|
Post by soundaryasatheesh on Aug 4, 2014 16:10:21 GMT 5.5
உன்னை ஒன்று கேட்க வேண்டும் என்றே ரொம்ப நாளாய் ஆவல் கொண்டேன், அதை இன்று கேட்டு விடுகிறேன் பதில் சொல்வாய் சங்கரா!! உன் கோபம் கூட தனி அழகு, அதனால் இதனை கேட்ட பிறகு நீ கோபமே கொண்டாலும் நான் அதனை உளமார ரசித்துகொண்டே அமர்ந்திருப்பேன் பரவாயில்லை சங்கரா!! நான் தெரியாமல் தான் கேட்கிறேன், அது என்ன உன்னிடம் பிரச்சனை என்று மனம் நொந்து வருபவர்களிடம் நீ "எல்லாம் செரியாகிவிடும் நாம பாராயணம் செய்" என்று சொல்கிறாய் சங்கரா!! இல்லையென்றால் எதாவது ஒரு கோவிலுக்கு சென்று அங்கு வீற்றிருக்கும் அஸ்வத்த மரத்தை நூற்றியெட்டு முறை சுத்தி வந்தால் செரியாகிவிடும் என்று சொல்கிறாய் சங்கரா!! அல்லது எதாவது ஒரு மந்திரத்தை சொல்லி அதையே நித்தம் ஜபம் செய்தால் செரியாகிவிடும் என்று சொல்லிவிடுகிறாயே சங்கரா!! நற் கதிக்கு வழி கேட்டு உன்னை நாடி வருபவரிடம் எப்பவுமே நீ "சஹஸ்ரநாமம் பாராயணம் செய் அது ஒன்று போதும்" என்றே சொல்லிவிடுகிறாயே சங்கரா!! ஜகத்குருவான என் சங்கரனின் திவ்ய தரிசனம் ஒன்றே சர்வத்துக்கும், சகலத்துக்கும் நிவராணம் என்றான பின்பு எனக்கு ஒன்றுமே புரியவில்லை நீ ஏன் இப்படி சொல்கிறாய் என்றே சங்கரா!! பாராயணமும், ப்ரதக்ஷனமும், கங்கா ஸ்நானமும், நாம பாராயணமும் உன்னையே கண்ட பின்பு எதற்காக என்று நீயே சொல் சங்கரா!! பக்தியில் சிறந்தது முதன்மையானது குருபக்தி, அதனால் தான் அன்று குருபரரும் "குருவாய் வருவாய் முருகா" என்று உருகி இருக்கிறார் என்று நீ அறிவாயே சங்கரா!! சிவமும் விஷ்ணுவும் பிரம்மனும் அம்பிகையும் இன்னும் உள்ள எல்லா தெய்வங்களும் அதன் வழிபாடுகளும் ஒருங்கே இணைந்து குரு வடிவாய் என் அருகிலேயே இருக்க நான் ஏன் ஒவ்வொரு இடமாக தேடி ஓட வேண்டும் என்று சொல்லிவிடு சங்கரா!! இவர்களிடம் உள்ள எந்த ஒன்று உன்னிடம் இல்லை என்று எவ்வளவு யோசித்தும் என் புத்திக்கு ஒன்றும் எட்டவில்லை சங்கரா!! "எவர் ஒருவர் தன்னை சரணடைந்தவன் எப்பொழுதும் நலமாக இருக்க வேண்டும் என்று எண்ணி செயல் படுகிறாரோ அவரே சிறந்த குரு", எங்கள் நலனுக்காகவே நாளும் உன்னை அர்ப்பணிக்கவே அவதரித்த நீ இருக்க எது குறை எங்களுக்கு என்று இதற்க்கு விடை மட்டும் சொல்லிவிடு , நீ கோபமே கொண்டாலும் பரவாயில்லை சங்கரா !! பெரியவா சரணம்!!
|
|
|
Post by anusham163 on Aug 19, 2014 13:51:26 GMT 5.5
Wonderful thoughts madam ! And put in a simple and beautiful form !
Thank you for sharing.
anusham163
|
|
|
Post by soundaryasatheesh on Aug 20, 2014 15:25:07 GMT 5.5
Humble thanks!! Periyava sharanam!!
|
|
|
Post by mkaraman on Aug 22, 2014 19:19:42 GMT 5.5
Very true. Mahaswami's paadha dhyanam is a mendicant for all mental and physical ailments
|
|
|
Post by kahanam on Aug 23, 2014 16:12:34 GMT 5.5
Maha Periyava ThiruviLaiyaadal! Avarthaan SeykiRaar! PoRuppu VeeRu Pakkam enRu Pookkuk KaaddukiRaar! Avaridam SaraNadaintha Pin VeeRu EEthu Thunpam! Hara Hara Shankara, Jaya Jaya Shankara!
|
|