மாவித்விஷாவஹை'
(பெரியவாளின் விளக்கம்)
சொன்னவர்; டாக்டர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள்.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.
மஹாகாவ் முகாமில் பல வித்வான்கள் கூடிய
ஸபையில், ஸபை ஆரம்பிக்கும் நேரம், பெரியவாளோ,
A. சிவராமகிருஷ்ண சாஸ்திரிகளை அழைத்து,
"ஸஹநாவவது- மந்திரத்தின் பாஷ்யம் சொல்லு"என்றார்.
அவர் அர்த்தம் கூறி முடித்ததும் பெரியவாளின்
ஸம்பாஷணை-
பெரியவாள்: " 'மாவித்விஷாவஹை' (குருவும் நானும்
ஒருவருக்கொருவர் த்வேஷம் கொள்ளாமல்
இருத்தல் வேண்டும் என்று ப்ரார்த்தனை) எப்படி?
குரு ஞானியாதலால் ஞானிக்கு சிஷ்யனிடம்
த்வேஷம் வருமா? த்வேஷமிருந்தால் ஞானியா?
பாஷ்யத்தில் Exact ஆக என்ன உள்ளது?
யாவரும் மௌனம்.
பெரியவாள்:- புத்தகம் கொண்டு வந்து பார்.
புத்தகம் வந்ததும் படிக்கப்பட்டது -
"குருவிற்கும் சிஷ்யனுக்கும் ப்ரமாதத்தினால்
உண்டான த்வேஷம் வேண்டாம்"
பெரியவாள்: ஓஹோ? தட்டுகிட்டு நினைப்பதுதானே
ப்ரமாதம்? சிஷ்யன் தட்டுகிட்டு தன் குருவிற்கு
த்வேஷம் தன்னிடம் இருப்பதாக ஏமாந்து
நினைத்தானோ? பூர்ணமான ஞானிக்கு த்வேஷம்
வரமுடியாதே!
ஏமாந்து போய்க்கூட ஞானிக்கு த்வேஷம்
வந்ததாகக் கூறுவது ஸரியில்லை!
த்வேஷமிருப்பதாக சிஷ்யனின் பக்கம்தான்
ஏமாற்றம்னு வைக்க வேண்டும்.
"தத்ர கோ மோஹ: கச்சோக:"
என்று 'சோகமோஹமற்றவனல்லவோ ஞானி?
மோஹம் தானே த்வேஷத்தின் மூலகாரணம்.'
வேரின்றி மரமுண்டோ?
Attachments: