Post by varagooran on Oct 30, 2014 8:01:46 GMT 5.5
ஸ்ரீ‘அரசாங்கம் போட்ட சட்டத்தை நாம மதிச்சு நடக்கலேன்னா,
வேறு யாரு மதிப்பா? உடனே போயி அறுபதுக்கு நாற்பதுனு
பிரிச்சிக் குடுத்துட்டு வா!’
நன்றி-பால ஹனுமான்.& கல்கி
காஞ்சி மடத்துக்கும் எங்கள் குடும்பத்துக்கும் சுமார் முந்நூறு வருடங்கள் தொடர்பிருக்கும். பதிமூணு வயசுலேர்ந்து எனக்குப் பரிச்சயம். எங்க கருப்பத்தூர் வீட்லமகா பெரியவா வந்து பத்துப் பதினைஞ்சு நாள் தங்கியிருந்தாங்க. மகாசுவாமிகளோடஅதுலேர்ந்து எனக்கும் என் சகோதரர்களுக்கும் நெருக்கம் அதிகமானது.
சட்டங்களையும் விதிகளையும் நூத்துக்கு நூறு மதிச்சு நடக்கணும்ங்கறதுமகாசுவாமிகளோட கட்டளை. அப்போ தஞ்சாவூர் பண்ணையார் சட்டம் அமலுக்கு வந்த நேரம். அறுபதுக்கு நாற்பதுனு சொல்வாங்க. அதாவது வயல்ல அறுபது சதம் குத்தகைதாரர்க்கு. நாற்பது சதம் நில உரிமையாளருக்கு. ‘குத்தகை தாரர்ட்ட பேசி அவுங்களுக்கு நாப்பது, நமக்கு அறுபதுனு சம்மதம் வாங்கிட்டேன்!’னுமகாசுவாமிகள்ட்ட வந்து சொன்னாரு, கும்பகோணம் மடத்தின் பொறுப்பாளர் பொன்மலை ராமனா தய்யர். உடனே சுவாமிகள், ‘அரசாங்கம் போட்ட சட்டத்தை நாம மதிச்சு நடக்கலேன்னா, வேறு யாரு மதிப்பா? உடனே போயி அறுபதுக்கு நாற்பதுனு பிரிச்சிக் குடுத்துட்டு வா!’னு கட்டளையிட்டார்.
ஒரு தடவை எங்க குடும்பத்துல பதினைஞ்சு பேரு, திருப்பதி கல்யாண உற்சவத்துக்குப் போய்ட்டு கூடைகள் நிறைய பிரசா தங்களோட ஊருக்குத் திரும்பி வர்றோம். அப்படியே காஞ்சி மடத்துக்குப் போயி பெரியவாளை தரிசனம் பண்ணிட்டு வரணும்னு காஞ்சிபுரம் நெருங்குறோம் கார்கள்ல. காஞ்சிக்கு முன்னாடி கார்வேட் நகர் பகுதியில மடத்து ஆட்கள் தென்பட்டாங்க. நாங்க கீழே எறங்கிட்டோம். அங்ஙன பெரிய குளம். சுற்றிலும் கல் படிக்கட்டு. கல் படிக்கட்டு ஒண்ணுல மகா பெரியவா இடையிலஒற்றைத் துணியோட சரீரம் நீட்டிப் படுத்திருந்தாங்க. உச்சி வெயில். அந்தக் கல் படிகள்ல வெறுங்காலால எங்களால நிக்கவே முடியலை. சுவாமிகள் எப்படித் துணிகள் போர்த்தாத சரீரத்தோட, மண்டையப் பிளக்குற உச்சிவெயில்ல இந்தக் கல் தரையில படுத்திருக்காங்கனு தெரியலை. கொஞ்ச நேரத்துல எழுந்து ஒக்காந்தாங்க. யார்ட்ட யும் எதுவும் பேசலை. அந்த நேரத்துல ஒரு குடும்பத்துல நாலைஞ்சு பேரு வந்துசுவாமிகள்ட்ட ‘நாங்க திருப்பதி போய் வரணும்னு பல தடவையா முயற்சிக்கறோம். கைகூடி வரலை’ன்னு முறையிடுறாங்க. அஞ்சு நிமிஷம் பரம அமைதி அந்த எடத்துல. வந்த வங்க ‘கோவிந்தா’ கோஷம் போட்டபடி சுவாமிகளச் சுத்தி வலம்வரத் தொடங்கிட்டாங்க. மகாசுவாமிகள், அவுங்க கண்களுக்குத் திருமலைக் கோபுரமாகவும் வெங்கடாஜலபதியாகவும் தெரிஞ்சிருக்காங்க. மெய்யுணர்வு தரிசனம் அது!” எனச் சொல்கிறார் கருப்பத்தூர் ப.சுந்தரேசன்.
