகவனத்தில் சீதையைக் கண்டு, அவரிடம் மோதிரத்தைக் கொடுத்து, சூடாமணியை வாங்கிக் கொண்டு வந்து ராமரிடம் கொடுத்துத் தன் திறமையை வெளிக் காட்டியவர். அப்படிப்பட்ட திறமை வாய்ந்த மாருதியே, என் வேண்டுகோளையும் நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும்.
நன்றி — வேதாரண்யம் ராமகிருஷ்ண சர்மா தொகுத்த ‘அனுமானின் தியான சுலோகங்கள்’
Sri Kanchi Maha Periva Thiruvadigal Charana