Post by varagooran on Oct 12, 2014 11:02:40 GMT 5.5
"கேட்ட வரம் எழுதியவருக்குக்கேட்ட வரம் கிடைத்துவிட்டது."
பரமாச்சாரியார் பாராட்டிய நாவல்!
— திருப்பூர் கிருஷ்ணன்
–நன்றி கல்கி & பால ஹனுமான்.
பத்மநாபனை 12 வயதிலேயே கைப்பிடித்து புகுந்த வீடு வந்துவிட்டவர் ராஜேஸ்வரி. மாமனாருக்கு அவர் மகள் மாதிரி. மாமனாரிடம் முதல் சிறுகதையைப் படிக்கக் கொடுத்தார். தலைப்பு: ‘ஒரே ஒரு வார்த்தை’. கதையைப் படித்த மாமனார் சொன்ன ஒரே வார்த்தை: ‘பலே!’ லலிதா சஹஸ்ரநாமத்திலிருந்து அநுத்தமா என்ற பெயரைச் செல்ல மருமகளுக்குப் புனைபெயராகச் சூட்டினார். அதன்பின் அநுத்தமா எழுதிக் குவிக்கலானார்.
அநுத்தமாவின் ஆங்கிலப் புலமை அபாரமானது. கற்பித்தவர் கணவர் பத்மநாபன். தி. ஜானகிராமன் காலமானபின் சென்னையில் நடந்த தமிழ் எழுத்தாளர் சங்க இரங்கல் கூட்டத்தில், பல வெளிநாட்டினர் வந்திருந்தார்கள். அப்போது சி.சு.செல்லப்பா, க.நா.சு., நா.பா. முன்னிலையில் தி.ஜா. பற்றி அரைமணி நேரம் ஆங்கிலத்தில் உரையாற்றினார்அநுத்தமா.
தன் எழுத்தை வளர்த்த கி.வா.ஜ. மேல் அநுத்தமாவுக்கு, அளவற்ற பக்தி. கி.வா.ஜ.அநுத்தமாவைத் தங்கை என்றே அறிமுகப்படுத்துவார். ஒருமுறை, கலைமகளுக்கு ஒரு நாவல் தரமுடியுமா என்று கேட்டார் கி.வா.ஜ. அநுத்தமா ஒப்புக்கொண்டார். ‘எத்தனை நாட்களில் தரமுடியும்?’ என்று கி.வா.ஜ. கேட்டதற்கு, ‘பத்து நாட்களில்!’ என்று வாய்தவறிச் சொல்லிவிட்டார்! பத்மநாபன் ‘அது என்னமாக ஒரு முழு நாவலைப் பத்துநாளில் உன்னால் எழுத முடியும்? பெரியவரிடம் வாக்குக் கொடுத்து விட்டாயே?’ என்று அங்கலாய்த்தார்.
அன்றிரவே எழுத ஆரம்பித்தார் அநுத்தமா. எழுத எழுத அந்தக் காகிதங்களிலேயே திருத்தி, கணவரிடம் கொடுப்பார். மனைவி புதிய பக்கங்களை எழுதிக் கொண்டிருக்கும்போதே, ஏற்கெனவே எழுதித் திருத்திய பக்கங்களைக் கணவர் பிரதியெடுப்பார். சொன்னசொல் தவறாமல் பத்தே நாளில் நாவலைக் கொடுத்தபோதுகி.வா.ஜ. அசந்து போனாராம். கி.வா.ஜ. பற்றிப் பேசும்போது அநுத்தமாவின் விழிகள் பாசத்தால் மின்னும். ‘மணல்வீடு, நைந்த உள்ளம், தவம், நல்லதோர் வீணை, வேப்பமரத்து பங்களா, அங்கயற் கண்ணி’ என அநுத்தமா எழுதிய எல்லாம் குடும்பக் கதைகளே. ‘சமையலுக்கும் நாவல்களுக்கும் அடுக்களையிலிருந்தே பாத்திரங்களை எடுக்கிறீர்களே?’ என்று பாராட்டுவாராம் அகிலன்.
பரமாச்சாரியார் பாராட்டிய நாவல் அவரது ‘கேட்ட வரம்’. கேட்ட வரம் பாளையம் என்ற ஊரில் நடைபெறும் பஜனை சம்பிரதாய நெறி பற்றிப் பேசும் நாவல்.
சோர்வு வரும்போதெல்லாம் தம்மை உற்சாகப்படுத்திய ஆர்.சூடாமணி அண்மையில் காலமானபோது, அநுத்தமா மனம் தளர்ந்தார். அநாயாச மரணம் கிட்டவேண்டும் என்பது அவர் பிரார்த்தனை. டிசம்பர் 3 இரவு 8.44 வரை நன்றாகப் பேசிக்கொண்டிருந்தவர், 8.45 க்குக் காலமாகிவிட்டார். கேட்ட வரம் எழுதியவருக்குக்கேட்ட வரம் கிடைத்துவிட்டது.
