Post by Sumi on May 29, 2012 11:32:07 GMT 5.5
Source: Maha Periyavaal Darisana Anubhavangal
Part 6
அறுபது வயதை தாண்டிய பக்தர்.
'எனக்கு அநாயாச மரணம் கிடைக்கணும்' என்று பெரியவாளிடம் விண்ணபித்துகொண்டார்.
அநாயாச மரணம் என்றால், நோய்வாய்ப்பட்டு, பல நாள் படுக்கையில் கிடந்து குடும்பத்தில் உள்ளவர்களுக்கெல்லாம் துன்பம் கொடுத்து, பின் ஒரு வழியாக போய் சேர்வது என்றில்லாமல், சட்டென்று உயிர் போய் விடுவது என்பதாகும்.
'நீங்க தினமும் பூஜை செய்து முடிக்கும் போது சொல்கிற பிராத்தனை சுலோகம் -
அநாயாசேன மரணம் விநா தைன்யேன ஜீவநம்!
தேஹி மே கிருபயா சம்போ த்வயி பக்திம் அசஞ்சலாம் !!
இதை சொல்லிவிட்டு த்ரயம்பக மந்திரம் சொல்லிண்டிருங்கோ..." என்றார்கள், பெரியவாள்.
பக்தர் பிரசாதம் பெற்று கொண்டு காஞ்சிபுரத்தில் அவர் தங்கியிருந்த அறைக்கு போய் கதவை திறந்து நாற்காலியில் உட்காரும் வரை பெரியவாளின் ஆக்ஞைப்படி நடந்துகொண்டார்.
அடுத்த விநாடி, அவர் நாற்காலியில் சாய்ந்து விட்டார்.
அவர் விரும்பியபடி 'அநாயாசமாக' போய் சேர்ந்துவிட்டார்.
Part 6
அறுபது வயதை தாண்டிய பக்தர்.
'எனக்கு அநாயாச மரணம் கிடைக்கணும்' என்று பெரியவாளிடம் விண்ணபித்துகொண்டார்.
அநாயாச மரணம் என்றால், நோய்வாய்ப்பட்டு, பல நாள் படுக்கையில் கிடந்து குடும்பத்தில் உள்ளவர்களுக்கெல்லாம் துன்பம் கொடுத்து, பின் ஒரு வழியாக போய் சேர்வது என்றில்லாமல், சட்டென்று உயிர் போய் விடுவது என்பதாகும்.
'நீங்க தினமும் பூஜை செய்து முடிக்கும் போது சொல்கிற பிராத்தனை சுலோகம் -
அநாயாசேன மரணம் விநா தைன்யேன ஜீவநம்!
தேஹி மே கிருபயா சம்போ த்வயி பக்திம் அசஞ்சலாம் !!
இதை சொல்லிவிட்டு த்ரயம்பக மந்திரம் சொல்லிண்டிருங்கோ..." என்றார்கள், பெரியவாள்.
பக்தர் பிரசாதம் பெற்று கொண்டு காஞ்சிபுரத்தில் அவர் தங்கியிருந்த அறைக்கு போய் கதவை திறந்து நாற்காலியில் உட்காரும் வரை பெரியவாளின் ஆக்ஞைப்படி நடந்துகொண்டார்.
அடுத்த விநாடி, அவர் நாற்காலியில் சாய்ந்து விட்டார்.
அவர் விரும்பியபடி 'அநாயாசமாக' போய் சேர்ந்துவிட்டார்.