|
Post by soundaryasatheesh on Aug 3, 2014 8:54:08 GMT 5.5
உன்னைத் தேடும் தேடலில் நான் என்னையே தொலைத்து விட்டு உன் முன்னே நிற்கிறேனே சத்குருநாதா!! என்னுள் இருக்கும் அனைத்தையும் உன் காலடியில் சேர்த்துவிட்டு "இனி உனக்கு கொடுக்க என்னிடம் ஒன்றுமே இல்லை" என்றேன் சத்குருநாதா!! என்னுள் இருக்கும் அனைத்தையும், உன்னிடமே தந்த பின்பும் சிரிப்புடன் நீ பார்க்கிறாயே "இன்னும் ஏதோ ஒன்று அது உன்னிடம் தான் உள்ளது" என்றே சத்குருநாதா!! அது என்னவென்றே அறியாமல் என்னையே திரும்ப திரும்ப கேட்கிறேன் ஒன்றுமே புரியவில்லை என்ன இது சோதனையோ சத்குருநாதா!! நெஞ்சமெல்லாம் உன்னையே நிறைத்து, தஞ்சமென உன் திருவடியை சரணடைந்த பின்பும் கூட "இன்னும் கொஞ்சம் உன்னிடமே உள்ளதே " என்று சொல்லி சிரிக்கிறாயே சத்குருநாதா!! கெஞ்சி கெஞ்சி கூறினேனே "உன்னை தவிர என்னிடம் வேறு ஒன்றுமே இல்லை" என்று, அதை காது கொடுத்தும் கேட்காமல் நீ இருக்கிறாயே சத்குருநாதா!! என் வாக்கும் நீயே, என் மனமும் நீயே, அதிலிருக்கும் சிந்தையும் நீயே, அதன் தெளிவும் நீயே, நான் கேட்பதும் காண்பதும் கருதுவதும் யாவும் நீயே, என் செயலும் நீயே, அதன் பலனும் நீயே, என் எல்லாமும் நீயே என்றே கதறி அழுத பின் கூட இரக்கமே இல்லாமல் " இன்னும் ஒன்று உன்னிடமே உள்ளது" என்றே சொன்னால் நான் என்ன தான் செய்வேன் சொல் சத்குருநாதா!! சிரித்துவிட்டு சொன்னாயே , “வார்த்தைக்கு வார்த்தை, என் மனம் என் சிந்தை என்னிடம் உள்ளது என்று சொல்கிறாய், அப்படியென்றால் அந்த என்(நான் ) என்ற ஒன்று இன்னும் உன்னிடமே உள்ளதே" என்று, தீக்குள் விரல் வைத்தது போல் சுருக்கென்று என் இதயத்தில் ஒரு நெருஞ்சிமுள் குத்தியதே சத்குருநாதா!! என்னுள் இருந்த சிறு குறையான "என்" னையும் களைந்து, உந்தன் திருவடியில் சேர்த்துக் கொண்டு சரண் புகுவோர் குலம் காக்கும் சரணாகத வத்சலனாய் வந்தாயே சத்குருநாதா!! பெரியவா சரணம்!!
|
|
|
Post by mkaraman on Aug 11, 2014 14:41:00 GMT 5.5
AWESOMW MS SS
|
|
|
Post by kahanam on Aug 12, 2014 12:38:54 GMT 5.5
Smt. Soundarya Satheesh is steadily increasing the devotional fervour and brings the Essence of Surrender to Maha Periyava. Simply superb. God Bless! Hara Hara Shankara, Jaya Jaya Shankara!
|
|
|
Post by soundaryasatheesh on Aug 12, 2014 14:08:02 GMT 5.5
Humble thanks sir!! Periyava sharanam!!
|
|