Members are requested to read the first post on this link for continuity:
periva.proboards.com/thread/7771/Here are the lyrics of the second song sung by Dr Seerkazhi S Govindarajan. Our special thanks to our respected moderator Sri
anusham163 for taking lot of effort to type this for us, from the original.
தொகையறா.
சந்த்ர சேகரேந்திர சரஸ்வதி திருப்பாதம்
சந்ததம் பணிந்தார்க்கு சர்வமும் க்ஷேமமே
இந்திராதி தேவர் வந்து எழிற்கவரி வீசிநிற்க
நந்தியம்பெருமானும் நல்லாசி தந்தருள
வந்திடும் கைலாசம் வரன் தரும் அரன்விலாசமே.
பாடல்.
காமாட்சித் தாய்மடியில் சீராட்சி புரிந்துவரும்
காமகோடி தரிசனம் காணக்காண புண்ணியம் (காமாட்சி)
தவக்கோலம் தனக்காக தர்மங்கள் நமக்காக
அவதாரத் திருச்செல்வர் அபிராமி அருட்செல்வர் (காமாட்சி)
பாரிஜாத நறுமணம் பரவும்சீர் பாதமே
சதுர்வேத கீதமே சங்கரனைப் பாடுமே
ஹரஹர சங்கர ஜயஜய சங்கர (காமாட்சி)
கோபுரத் திருவுள்ளம் கொடிமரக் கனிவுள்ளம்
திருக்காஞ்சி முனிவுள்ளம் தீபத்தின் ஒளிவெள்ளம்
மவுன நிலையாலே புவனம் முழுதாளும்
சிவனார் திருக்கோலம் சங்கரி புகழ்க்கோலம்
வணங்கிடும் கரமுண்டு வாழ்த்திடும் மனமுண்டு
மணம்தரும் பணிவுண்டு மாரிபோல் அருளுண்டு (காமாட்சி)
Here is the video of the song for members to sing along and enjoy.