––நன்றி கல்கி
பரமாச்சாரியார் பாராட்டிய நாவல்!
— திருப்பூர் கிருஷ்ணன்
–நன்றி கல்கி & பால ஹனுமான்.
பத்மநாபனை 12 வயதிலேயே கைப்பிடித்து புகுந்த வீடு வந்துவிட்டவர் ராஜேஸ்வரி. மாமனாருக்கு அவர் மகள் மாதிரி. மாமனாரிடம் முதல் சிறுகதையைப் படிக்கக் கொடுத்தார். தலைப்பு: ‘ஒரே ஒரு வார்த்தை’. கதையைப் படித்த மாமனார் சொன்ன ஒரே வார்த்தை: ‘பலே!’ லலிதா சஹஸ்ரநாமத்திலிருந்து அநுத்தமா என்ற பெயரைச் செல்ல மருமகளுக்குப் புனைபெயராகச் சூட்டினார். அதன்பின் அநுத்தமா எழுதிக் குவிக்கலானார்.
அநுத்தமாவின் ஆங்கிலப் புலமை அபாரமானது. கற்பித்தவர் கணவர் பத்மநாபன். தி. ஜானகிராமன் காலமானபின் சென்னையில் நடந்த தமிழ் எழுத்தாளர் சங்க இரங்கல் கூட்டத்தில், பல வெளிநாட்டினர் வந்திருந்தார்கள். அப்போது சி.சு.செல்லப்பா, க.நா.சு., நா.பா. முன்னிலையில் தி.ஜா. பற்றி அரைமணி நேரம் ஆங்கிலத்தில் உரையாற்றினார்அநுத்தமா.
தன் எழுத்தை வளர்த்த கி.வா.ஜ. மேல் அநுத்தமாவுக்கு, அளவற்ற பக்தி. கி.வா.ஜ.அநுத்தமாவைத் தங்கை என்றே அறிமுகப்படுத்துவார். ஒருமுறை, கலைமகளுக்கு ஒரு நாவல் தரமுடியுமா என்று கேட்டார் கி.வா.ஜ. அநுத்தமா ஒப்புக்கொண்டார். ‘எத்தனை நாட்களில் தரமுடியும்?’ என்று கி.வா.ஜ. கேட்டதற்கு, ‘பத்து நாட்களில்!’ என்று வாய்தவறிச் சொல்லிவிட்டார்! பத்மநாபன் ‘அது என்னமாக ஒரு முழு நாவலைப் பத்துநாளில் உன்னால் எழுத முடியும்? பெரியவரிடம் வாக்குக் கொடுத்து விட்டாயே?’ என்று அங்கலாய்த்தார்.
அன்றிரவே எழுத ஆரம்பித்தார் அநுத்தமா. எழுத எழுத அந்தக் காகிதங்களிலேயே திருத்தி, கணவரிடம் கொடுப்பார். மனைவி புதிய பக்கங்களை எழுதிக் கொண்டிருக்கும்போதே, ஏற்கெனவே எழுதித் திருத்திய பக்கங்களைக் கணவர் பிரதியெடுப்பார். சொன்னசொல் தவறாமல் பத்தே நாளில் நாவலைக் கொடுத்தபோதுகி.வா.ஜ. அசந்து போனாராம். கி.வா.ஜ. பற்றிப் பேசும்போது அநுத்தமாவின் விழிகள் பாசத்தால் மின்னும். ‘மணல்வீடு, நைந்த உள்ளம், தவம், நல்லதோர் வீணை, வேப்பமரத்து பங்களா, அங்கயற் கண்ணி’ என அநுத்தமா எழுதிய எல்லாம் குடும்பக் கதைகளே. ‘சமையலுக்கும் நாவல்களுக்கும் அடுக்களையிலிருந்தே பாத்திரங்களை எடுக்கிறீர்களே?’ என்று பாராட்டுவாராம் அகிலன்.
பரமாச்சாரியார் பாராட்டிய நாவல் அவரது ‘கேட்ட வரம்’. கேட்ட வரம் பாளையம் என்ற ஊரில் நடைபெறும் பஜனை சம்பிரதாய நெறி பற்றிப் பேசும் நாவல்.
சோர்வு வரும்போதெல்லாம் தம்மை உற்சாகப்படுத்திய ஆர்.சூடாமணி அண்மையில் காலமானபோது, அநுத்தமா மனம் தளர்ந்தார். அநாயாச மரணம் கிட்டவேண்டும் என்பது அவர் பிரார்த்தனை. டிசம்பர் 3 இரவு 8.44 வரை நன்றாகப் பேசிக்கொண்டிருந்தவர், 8.45 க்குக் காலமாகிவிட்டார். கேட்ட வரம் எழுதியவருக்குக்கேட்ட வரம் கிடைத்துவிட்டது.
––நன்றி கல்கி