|
Post by soundaryasatheesh on Aug 10, 2014 14:16:39 GMT 5.5
நாத்திகரும் போற்றும் நாயகனாய் நின்றாய் சங்கரா!! "நான் இருக்கேன்" என்று சொன்ன நாதன் நீ சங்கரா !! நல்லோர் மட்டும் அல்ல தீயோரையும் திருத்தி காக்கவே நீ அவதரித்தாய் சங்கரா!! நான்கு மறைகளையும் நிலை நாட்டவே நீ நடையாய் நடந்தாய் சங்கரா!! நடமாடும் உயிரினங்கள் மட்டும் இன்றி உயிரற்ற அனைத்துக்கும் நீ குருவானாய் சங்கரா!! நண்பனுக்கு நண்பனாய் அன்பனுக்கு அன்பனாய் எம்மை அரவணைத்து சென்றாயே சங்கரா!! நவநீதம் போல் மதுரமாய் இருக்கும் உந்தன் மொழி கேட்டு நிலை கொள்ளாமல் உன் பின்னே அலைந்தேனே சங்கரா!! நல்லதையே நாளும் உரைத்து, அதன் படியே வழுவாமல் நின்று காட்டி, நன்மை அதை பரப்பி நல்லவனுக்கு நல்லவனானாய் சங்கரா!! நடமாடும் தெய்வமாய் வந்து, எங்கள் நலனுக்காக நாளும் பல நாடங்கள் நடத்தும் நவரச நடிகனானாய் சங்கரா!! நீ இருக்கும் இடம் தேடி ஓட துடிக்கும் எந்தன் மனமும், சற்றே அமைதி கொள்வதே நீ அங்கே குடியிருப்பதால் தானே சங்கரா!! நெஞ்சமெல்லாம் உன்னையே நிறைத்து, இடம் போதாமல் நிரம்பி வழிய என்னுள் என்னுள் எங்கும் பிரவாகம் எடுத்து நீயே நிறைந்தாய் சங்கரா!! “நீ இன்றி நான் இல்லை” என்பது தான் உண்மை என உரக்க சொல்வேன் சங்கரா!! நீ இருக்கும் அந்த இடம் மட்டுமே சொர்கம் எனக்கு சங்கரா!! நீ இன்றி இருக்கும் சொர்க்கம் கூட எனக்கு நரகத்தை விட மோசம் தானே சத்தியம் இது சங்கரா!! நீ என்னுடன் இருக்கும் ஒவ்வொரு நொடியும் நூறு யுகங்களாய் மாறவேண்டும் சங்கரா!! நீ இன்றி இருக்கும் ஒரு நொடி கூட நான் இருக்க தேவை இல்லை சங்கரா!! நீ வேண்டும் நீ வேண்டும் நீ மட்டுமே வேண்டும் என வேண்டி நின்றேன் சங்கரா!! "நான் உன்னுள் தானே நாளும் இருக்கிறேன்" என்று சொல்லி சிரிக்கிறாயே சங்கரா!! பெரியவா சரணம்!!
|
|
|
Post by kahanam on Aug 10, 2014 19:26:56 GMT 5.5
"நீ வேண்டும் நீ வேண்டும் நீ மட்டுமே வேண்டும் என வேண்டி நின்றேன் சங்கரா!! "நான் உன்னுள் தானே நாளும் இருக்கிறேன்" என்று சொல்லி சிரிக்கிறாயே சங்கரா!!"
What a Divine Play? Hara Hara Shankara, Jaya Jaya Shankara!
|
|
|
Post by soundaryasatheesh on Aug 10, 2014 22:23:42 GMT 5.5
Humble thanks sir!! Periyavaa sharanam!!
|
|