Post by suryanarayan on Sept 1, 2014 13:34:30 GMT 5.5
ஸ்ரீ மடத்தின்பால் மிகவும் பக்தியுடைய தம்பதி. அடிக்கடி வந்து பிக்ஷாவந்தனம் செய்பவர்கள்.
பிற்பகல் இரண்டு மணி இருக்கும்.
பெரியவா பிக்ஷை செய்து விட்டு, சற்று ஓய்வெடுக்கும் நேரத்தில் தம்பதியைக் கூப்பிடச் சொன்னார்கள் . அவர்கள் வந்ததும், "ஆகாரம் ஆயிற்றா?" என்று கேட்டார்கள்.
"மடத்தில் வாழையிலை இல்லை என்று மந்தாரையிலை கொடுத்தார்கள். நாங்கள் கயையில் மந்தாரையிலையை விட்டு விட்டோம். அதனால் சாப்பிடவில்லை. ஸ்வயம்பாகம் பண்ணியது அப்படியே இருக்கிறது.."
ஆசாரங்களைத் தீவிரமாகக் கடைப்பிடிக்கும் அந்தத் தம்பதி, வெளியில் எங்கும் சாப்பிடுவது இல்லை. மடத்துக்கு வந்தால் கூட, தனியே சமைத்துத் தான் சாப்பிடுவார்கள்.
"அப்போ என்ன செய்வதாக உத்தேசம்?"
"நானே கடைத்தெருவுக்குப் போய் வந்தால் மடிக்குறைவு வந்துடும்.. அப்புறம் சாப்பிட முடியாது.. அதனாலே இன்னிக்கு உபவாசம்.."
பெரியவாளுக்கு மகா கோபம் வந்துவிட்டது.
உடனே எழுந்து உக்கிராணத்துக்கு (சமையற்கட்டுக்குப்) போனார்கள். அங்கே - பொறுப்பிலிருந்த தொண்டரிடம், "வாழையிலை கட்டுக்கட்டாக இருக்கு. ஏன் இவருக்கு இல்லேன்னுட்டே?" என்று கேட்டார்கள்.
சமையற் பணியாளர் என்ன பதில் சொல்லுவார் ? பேந்தப் பேந்த விழித்துக் கொண்டு நின்றார்.
பெரியவாள் கோபம் எல்லை கடந்து போயிற்று. மானேஜரை அழைத்து வருவதற்கு ஒரு சிஷ்யரைத் துரத்தினார்கள்.
அவர் வேகமாக வந்தார்.
"இந்தாங்கோ, உங்க மடம். நீங்களே எடுத்துக்குங்கோ . எனக்கு மடமும் வேண்டாம். இடமும் வேண்டாம். "
"ரொம்ப நாளா மடத்துக்குப் பக்தர். அவருக்கு ஒரு வாழையிலை கொடுக்க முடியல்லேன்னா எனக்கு என்ன மடாதிபத்யம்? " (மடாதிபதி என்ற பெயர்!)
பெரிய மானேஜர் ரொம்பவும் அடக்கமானவர். சிறிது நேரம் பேசாமலிருந்தார். பிறகு கன்னடத்தில் "ஏதோ தவறு நடந்துவிட்டது. இங்கே வேலை பார்ப்பவர்கள் ஏழைகள். படிப்பறிவில்லாதவர்கள், தராதரம் தெரியாதவர்கள். அவர்கள் செய்யும் தவறுகளை மன்னித்து விடுவது தான் மகான்களின் லட்சணம்... பெரியவா கோபித்துக் கொண்டு மடத்தை விட்டுப் போறேன் என்று என் தலையில் கட்டினால், நான் என்ன செய்வேன்? நான் எங்கே போகிறது?.. இப்போது இந்த பக்தருக்கு , நானே என் கையால் நாலு இலை எடுத்துக் கொடுத்து விடுகிறேன்.. என்றார்.
பெரியவா பட்டென்று சிறிது விட்டார்கள். "சரி, சரி.. போய் வேலையைப் பாருங்கோ.." என்று சொல்லி அனுப்பி வைத்தார்கள்.
