Post by varagooran on Dec 9, 2014 6:22:53 GMT 5.5
"குழந்தைகளின் சுவாமி விளையாட்டும்
பெரியவாளும்".
(இது மிராக்கிளோ அற்புதமோ இல்லாத கட்டுரை)
சொன்னவர்-ஸ்ரீ மடம் பாலு
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
அந்தக் காலத்தில் குழந்தைகள் விளையாட்டில் கூட
நமது சம்பிரதாயங்களின் பிரதிபலிப்பு இருக்கும்.
தற்காலத்திய புதிய விளையாட்டுகள் சமூக வாழ்க்கையில்
புகுந்து மாசுபடுத்தாத காலம்.
அதிலும், கும்பகோணம் போல், ஆலயங்களும்
திருவிழாக்களும்,சுவாமி வீதிவலங்களும் இடைவிடாது
நடைபெற்றுக் கொண்டிருந்த ஊர்களிலிருந்த குழந்தைகளின்
பொழுதுபோக்கு விளையாட்டுகள் எப்படியிருக்கும்?
நிஜமான சுவாமி புறப்பாட்டிலுள்ள அத்தனை
அமர்க்களங்களும் விளையாட்டிலும் உண்டு.
ஒரு கூடை களிமண்ணைக் கொண்டு வந்து, நாலு கைகளைப்
பிசைய விட்டால், சுவாமி தயார் - வெண்ணெய்த் தாழி,
கருட வாகனம்,குதிரை வாகனம் எல்லாம்.!
பூவுக்குப் பஞ்சமில்லை,காவேரிக் கரையோரம்
எத்தனையோ மரங்கள்.
மந்திரத்துக்கு என்ன, பாடசாலையில் கற்றுத் தேறியா
வரவேண்டும்.? சிவாய நமஹ,விஷ்ணுவே நமஹ,
சுப்ரமண்யாய நமஹ,புள்ளையாராய நமஹ..........
"இப்படித்தான், ஒரு சுவாமி,கும்பகோணம் மடத்துத்
தெருவில் பவனி வந்து கொண்டிருந்தார்.!
ஸ்ரீ மடத்தின் எதிரே சுவாமி வந்து நின்றார். யாரும்
எதிர்பார்க்கவில்லை - பெரியவா வெளியே வந்தார்கள்.
சிறு பிள்ளைகள்...ஏதோ விளையாட்டு - என்று
போய்விடவில்லை.
அந்த 'குழந்தை' சுவாமிக்கு, தண்டத்தினால் வந்தனம்
செலுத்தினார்கள்; கைகளால் கும்பிடு போட்டார்கள்.
தேங்காய்,பழம் நிவேதனம் செய்யச் சொன்னார்கள்.
பழம்,கற்கண்டு முதலியவைகளை பையன்களுக்கு
விநியோகம் செய்யச் சொன்னார்கள். பின்,கையைத்
தூக்கி ஆசீர்வதித்து,சுவாமியை மேலே போகவிட்டார்கள்.
குழந்தைகளுக்கோ குஷியோ குஷி!
(த்வாபரத்தில், கோகுலத்து இடைச் சிறுவர்களுடன்
கண்ணபிரான் இப்படித்தான் விளையாடியிருப்பானோ?)
குழந்தைகளின் பக்தியை மதித்து, அது வளர்வதற்கு
ஊக்கமளிக்கப் பெரியவா கையாண்ட தனி வழியல்லவா,இது?
பெரியவா நாள்தோறும், நீண்ட நேரம், ஏகாக்ரமாகப் பூஜை
செய்வது நாம் எல்லாரும் அறிந்ததுதான். அது போலவே,
பிறர் செய்யும் பூஜைகளைக் கூட கௌரவிப்பார்கள்.
ஸ்ரீ மடத்துக்கு வரும் பக்தர்களில், தினசரி பஞ்சாயதன பூஜை
செய்பவர்களும் இருப்பார்கள்.அவர்கள் தனிப்பட்ட முறையில்
செய்யும் பூஜைக்குச் சென்று,அந்தந்த தெய்வங்களைக்
கும்பிடுவார்கள்.
வெளியே செல்லுமிடங்களில், பிள்ளையார் கோவில்
தென்பட்டால் போதும் - இடிந்த கோவில், சின்னக் கோவில்,
ஆகம முறை சாராக் கோவில் - என்ற பாகுபாடெல்லாம்
பார்க்கமாட்டார்கள்.
