|
anban
Aug 2, 2014 16:33:35 GMT 5.5
via mobile
kahanam likes this
Post by soundaryasatheesh on Aug 2, 2014 16:33:35 GMT 5.5
அன்பாக அன்பைக்காட்டி, அன்புக்கே ஓர் எடுதுக்காட்டாகி, அன்பதையே கண்ணில் ஏந்தி அதனை காணப்படும் யாவிலும் செலுத்தி உயிரற்ற அனைத்தையும் உயிருள்ளாதாக்க வேண்டி வந்தாயே ஜகத்குருவாக!! அன்பென்ற ஒன்றையே அறியாதவர்க்கும், அன்பை ஊட்டி, அன்பாய் நடக்க வைக்கவே அன்பாலே அவனியெல்லாம் நிரப்ப வேண்டி வந்தாயே ஜகத்குருவாக!! "அன்புடையார் என்றும் உடையர் பிறர்க்கு", என்ற வள்ளுவன் வாக்கை உண்மையாக்கவே எல்லோர்க்கும் உடையவாராய் வந்தாயே ஜகத்குருவாக!! அன்பென்ற அருமையான மௌன நிலையை, வார்த்தைகள் இன்றி உன்னிரு கண்களின் அருள் ஒளியின் மூலம் உலகிற்கு தரவே வந்தாயே ஜகத்குருவாக!! அன்பின் ஆழத்தை கண்டு, அதன் அடியில் சென்று அதை உணர்ந்து, தெளிந்த தூய அன்பை மனம் மட்டும் அன்றி உடல் முழுவதிலும் ஏத்தி அதன் வடிவமாகவே வந்தாயே ஜகத்குருவாக!! அன்பு அறம் என்ற இரண்டையும் இரு கண்களாய் பாவித்து, அவ்விரண்டையும் எங்கும் நிலை நாட்டி அவனியெல்லாம் இன்புறவே வந்தாயே ஜகத்குருவாக!! அன்பே ஆனந்தம், அன்பே யோகம், அன்பே தியானம், அன்பே ஆதாரம் என்று உணர்த்தவே அன்பிற்கு ஒரு உருவம் குடுக்க அவதரித்து அதை இன்றும் நிலைநாட்டவே வந்தாயே ஜகத்குருவாக!! அன்பிற்கு பிறந்து, அன்பாய் வளர்ந்து, அந்த அன்பை உலகுக்கு வழங்கவே சன்யாசம் பூண்டு, அன்பின் பிறப்பிடமாக வந்தாயே ஜகத்குருவாக!! அன்பு அன்பு அன்பு என்ற ஒன்றையே மீண்டும் மீண்டும் வலியுறுத்தி, அன்பாலே வெல்ல முடியாதது ஒன்றுமே இல்லை என்று உலகுக்கு உணர்த்தி எங்கள் அன்பனாக வந்தாயே ஜகத்குருவாக!! பெரியவா சரணம்!!
|
|
|
Post by kahanam on Aug 2, 2014 22:22:53 GMT 5.5
"அன்பாலே வெல்ல முடியாதது ஒன்றுமே இல்லை என்று உலகுக்கு உணர்த்தி எங்கள் அன்பனாக வந்தாயே ஜகத்குருவாக!! பெரியவா சரணம்!!"
Arumaiyaana Vaakku! Hara Hara Shankara, Jaya Jaya Shankara!
|
|
|
anban
Aug 3, 2014 8:55:17 GMT 5.5
via mobile
Post by soundaryasatheesh on Aug 3, 2014 8:55:17 GMT 5.5
Humble thanks!! Periyava sharanam!!
|
|