Post by anusham163 on Aug 7, 2014 15:05:03 GMT 5.5
Dear members,
This Tamil article penned by Sri Ra.Ganapathy, explains in his own words how he, a non—believer in idol worship, in ‘Karmanushtanam’, in paying obeisance to a Guru, and in everything that MahaPeriava asked all of us to follow, was MOMENTARILY transformed into a ‘saint disciple’ (if I may use this phrase) of the Acharya. It is so astonishing that a mere glance by the Guru is capable of totally transforming a person. If Dr.Sundararaman (‘that son of Duraiswamy’) was nurtured with an abundance of Anugraha in his worldly (லௌகீகம் ) life, Ra.Ganapathy was equally abundantly blessed by Periava in ‘ஆன்மிகம்’. But for those blissful moments in the year 1957, we would not have got the seven volumes of ‘Deyvaththin Kural’ and the many more books he has penned about MahaPeriava He has very aptly titled it as ‘தடுத்தாட் கொண்ட புராணம்’. This article is from the book, ‘கருணைக் கடலில் சில அலைகள்’, published by ‘திவ்ய வித்யா பதிப்பகம்’.
தடுத்தாட்கொண்ட புராணம்.
ரா.கணபதி.
1957 மத்தி, அப்போதுதான் ஸ்ரீ சரணர்களின் முதல் தரிசனம் பெற்றது. ஆனால், ‘தர்சனம்’ என்ற பக்தி பாவத்துடனா போனேன்? இல்லவேயில்லை. வேண்டா வெறுப்பாகப் போனேன்.
குழந்தைப் பிராயத்திலிருந்து இருந்து வந்த தெய்வ ஈடுபாடும் மதாசார நம்பிக்கையும் இதற்கு ஒன்பது வருஷத்திற்கு முன்பிருந்து, அதாவது என் பதின்மூன்றாம் வயதிலிருந்து ஏனோ, எப்படியோ சுவறியே போய் விட்டன ! ஜே.கே பெயர் கூட கேள்விப்பட்டிராத காலமென நினைக்கிறேன். ஆயினும் அவருடைய கருத்தாகப் பின்னாளில் நான் அறியவந்த மத---மரபு—மறுப்பு அப்போது தன்னால் கொழுந்துவிட்டு எழுந்து முந்தைய ஈடுபாடுகளையும் நம்பிக்கைகளையும் வற்றடித்து விட்டது. உயிர்த் தத்வமாக ஒன்றே ஒன்றுதான் இருக்கிறது என்ற உறுதி மட்டுமே வலுவாக நின்றது. ஆனால் அதற்குக் கடவுள் என்ற பெயர் கொடுக்கக்கூடப் பிடிக்கவில்லை. ‘அந்த ஒரு தத்வத்தில் அடங்கிவிட்டால் அதுவே எல்லாம்’, என்று தெரிந்தாலும், ‘அதற்காக பக்தி என்றோ, ஞானம் என்றோ ஒரு ஸாதனை மண்ணாங்கட்டியும் வேண்டாம். அதுவாகவே பிடித்து அடக்கிக் கொண்டால்தான் உண்டு’ என்ற விசித்திரமான கொள்கை, விசித்ரமாகவே தோன்றாமல் ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில் அந்த ஒன்றைப் பல நாம ரூபங்களில் தெய்வங்களாக வழிபடுவதை ஏற்கவே முடியவில்லை
ஞானம், பக்திகளே இப்படிப் பறந்து போன சூறாவளியில் கர்மத்தைப் பற்றிக் கேட்பானேன் ? ‘ஒன்றேயான உயிர்த் தத்வத்தின் ஏகப் பெருவாழ்வுக்கும் நம்முடைய சின்னஞ்சிறு வாழ்வுகளுக்கும் ஒரு ஸம்பந்தமும் இல்லை. இச்சிறு வாழ்வுக்கான ஒழுங்கு முறைகள் என்ற பெயரில் கட்டிப் போடும் கர்ம மார்க்கம் என்பது மார்க்கமே இல்லை. ஸாதனை என்று ஏதேனுமொன்று இருக்குமாயினும் கூட அந்தப் பெயரைப் பெற இதற்கு லாயக்கில்லை’ என்பதே தீர்மானமாயிற்று. இந்த மார்க்கத்தில் கையோடு கையாக வரும் தர்ம சாஸ்திர ஆசார விதிகளோ அடியோடு கரித்தன. ‘வேறெந்த நாட்டுக்குமில்லாமல் இங்கே மட்டும் என்ன இத்தனாயிரம் ஸமூஹ வித்தியாசங்கள் ?’ என்று கடுத்தது. பொதுவாக மதம் என்பதே பேதமை என்றால், இந்த வைதீக ஆசாரங்களோ முழு முட்டாள்தனம் என்பதே தீர்ந்த அபிப்பிராயமாயிற்று. ‘தானே முளைத்துத் தழைத்த’ இந்த ஸனாதன ஸம்பிரதாய எதிர்ப்புக்குச் சுதந்திரப் போராட்ட காலத்திலிருந்தே வெகுவாகப் பரவி வந்த ஸமத்வம் எனப்படுகிற அடிப்படையிலான சீர்திருத்த வாதம் உரமூட்டியது.
ஆயினும் வீட்டிலோ வெளியிலோ என் புரட்சிக் கருத்துக்களைக் காட்டிக் கொள்ளாமல், அதே சமயம் குறிப்பிடத்தக்க மதாசரணைகளும் இன்றிக் காலம் கடத்தி வந்தேன்.
அப்போதிருந்த பொதுவான மனநிலையைச் சொன்னேன். ஆனால் அதிலேயே விலக்காக சில ‘அன்ய ஸ்வர’ச் சாயல்கள் எட்டிப்பார்ப்பதும், அவற்றையும் நான் இந்தப் பொது ‘மேள’த்திலேயே அமுக்குவதும் நடைபெற்றுத்தான் வந்தன. அவற்றை விளக்கப் புகுந்தால் இந்த ஸ்வய புராணம் அவசியமில்லாமல் நீளும். புராணம் காணாப் பூரணரின் சரிதத் தொடர்பாக இவ்வளவு சொன்னது போதும்.
தொடரும்………………………………..