|
Post by soundaryasatheesh on Aug 5, 2014 12:33:38 GMT 5.5
உன்னை பற்றி நினைத்தாலே என்னை சுற்றி இருப்பதெல்லாம் மதுரமாக இனித்திடுதே மாயம் என்ன செய்தாய் சொல் சத்குருநாதா!! காஞ்சி நகர் என்ற பெயர் என் செவிதனிலே பட்டவுடன், நான் இருக்கும் இடம் கூட எனக்கு மதுரமாக இனித்திடுதே மாயம் என்ன செய்தாய் சொல் சத்குருநாதா!! எந்த குழந்தை சிரித்தாலும், உன் கபடமற்ற சிரிப்பை எண்ணி எண்ணி எந்தன் மனம் மதுரமாக இனித்திடுதே மாயம் என்ன செய்தாய் சொல் சத்குருநாதா!! உன் பக்தர்கள் உனக்காக கொண்டு வரும் இனிப்பை நீ அனைவருக்கும் வாரி வழங்கி விட்டு அவரிடமே "சுவையோ சுவை" என்று சொல்லி நடிப்பாயே உன் கள்ளத்தனம் கூட எனக்கு மதுரமாக இனித்திடுதே மாயம் என்ன செய்தாய் சொல் சத்குருநாதா!! யார் கோபமும் காண சகியாதவரும் கூட, உன் கோபம் கண்டு மனம் மாறிக்கொள்ளும் வியப்பை கண்டு உன் கோபம் கூட எனக்கு மதுரமாக இனித்திடுதே மாயம் என்ன செய்தாய் சொல் சத்குருநாதா!! குழலினிது யாழினிது என்பர் என் சங்கரன் சொல் கேளாதவர் என மயங்கும் அளவு உன் தேன் சொற்கள் எனக்கு மதுரமாக இனித்திடுதே மாயம் என்ன செய்தாய் சொல் சத்குருநாதா!! இளமை என்றால் மட்டுமே அழகு என்று எண்ணுபவரும் கூட , ஒரு நொடி தான் உன்னை கண்டவுடன் மனம் மாறிடுவார் உன் முதுமை கூட எனக்கு மதுரமாக இனித்திடுதே மாயம் என்ன செய்தாய் சொல் சத்குருநாதா!! பட்டு பீதாம்பரம் இன்றி ஒற்றை காவி உடையிலும் அனைவர் மனதையும் வருடிவிடும் உன் எளிமை கூட எனக்கு மதுரமாக இனித்திடுதே மாயம் என்ன செய்தாய் சொல் சத்குருநாதா!! தியானத்திலும் காஷாட மௌனத்திலும் சிலை போலவே நீ இருக்க என்ன சொல்ல. உன் யோக நிலை கூட எனக்கு மதுரமாக இனித்திடுதே மாயம் என்ன செய்தாய் சொல் சத்குருநாதா!! தண்டமுடன் நீ நடமாடிய போதும் அறிவோம் நீ தாண்டவமதை புரியும் பரமசிவனே என்று இருந்தும் ஒன்றுமே தெரியாதது போல் எங்களுடன் இயல்பான அன்புடன் பழகும் உன் தனி கருணை கூட எனக்கு மதுரமாக இனித்திடுதே மாயம் என்ன செய்தாய் சொல் சத்குருநாதா!! உன் மதுரமெல்லாம் இணைத்து ஒரு அஷ்டகம் எழுத ஆசை கொண்டேன், ஆனால் ஒரு அஷ்டகம் மட்டும் அல்ல ஒரு ஆயிரம் கோடி அஷ்டகத்திலும் உன் மதுரத்தை முழுவதுமாய் கொண்டுவர நிச்சியமாய் என்னால் இயலாது நான் என்ன செய்வேன் மதுரமே வடிவான சத்குருநாதா!! பெரியவா சரணம்!!
|
|
|
Post by kahanam on Aug 7, 2014 23:46:46 GMT 5.5
"உன் மதுரமெல்லாம் இணைத்து ஒரு அஷ்டகம் எழுத ஆசை கொண்டேன், ஆனால் ஒரு அஷ்டகம் மட்டும் அல்ல ஒரு ஆயிரம் கோடி அஷ்டகத்திலும் உன் மதுரத்தை முழுவதுமாய் கொண்டுவர நிச்சியமாய் என்னால் இயலாது நான் என்ன செய்வேன் மதுரமே வடிவான சத்குருநாதா!!" Sri Vallabhacharyar wrote Sri Mathuraashtakam on Lord Krishna! Our poet is going to write Sri Maha Periyava Mathuraashtakam!Hara Hara Shankara, Jaya Jaya Shankara! KrishNaaya Thubhyam Namaha!
|
|
|
Mathuram!!
Aug 8, 2014 12:55:07 GMT 5.5
via mobile
Post by soundaryasatheesh on Aug 8, 2014 12:55:07 GMT 5.5
Humble thanks sir!! Periyava sharanam!!
|
|
|
Post by mkaraman on Aug 14, 2014 20:28:29 GMT 5.5
SCINTILLATING MS SS. Brought tears to my eyes. Pray that I get an opportunity to meet such a devout bhakth
|
|
|
Mathuram!!
Aug 15, 2014 19:57:22 GMT 5.5
via mobile
Post by soundaryasatheesh on Aug 15, 2014 19:57:22 GMT 5.5
Humble thanks!! Periyava sharanam!!
|
|