எல்லாப் பிள்ளையார்களுக்கும் சிதர்க்காய் நிச்சியமாக உண்டு!
பெரியவாளும்".
(இது மிராக்கிளோ அற்புதமோ இல்லாத கட்டுரை)
சொன்னவர்-ஸ்ரீ மடம் பாலு
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
அந்தக் காலத்தில் குழந்தைகள் விளையாட்டில் கூட
நமது சம்பிரதாயங்களின் பிரதிபலிப்பு இருக்கும்.
தற்காலத்திய புதிய விளையாட்டுகள் சமூக வாழ்க்கையில்
புகுந்து மாசுபடுத்தாத காலம்.
அதிலும், கும்பகோணம் போல், ஆலயங்களும்
திருவிழாக்களும்,சுவாமி வீதிவலங்களும் இடைவிடாது
நடைபெற்றுக் கொண்டிருந்த ஊர்களிலிருந்த குழந்தைகளின்
பொழுதுபோக்கு விளையாட்டுகள் எப்படியிருக்கும்?
நிஜமான சுவாமி புறப்பாட்டிலுள்ள அத்தனை
அமர்க்களங்களும் விளையாட்டிலும் உண்டு.
ஒரு கூடை களிமண்ணைக் கொண்டு வந்து, நாலு கைகளைப்
பிசைய விட்டால், சுவாமி தயார் - வெண்ணெய்த் தாழி,
கருட வாகனம்,குதிரை வாகனம் எல்லாம்.!
பூவுக்குப் பஞ்சமில்லை,காவேரிக் கரையோரம்
எத்தனையோ மரங்கள்.
மந்திரத்துக்கு என்ன, பாடசாலையில் கற்றுத் தேறியா
வரவேண்டும்.? சிவாய நமஹ,விஷ்ணுவே நமஹ,
சுப்ரமண்யாய நமஹ,புள்ளையாராய நமஹ..........
"இப்படித்தான், ஒரு சுவாமி,கும்பகோணம் மடத்துத்
தெருவில் பவனி வந்து கொண்டிருந்தார்.!
ஸ்ரீ மடத்தின் எதிரே சுவாமி வந்து நின்றார். யாரும்
எதிர்பார்க்கவில்லை - பெரியவா வெளியே வந்தார்கள்.
சிறு பிள்ளைகள்...ஏதோ விளையாட்டு - என்று
போய்விடவில்லை.
அந்த 'குழந்தை' சுவாமிக்கு, தண்டத்தினால் வந்தனம்
செலுத்தினார்கள்; கைகளால் கும்பிடு போட்டார்கள்.
தேங்காய்,பழம் நிவேதனம் செய்யச் சொன்னார்கள்.
பழம்,கற்கண்டு முதலியவைகளை பையன்களுக்கு
விநியோகம் செய்யச் சொன்னார்கள். பின்,கையைத்
தூக்கி ஆசீர்வதித்து,சுவாமியை மேலே போகவிட்டார்கள்.
குழந்தைகளுக்கோ குஷியோ குஷி!
(த்வாபரத்தில், கோகுலத்து இடைச் சிறுவர்களுடன்
கண்ணபிரான் இப்படித்தான் விளையாடியிருப்பானோ?)
குழந்தைகளின் பக்தியை மதித்து, அது வளர்வதற்கு
ஊக்கமளிக்கப் பெரியவா கையாண்ட தனி வழியல்லவா,இது?
பெரியவா நாள்தோறும், நீண்ட நேரம், ஏகாக்ரமாகப் பூஜை
செய்வது நாம் எல்லாரும் அறிந்ததுதான். அது போலவே,
பிறர் செய்யும் பூஜைகளைக் கூட கௌரவிப்பார்கள்.
ஸ்ரீ மடத்துக்கு வரும் பக்தர்களில், தினசரி பஞ்சாயதன பூஜை
செய்பவர்களும் இருப்பார்கள்.அவர்கள் தனிப்பட்ட முறையில்
செய்யும் பூஜைக்குச் சென்று,அந்தந்த தெய்வங்களைக்
கும்பிடுவார்கள்.
வெளியே செல்லுமிடங்களில், பிள்ளையார் கோவில்
தென்பட்டால் போதும் - இடிந்த கோவில், சின்னக் கோவில்,
ஆகம முறை சாராக் கோவில் - என்ற பாகுபாடெல்லாம்
பார்க்கமாட்டார்கள்.
எல்லாப் பிள்ளையார்களுக்கும் சிதர்க்காய் நிச்சியமாக உண்டு!