|
Post by saidevo on Jul 31, 2015 9:17:11 GMT 5.5
|
|
|
Post by saidevo on Aug 1, 2015 8:25:39 GMT 5.5
கோவிலில் ஈசனவன் கொடிமரமே பின்னுறுமாம் காவிரி யில்வெள்ளம் கரைமீறத் தாய்தவிக்கச் சேய்விரித் தருள்செய்தே சிறுமகளைக் காத்தவனாய்த் தீவிரித் தாடுபவன் திருச்சிராப் பள்ளியிலே. ... 4
தட்சிணா மூர்த்தியென தருப்பைப்புல் மீதமர்ந்தே எட்டுமு னிவர்சூழ இருந்தருள் செய்பவனாம் விட்டக லாவாழை வீற்றிருக்கும் தார்வைத்தே சிட்டனை வழிபடுவர் திருச்சிராப் பள்ளியிலே. ... 5
மன்னனின் நந்தவன மலர்திருட்டால் முனிசெய்த முன்னவன் வழிபாட்டு முறைபிறழ முறையிட்டார் ... ... [முன்னவன் = சிவன்] அன்னவர்க் கருள்செய்தான் அரசவைமேல் மண்மழையால் சின்னமாய் வீற்றிருப்பன் திருச்சிராப் பள்ளியிலே. ... 6
முப்புரம் எரிசெய்தே மூவர்க்கும் அருள்செய்தான் அப்பரின் சூலநோயை அகற்றியே ஆட்கொண்டான் சப்பரம் ஊர்பவனாய்ச் சகலர்க்கும் காட்சிதந்தே தெப்பமும் ஊர்ந்திடுவான் திருச்சிராப் பள்ளியிலே. ... 7
|
|
|
Post by saidevo on Aug 4, 2015 9:03:01 GMT 5.5
(இறுதிப் பகுதி)
வல்லரக் கன்மலையை வலிகரத்தால் அசைத்திடவே கல்லடி யில்தலைகள் கால்விரலால் வீழ்த்தினனே வில்லடி வாங்கியவன் விசயனுக்குக் கணைதந்தான் தில்லையில் ஆடுவபன் திருச்சிராப் பள்ளியிலே. ... 8
புகழ்ந்தனர் அயனரியும் புண்ணியன்தாள் தலைதேடி மகிழ்ந்தனர் அவனடியார் மழுவாளி பதம்நாடி அகழ்ந்தனர் மெய்ப்பொருளை ஆலமர்ந்தான் குருவாகித் திகழ்ந்தனர் பேறுபெற்றுத் திருச்சிராப் பள்ளியிலே. ... 9
ஆரணம் தள்ளிநிற்கும் அவலநெறி யாவையுமே காரணன் நெறியல்ல காரிருளுள் வீழ்த்துவன மாரணம் நேரவரும் மறுபிறப்பின் வினைகளெலாம் சீரணம் செய்தருள்வான் திருச்சிராப் பள்ளியிலே. ... 10
தீநயம் போம்நாமம் திருச்சிராப் பள்ளியென்ற நாநய வேந்தர்பா நாலுமட்டும் இன்றுளவே ஞானசம் பந்தர்பண் ணால்வருமே நன்மையெலாம் தேனயம் பாடுகின்ற திருச்சிராப் பள்ளியிலே. ... 11
[தீநயம் = தீயன நயத்தல்; நாநய வேந்தர் = திருநாவுக்கரசர் தேனயம் பாடுகின்ற = சம்பந்தர் பாடல் சொற்றொடர்: தேன் = வண்டு; நயம் = கனமும் தேசிகமும் கலந்து பாடும் வகை]
--ரமணி, 30/07/2015, கலி.15/04/5116
*****
|
|