|
Post by saidevo on Sept 15, 2015 8:49:51 GMT 5.5
திருப்பறியலூர் [இன்று (கீழ்ப்)பரசலூர்] (அட்டவீரட்டத் தலக்களில் ஒன்று)(அறுசீர் விருத்தம்: விளம் மா தேமா: அரையடி: திருநேரிசை அமைப்பு)திருநேரிசை (நேரிசைக் கொல்லி) அமைப்பு www.thevaaram.org/thirumurai_1/ani/06aaraaichi12.htm1. பொதுவான சீர்மைப்பு: கூவிளம் புளிமா தேமா கூவிளம் புளிமா தேமா 2. அறுசீர்க் கட்டளையடிகள் 3. முதற்சீரும் நான்காம் சீரும் ஒரோவழிக் கருவிளம் ஆவதுண்டு 4. இரண்டாம் ஐந்தாம் சீர்கள் ஒரோவழித் தேமா ஆவதுண்டு 5. மூன்றாம் ஆறாம் சீர்கள் எப்போதும் தேமா. திருநேரிசை விளக்கம் விபுலாநந்த அடிகளாரின் ’யாழ்நூல்’, பக்.217 இந்நூலைத் தரவிறக்க www.noolaham.org/wiki/index.php?title=யாழ் நூல் கோவில் temple.dinamalar.com/New.php?id=510 www.shivatemples.com/sofct/sct041.php பதிகம் சம்பந்தர்: 01.134: கருத்தன் கடவுள் www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=1&Song_idField=11340காப்பு கோட்டத்தில் நர்த்தனராய்க் கோவில்வி நாயகராய் ஆட்டம் நடத்தும் அருளாள! - தாட்டனை வீட்டிய வித்தல வீரட்டே சன்பெருமை பாட்டில்நான் செய்யப் பரி. [தாட்டன் = பெருமைக்காரன், போக்கிரி: இங்கு தட்சன்] பதிகம் (அறுசீர் விருத்தம்: விளம் மா தேமா: அரையடி: திருநேரிசை அமைப்பு) தட்சனும் செருக்குற் றானே . தானெனும் அகந்தை தானே திட்டமாய் அவிசு பாகம் . தில்லையம் பலனுக் கில்லை இட்டமாய் உமையாள் வந்தும் . ஈசனை மதித்தான் இல்லை வெட்டினார் தலையை யீசர் . வீடுறும் பறிய லூரே. ... 1 அன்னையாம் இளமை யம்மை . அத்தனின் மனையாய் இங்கே தன்னிடம் வருவோர்க் கெல்லாம் . தாமதம் இலாத ருள்வாள் நன்னெறி நலத்தில் வாழ . நாடுவோர்க் கின்னல் இல்லை மன்னிய வினைகள் மாண்டே . வீடுறப் பறிய லூரே. ... 2
|
|
|
Post by saidevo on Sept 18, 2015 18:45:14 GMT 5.5
ஆவுடைச் சதுரம் மூலர் . ஆனபை ரவரே வீரம் மேவுபத் திரரென் றாகி . வேள்வியை அழித்தே தக்கன் பாவியின் தலையைக் கொய்தே . பாதமும் அருளி யீசர் தேவரை யொறுத்தே பாவம் . தீய்த்தனர் பறிய லூரே. ... 3
ஆடுகொள் தலையாய்த் தக்கன் . ஆதியை வணங்கும் சிற்பம் மேடுகொள் உருவாய்க் கோட்டம் . மேவிடும் பலவாய்ச் சிற்பம் ஈடுகொள் உருவொன் றில்லா . ஈசரின் வகையாய்ச் சிற்பம் வீடுகொள் அருளும் கிட்ட . வீற்றருள் பறிய லூரே. ... 4
தலமரம் பலவென் றாகும் . தடாகமாய் உத்ர வேதி சிலையெழில் இளங்கொம் பன்னாள் . சிவனெழில் பலவாய்க் காண விலகியே வினைகள் போக . விடையவர் கருணைப் பார்வைத் திலகமாய்த் திகழும் ஊரே . திருப்பறி யலெனும் பேரே. ... 5
[பலவு = பலாமரம்; தடாகம் = குளம்;]
|
|
|
Post by saidevo on Oct 5, 2015 9:03:59 GMT 5.5
உற்சவர் பலராய் மேனி . ஊர்வலம் செலுதற் கென்றே பொற்பதம் மயில்மேல் ஊன்றிப் . போற்றுவோர்க் கருளும் கந்தன் கற்பகத் தருவாம் சோமாஸ் . கந்தரைங் கரனும் என்றே உற்சவர் பலராய்க் காணும் . ஊரெனப் பறிய லூரே. ... 6
[சோமாஸ் கந்தரைங் கரனும் = சோமாஸ்கந்தர், ஐங்கரன்]
காமனை எரித்த கண்ணும் . காலனை உதைத்த காலும் தாமரைக் கடவுள் சென்னி . தட்டிய தலைவன் கையும் நாமெலாம் அவரே யென்னும் . ஞானமும் அருளும் பாதம் சேமமாய் இகத்தில் காண்போர் . சேர்வது பறிய லூரே. ... 7
இராவணன் மலையை ஆட்ட . இராமநா தன்றன் காலின் உராய்ஞ்சலாய் விரலை வைத்தே . ஒறுத்துடன் நாள்-வாள் தந்தார் ஒரோவழி அறம்நின் றாலும் . உறுதியாய் உறவன் ஆகி பராக்கதம் அருளும் ஊரே . பறியலூர் அதனின் பேரே. ... 8
[பராக்கதம் = தைரியம்]
|
|
|
Post by radha on Oct 5, 2015 10:54:42 GMT 5.5
SHIVOHAM SHIVOHAM
திருஞானசம்பந்தர் தேவாரப்பதிகம்
குளிர்ந்தார் சடையன் கொடுஞ்சிலை விற்காமன் விளிந்தா னடங்க வீந்தெய்தச் செற்றான் தெளிந்தார் மறையோர் திருப்பறிய லூரில் மிளிர்ந்தார் மலர்ச்சோலை வீரட்டத் தானே.