ஸ்வயம் பாகம் அன்பருக்கு அப்புறம் ஏராளமாக வாழையிலை கிடைத்தது!
பிற்பகல் இரண்டு மணி இருக்கும்.
பெரியவா பிக்ஷை செய்து விட்டு, சற்று ஓய்வெடுக்கும் நேரத்தில் தம்பதியைக் கூப்பிடச் சொன்னார்கள் . அவர்கள் வந்ததும், "ஆகாரம் ஆயிற்றா?" என்று கேட்டார்கள்.
"மடத்தில் வாழையிலை இல்லை என்று மந்தாரையிலை கொடுத்தார்கள். நாங்கள் கயையில் மந்தாரையிலையை விட்டு விட்டோம். அதனால் சாப்பிடவில்லை. ஸ்வயம்பாகம் பண்ணியது அப்படியே இருக்கிறது.."
ஆசாரங்களைத் தீவிரமாகக் கடைப்பிடிக்கும் அந்தத் தம்பதி, வெளியில் எங்கும் சாப்பிடுவது இல்லை. மடத்துக்கு வந்தால் கூட, தனியே சமைத்துத் தான் சாப்பிடுவார்கள்.
"அப்போ என்ன செய்வதாக உத்தேசம்?"
"நானே கடைத்தெருவுக்குப் போய் வந்தால் மடிக்குறைவு வந்துடும்.. அப்புறம் சாப்பிட முடியாது.. அதனாலே இன்னிக்கு உபவாசம்.."
பெரியவாளுக்கு மகா கோபம் வந்துவிட்டது.
உடனே எழுந்து உக்கிராணத்துக்கு (சமையற்கட்டுக்குப்) போனார்கள். அங்கே - பொறுப்பிலிருந்த தொண்டரிடம், "வாழையிலை கட்டுக்கட்டாக இருக்கு. ஏன் இவருக்கு இல்லேன்னுட்டே?" என்று கேட்டார்கள்.
சமையற் பணியாளர் என்ன பதில் சொல்லுவார் ? பேந்தப் பேந்த விழித்துக் கொண்டு நின்றார்.
பெரியவாள் கோபம் எல்லை கடந்து போயிற்று. மானேஜரை அழைத்து வருவதற்கு ஒரு சிஷ்யரைத் துரத்தினார்கள்.
அவர் வேகமாக வந்தார்.
"இந்தாங்கோ, உங்க மடம். நீங்களே எடுத்துக்குங்கோ . எனக்கு மடமும் வேண்டாம். இடமும் வேண்டாம். "
"ரொம்ப நாளா மடத்துக்குப் பக்தர். அவருக்கு ஒரு வாழையிலை கொடுக்க முடியல்லேன்னா எனக்கு என்ன மடாதிபத்யம்? " (மடாதிபதி என்ற பெயர்!)
பெரிய மானேஜர் ரொம்பவும் அடக்கமானவர். சிறிது நேரம் பேசாமலிருந்தார். பிறகு கன்னடத்தில் "ஏதோ தவறு நடந்துவிட்டது. இங்கே வேலை பார்ப்பவர்கள் ஏழைகள். படிப்பறிவில்லாதவர்கள், தராதரம் தெரியாதவர்கள். அவர்கள் செய்யும் தவறுகளை மன்னித்து விடுவது தான் மகான்களின் லட்சணம்... பெரியவா கோபித்துக் கொண்டு மடத்தை விட்டுப் போறேன் என்று என் தலையில் கட்டினால், நான் என்ன செய்வேன்? நான் எங்கே போகிறது?.. இப்போது இந்த பக்தருக்கு , நானே என் கையால் நாலு இலை எடுத்துக் கொடுத்து விடுகிறேன்.. என்றார்.
பெரியவா பட்டென்று சிறிது விட்டார்கள். "சரி, சரி.. போய் வேலையைப் பாருங்கோ.." என்று சொல்லி அனுப்பி வைத்தார்கள்.
ஸ்வயம் பாகம் அன்பருக்கு அப்புறம் ஏராளமாக வாழையிலை கிடைத்தது!