|
Post by soundaryasatheesh on Jul 30, 2014 13:17:47 GMT 5.5
Song on Periyava: சங்கரா சங்கரா என்று சொல்லி கோஷம் போடுவோம்! சிவ சங்கரா சங்கரா என்று சொல்லி கோஷம் போடுவோம்! காஞ்சி மகான் கருணை கடலை தினமும் போற்றுவோம்!! (சங்கரா சங்கரா) கச்சி மோதூர் திட்டம் தந்தான்! பிடியரிசி திட்டம் தந்தான்! மக்கள் குறை போக்கிய மணி விளக்கை பாடுவோம்!! (சங்கரா சங்கரா) கலசத்திலும் குடியிருப்பான்! கல்லிலும் அவன் குடியிருப்பான்! எங்கும் நிறை பரபிரம்மத்தை துதித்து பாடுவோம்!! (சங்கரா சங்கரா) உலகுக்காக நடை நடந்தான்! பல உயிருக்காக நடை நடந்தான்!! பார் முழுதும் நடந்தவன் திருபாதம் வணங்குவோம்!! (சங்கரா சங்கரா) பல நாட்கள் உண்ணாமல் இருந்து வந்தானே!! பல காலம் பேசாமல் மௌனம் கொண்டானே!! அண்டத்தவர் துயர் துடைக்க அனைத்தும் செய்தானே!! (சங்கரா சங்கரா) பேசுகின்ற வார்த்தை எல்லாம் சங்கரன் தானே! எண்ணுகின்ற எண்ணமெல்லாம் அவன் முகம் தானே! என்று வாழும் அடியவர்க்கொரு துன்பமும் இல்லை!! (சங்கரா சங்கரா) சங்கரனை தவிர வேறு கேட்பதுமில்லை! சங்கரனை தவிர வேறு பார்ப்பதுமில்லை!! என்று சொல்லும் அனைவருக்கும் குறையேதும் இல்லை!! (சங்கரா சங்கரா) நொடிப்பொழுதும் அவனை நினை! என்றுமே அவன் அன்பை நாடு! பிறகு சத்தியமாய் கூடிவிடும் சகலமும் தானே!! (சங்கரா சங்கரா) பெரியவா சரணம்!!
|
|
|
Post by kahanam on Jul 31, 2014 12:26:37 GMT 5.5
Maha Periyava ThiruvadigaLee CharaNam! Hara Hara Shankara, Jaya Jaya Shankara!
|
|