திருஞானசம்பந்தர் தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 41வது தலம். IN OUR SOUTH INDIA THERE ARE SO MANY PUNYA SHETRANGALS FOR LORD SHIVA AND HIS ARTHANGI.Almost every village or town there are many Shiva temples and in olden days people used to visit temples with their children both in the morning and evening to pray to GOD/ GODDRESSES.That practice is now waning and our children are denied this DIVYA DARSHAN and there by they do not know our culture,heritage spirituality.It is a sad situation. It is our duty to teach our children in all these matters and take them to various temples and explain to them all the aspects of temple visits
We are indebted to Sri SRIDEVO for posting such useful articles of our ancient temples which have great heritage and history.Let such articles appear in this forum to rekindle awareness in the minds of people
HARA HARA SANKARA JAYA JAYA SANKARA
|
|
|
Post by saidevo on Oct 17, 2015 6:15:50 GMT 5.5
(இறுதிப் பகுதி)
அயனரி அலைய வைத்த . அழலென நிலம்வான் ஆழ்ந்தார் கயலெழும் விழியாள் சேரக் . கடவிடும் சிவனாய் ஆனார் வயவரி உரிவை கொள்வார் . மயலினை நலியச் செய்வார் செயலுறும் மனதில் உண்மை . செழித்திடும் பறிய லூரே. ... 9
[கடவுதல் = செலுத்துதல்; வயவரி = புலி; உரிவை = தோல்]
வேதமில் நெறிகள் யாவும் . வீணென மனதில் கொள்வோர் போதனை எனவே தந்த . பொய்யுரை அனைத்தும் தள்ளி வேதனின் அருளைப் பெற்றே . வேரினை யறிந்தே வாழ்வர் ஓதுவார் அடியார் காணும் . உள்ளொளி பறிய லூரே. ... 10
ஆழியின் நஞ்சைக் கொண்ட . ஆரணன் தாளைப் பற்றி ஊழியம் செய்தே வாழ்ந்து . ஊரெலாம் கண்டே சொன்ன காழியின் பிள்ளை சொல்லைக் . காதுறப் பாடும் உள்ளம் வாழிய வாழ்க வென்றே . வாழ்த்துமூர் பறிய லூரே. ... 11
--ரமணி, 10-13/09/2015, கலி.27/05/5116
*****
|
|
|
Post by radha on Oct 18, 2015 12:37:55 GMT 5.5
OmNamaShivaya
How the name came to this place ?
தட்சன் மிகச்சிறந்த சிவ பக்தன் என்பதால் அவனுக்கு வரம் அளிக்கிறார் சிவன். ஆனால் வரம் பெற்ற கர்வத்தால் சிவனையே மதிக்காமல் யாகம் செய்கிறான். இதனால் கோபம் அடைந்த சிவன் அவனிடமிருந்து வரத்தை பறித்து விடுகிறார். இதனாலேயே இத்தலம் திருப்பறியலூர் ஆனது. சிவனின் மனைவியான தாட்சாயினியின் தந்தை தட்சன். அவன் யாகம் நடத்தும் போது தரப்பட வேண்டிய அவிர்பாகம் என்னும் முதல் மரியாதையைத் தராமல் ஆணவத்துடன் யாகம் நடத்துகிறான்.
தன்னை மதிக்காமல் நடத்திய அந்த யாகத்தில் கலந்து கொண்ட தேவாதி தேவர்களை எல்லாம் அழித்ததுடன் தக்கனையும் வீரபத்திரர் மூலம் தண்டித்த தலமே திருப்பறியலூர் ஆகும். அப்போது சூரியனின் பல் உடைந்தது. இதனால் தான் இத்தலத்தில் சூரியன் தனி சன்னதியில் வீற்றிருந்து சிவனை தினமும் வணங்கி வருகிறார்.
Lord Sivan took back the boon given to Dakshan hence this place is known as " Thirupariyalur"
|
|