செய்தி, ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு
–நன்றி கல்கி
வேறு யாரு மதிப்பா? உடனே போயி அறுபதுக்கு நாற்பதுனு
பிரிச்சிக் குடுத்துட்டு வா!’
நன்றி-பால ஹனுமான்.& கல்கி
காஞ்சி மடத்துக்கும் எங்கள் குடும்பத்துக்கும் சுமார் முந்நூறு வருடங்கள் தொடர்பிருக்கும். பதிமூணு வயசுலேர்ந்து எனக்குப் பரிச்சயம். எங்க கருப்பத்தூர் வீட்லமகா பெரியவா வந்து பத்துப் பதினைஞ்சு நாள் தங்கியிருந்தாங்க. மகாசுவாமிகளோடஅதுலேர்ந்து எனக்கும் என் சகோதரர்களுக்கும் நெருக்கம் அதிகமானது.
சட்டங்களையும் விதிகளையும் நூத்துக்கு நூறு மதிச்சு நடக்கணும்ங்கறதுமகாசுவாமிகளோட கட்டளை. அப்போ தஞ்சாவூர் பண்ணையார் சட்டம் அமலுக்கு வந்த நேரம். அறுபதுக்கு நாற்பதுனு சொல்வாங்க. அதாவது வயல்ல அறுபது சதம் குத்தகைதாரர்க்கு. நாற்பது சதம் நில உரிமையாளருக்கு. ‘குத்தகை தாரர்ட்ட பேசி அவுங்களுக்கு நாப்பது, நமக்கு அறுபதுனு சம்மதம் வாங்கிட்டேன்!’னுமகாசுவாமிகள்ட்ட வந்து சொன்னாரு, கும்பகோணம் மடத்தின் பொறுப்பாளர் பொன்மலை ராமனா தய்யர். உடனே சுவாமிகள், ‘அரசாங்கம் போட்ட சட்டத்தை நாம மதிச்சு நடக்கலேன்னா, வேறு யாரு மதிப்பா? உடனே போயி அறுபதுக்கு நாற்பதுனு பிரிச்சிக் குடுத்துட்டு வா!’னு கட்டளையிட்டார்.
ஒரு தடவை எங்க குடும்பத்துல பதினைஞ்சு பேரு, திருப்பதி கல்யாண உற்சவத்துக்குப் போய்ட்டு கூடைகள் நிறைய பிரசா தங்களோட ஊருக்குத் திரும்பி வர்றோம். அப்படியே காஞ்சி மடத்துக்குப் போயி பெரியவாளை தரிசனம் பண்ணிட்டு வரணும்னு காஞ்சிபுரம் நெருங்குறோம் கார்கள்ல. காஞ்சிக்கு முன்னாடி கார்வேட் நகர் பகுதியில மடத்து ஆட்கள் தென்பட்டாங்க. நாங்க கீழே எறங்கிட்டோம். அங்ஙன பெரிய குளம். சுற்றிலும் கல் படிக்கட்டு. கல் படிக்கட்டு ஒண்ணுல மகா பெரியவா இடையிலஒற்றைத் துணியோட சரீரம் நீட்டிப் படுத்திருந்தாங்க. உச்சி வெயில். அந்தக் கல் படிகள்ல வெறுங்காலால எங்களால நிக்கவே முடியலை. சுவாமிகள் எப்படித் துணிகள் போர்த்தாத சரீரத்தோட, மண்டையப் பிளக்குற உச்சிவெயில்ல இந்தக் கல் தரையில படுத்திருக்காங்கனு தெரியலை. கொஞ்ச நேரத்துல எழுந்து ஒக்காந்தாங்க. யார்ட்ட யும் எதுவும் பேசலை. அந்த நேரத்துல ஒரு குடும்பத்துல நாலைஞ்சு பேரு வந்துசுவாமிகள்ட்ட ‘நாங்க திருப்பதி போய் வரணும்னு பல தடவையா முயற்சிக்கறோம். கைகூடி வரலை’ன்னு முறையிடுறாங்க. அஞ்சு நிமிஷம் பரம அமைதி அந்த எடத்துல. வந்த வங்க ‘கோவிந்தா’ கோஷம் போட்டபடி சுவாமிகளச் சுத்தி வலம்வரத் தொடங்கிட்டாங்க. மகாசுவாமிகள், அவுங்க கண்களுக்குத் திருமலைக் கோபுரமாகவும் வெங்கடாஜலபதியாகவும் தெரிஞ்சிருக்காங்க. மெய்யுணர்வு தரிசனம் அது!” எனச் சொல்கிறார் கருப்பத்தூர் ப.சுந்தரேசன்.
செய்தி, ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு
–நன்றி கல்கி