|
Post by soundaryasatheesh on Aug 1, 2014 19:46:05 GMT 5.5
கால காலனாக மாறி, காலனையே உதைத்து தள்ளி எம்மை காக்க வந்திடுவாய் சத்குருநாதா!! கடுகளவு பக்தி கொண்டால் கடல் போலவே எண்ணி பெருமகிழ்ச்சி கொண்டிடுவாய் சத்குருநாதா!! கனத்த மனமொடு வந்து உன் முன்னே நின்றுவிட்டால் கனம்கரைத்து குறைதீர்ப்பாய் சத்குருநாதா!! கானம் பாடி உன்னை துதிக்க சொற்கள் தந்தே அருள்புரிந்து, அதையும் கேட்டு ரசித்திடுவாய் சத்குருநாதா!! குயில் போலே குக்கூவென சங்கரா சங்கரா சொல்ல வைத்து நாளும் உன்னை நினைக்க வைத்தாய் சத்குருநாதா!! கனவிலும் உனையே கண்டு என் வாய் தான் பிதற்றினாலும் அதையும் சங்கரா என்றே எடுத்துக்கொள்வாய் சத்குருநாதா!! கண்மூடி சிறிதுநேரம் அமர்ந்திருந்தாலும் அகக்கண்ணில் வந்து சிரித்து, எனை தவிக்க விட்டே ஓடிடுவாய் சத்குருநாதா!! கண் திறந்து காணும் பொழுது, பார்க்கும் பொருள் யாவிலும் நீ நீக்கமற நிறைந்தாயே சத்குருநாதா!! கன நொடியில் தோன்றியது, என் கண்ணே சங்கரனாய் ஆன பின்பு அனைத்துமே நீயாக தான் தெரிவாய் சத்குருநாதா!! பெரியவா சரணம்!!
|
|
|
Post by mkaraman on Aug 9, 2014 17:28:33 GMT 5.5
One more gem from Ms SS. Keep them coming
|
|
|
Post by soundaryasatheesh on Aug 9, 2014 18:03:43 GMT 5.5
Humble thanks sir!! Periyava sharanam!!
|
|
|
Post by kahanam on Aug 10, 2014 22:48:20 GMT 5.5
Hara Hara Shankara, Jaya Jaya Shankara!
|
|