Post by radha on Apr 1, 2015 7:41:49 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA,RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA.
KALKI MAGAZINE.
மனிதனுக்கு முதல் கட்டு காரியம். அடுத்த கட்டு எண்ணம். காரியக் கட்டைத் தளர்த்தவேதான் கர்ம யோகம் பெரும்பாலும் பிரயோஜனப்படுகிறது. பயனில் பற்றில்லாமல் செய்வது என்ற மனோபாவத்துடனேயே இந்த யோகம் அனுஷ்டிக்கப்படுவதால், இந்த யோகத்துக்கு ஆதாரமே அந்த மனோபாவமாக இருப்பதால் அந்த அளவுக்கு ஆதாரமே அந்த அளவுக்கு மனசை, அதாவது எண்ணத்தைப் பரிசுத்தி செய்கிறது. ஆனால், இப்படிப் பரிசுத்தி செய்வது அழுக்கைத் துடைக்கிறதோடு சரி; அலங்காரம் பண்ணி அழகுபடுத்துவதாகாது. வீட்டைத் துடைத்து கோமயம் தெளித்துவிட்டால் (இந்த நாளில் “டெட்டால்’ போடுவார்கள்!) போதுமா? அதிலே மணை, விரிப்பு - சோபா என்றே வைத்துக் கொள்ளுங்கள் - போட வேண்டும். ஊதுவத்தி ஏற்றி வைக்கவேண்டும். கோலம் போட வேண்டும். இதே மாதிரி மனசை அழுக்குப் போக வெறுமே துடைத்துவிட்டால் போதாது. அதை நல்ல எண்ணங்களால் நிரப்பி அழகு செய்ய ணேவ்டும். இப்படி அழகு படுத்த கர்மாவால் ஆகாது.
கடைசியில் மனசே போனால்தான் ஆத்மானுபாவம் ஏற்படும் என்பதால் இப்போதே மனசை வெறுமனே பரிசுத்தி பண்ணி வெறிச்சென்று விட்டுவிட்டால் போதும் என்று நினைத்துவிடக்கூடாது. கெட்ட கர்மாவை நல்ல ஸ்வதர்ம கர்மாவால் போக்கிக் கொள் வேண்டுமென்பதுபோலவே, இதுவரை ஜன்மாந்தரமாக எவ்வளவோ கெட்டவற்றை எண்ணவிட்டோமே, அவற்றை நல்ல எண்ணத்தால்தானே போக்கிக் கொள்ள வேண்டும்? சயன்ஸ் சட்டப்படியே ஆக்ஷனுக்கு சமமாய் ரியாக்ஷன் இருந்தாகணுமே! (செயலுக்கு சமமாக எதிர்ச்செயல் பண்ணியாக வேண்டுமே!) இல்லாவிட்டால் விளைவு தீராதே! இம்மாதிரி கெட்ட எண்ணங்களைப் போக்குவதற்கான நல்ல எண்ணங்களை உண்டாக்குவதற்கு கர்மா (கர்ம யோகம்) போதாது.
அதாவது மனஸ் தப்பாக எண்ணுவதைத் திருத்த, சாஸ்திர கர்மா டைரக்டாக உபகாரம் பண்ணாது; பண்ண அதனால் இயலாது. அதன் நேச்சரே அப்படி. கர்மா கர்மாவோடுதான் சம்பந்தப்பட முடியும். கார்ய ரூபத்தில் இஷ்டப்படி செய்ததை சாஸ்திரத்தின் ரூல்படி கார்யரூபமாகச் செய்வது சரிப்படுத்த இயலும். மனசில் நினைப்பையும் நினைக்கிற மனசையும் காரியம் எப்படி சரிசெய்ய முடியும்?
துஷ்காரியத்தை சத்காரியத்தால் சரிசெய்கிறாற்போல கெட்ட நினைப்பை நல்ல நினைப்பால்தான் சரிசெய்ய முடியும். இங்கேதான் அன்பு வருகிறது. நல்ல எண்ணங்களிலெல்லாம் தலை சிறந்தது அன்புதான். அந்த அன்பை சமஸ்த ஜீவராசிகளிடமும் செலுத்த வேண்டும். அத்தனை ஜீவராசிக்கும் மூலாதாரமான பரமாத்மாவிடம் செலுத்தி பக்தி செய்ய வேண்டும்.
- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
KALKI MAGAZINE.
மனிதனுக்கு முதல் கட்டு காரியம். அடுத்த கட்டு எண்ணம். காரியக் கட்டைத் தளர்த்தவேதான் கர்ம யோகம் பெரும்பாலும் பிரயோஜனப்படுகிறது. பயனில் பற்றில்லாமல் செய்வது என்ற மனோபாவத்துடனேயே இந்த யோகம் அனுஷ்டிக்கப்படுவதால், இந்த யோகத்துக்கு ஆதாரமே அந்த மனோபாவமாக இருப்பதால் அந்த அளவுக்கு ஆதாரமே அந்த அளவுக்கு மனசை, அதாவது எண்ணத்தைப் பரிசுத்தி செய்கிறது. ஆனால், இப்படிப் பரிசுத்தி செய்வது அழுக்கைத் துடைக்கிறதோடு சரி; அலங்காரம் பண்ணி அழகுபடுத்துவதாகாது. வீட்டைத் துடைத்து கோமயம் தெளித்துவிட்டால் (இந்த நாளில் “டெட்டால்’ போடுவார்கள்!) போதுமா? அதிலே மணை, விரிப்பு - சோபா என்றே வைத்துக் கொள்ளுங்கள் - போட வேண்டும். ஊதுவத்தி ஏற்றி வைக்கவேண்டும். கோலம் போட வேண்டும். இதே மாதிரி மனசை அழுக்குப் போக வெறுமே துடைத்துவிட்டால் போதாது. அதை நல்ல எண்ணங்களால் நிரப்பி அழகு செய்ய ணேவ்டும். இப்படி அழகு படுத்த கர்மாவால் ஆகாது.
கடைசியில் மனசே போனால்தான் ஆத்மானுபாவம் ஏற்படும் என்பதால் இப்போதே மனசை வெறுமனே பரிசுத்தி பண்ணி வெறிச்சென்று விட்டுவிட்டால் போதும் என்று நினைத்துவிடக்கூடாது. கெட்ட கர்மாவை நல்ல ஸ்வதர்ம கர்மாவால் போக்கிக் கொள் வேண்டுமென்பதுபோலவே, இதுவரை ஜன்மாந்தரமாக எவ்வளவோ கெட்டவற்றை எண்ணவிட்டோமே, அவற்றை நல்ல எண்ணத்தால்தானே போக்கிக் கொள்ள வேண்டும்? சயன்ஸ் சட்டப்படியே ஆக்ஷனுக்கு சமமாய் ரியாக்ஷன் இருந்தாகணுமே! (செயலுக்கு சமமாக எதிர்ச்செயல் பண்ணியாக வேண்டுமே!) இல்லாவிட்டால் விளைவு தீராதே! இம்மாதிரி கெட்ட எண்ணங்களைப் போக்குவதற்கான நல்ல எண்ணங்களை உண்டாக்குவதற்கு கர்மா (கர்ம யோகம்) போதாது.
அதாவது மனஸ் தப்பாக எண்ணுவதைத் திருத்த, சாஸ்திர கர்மா டைரக்டாக உபகாரம் பண்ணாது; பண்ண அதனால் இயலாது. அதன் நேச்சரே அப்படி. கர்மா கர்மாவோடுதான் சம்பந்தப்பட முடியும். கார்ய ரூபத்தில் இஷ்டப்படி செய்ததை சாஸ்திரத்தின் ரூல்படி கார்யரூபமாகச் செய்வது சரிப்படுத்த இயலும். மனசில் நினைப்பையும் நினைக்கிற மனசையும் காரியம் எப்படி சரிசெய்ய முடியும்?
துஷ்காரியத்தை சத்காரியத்தால் சரிசெய்கிறாற்போல கெட்ட நினைப்பை நல்ல நினைப்பால்தான் சரிசெய்ய முடியும். இங்கேதான் அன்பு வருகிறது. நல்ல எண்ணங்களிலெல்லாம் தலை சிறந்தது அன்புதான். அந்த அன்பை சமஸ்த ஜீவராசிகளிடமும் செலுத்த வேண்டும். அத்தனை ஜீவராசிக்கும் மூலாதாரமான பரமாத்மாவிடம் செலுத்தி பக்தி செய்ய வேண்டும்.
- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM