|
Post by soundaryasatheesh on Jul 29, 2014 18:44:09 GMT 5.5
உந்தன் மீது கொண்டுள்ள நம்பிக்கை என்ற கவசமே, நாளுமே எம்மை ஒரு ரக்ஷை போல காத்திடுமே சத்குருநாதா!! "உன் முன்னே ஒருவாறும், வெளியே ஒருவாறும் சிலர் பேசுகின்றனர்" என்று உன்னிடம் யாரும் குறை பட்டால், "அவர்கள் மேல் குற்றம் இல்லை, என் தவசு போதவில்லை", என்று சொல்லி வீண் பழியை ஏற்றுக்கொண்டு எங்களை காப்பது ஒன்றே குறிக்கோளாக கொண்டாயே சத்குருநாதா!! உன் சீடர்கள் தவறு செய்தால், அதை நீ முன் வந்து ஏற்று கொண்டு அதற்காக பல காலம் உண்ணாமல் உபவாசம் இருப்பாயே உன்னை அன்றி காக்கும் கடவுள் வேறு எதுவும்உள்ளதோ சொல் சத்குருநாதா!! உன் சீடர் ஒருவரை யாரோ ஒரு தனவந்தன் "குப்பை, ஒன்றுக்கும் உபயோகம் இல்லை", என்று சொல்ல "குப்பைகள் எல்லாம் வந்து சேரும் குப்பைதொட்டி நானே" என்று சொல்லி அவருக்கு வாதிட்ட உன் அன்பு ஒன்றே போதுமே சத்குருநாதா!! இப்படி நாளும் பொழுதும் ஒவ்வொரு மணித்துளியும் எங்கள் நலன் ஒன்றையே கருத்தில் கொண்டு செயல் படும் நீயே எங்கள் குலம் காக்கும் காவலன் என்றே சொல்லிடுவோம் சத்குருநாதா!! உன் அன்பர்கள் கடந்து செல்லும் பாதையில் வரும் இன்னல்களை, முன்னமே நீ ஆராய்ந்து அறிந்து அதை தூசி போல பறக்கச்செய்து பிறகு , "நான் ஒன்றும் செய்யவில்லை, உன் கடவுள் நம்பிக்கையே உன்னை தக்க சமயத்தில் காத்தது", ஆனந்தம் கொள்வாயே அந்த மனம் யாருக்கு சத்குருநாதா!! தெரியாமல் செய்த தவறை மன்னிக்க யாராலும் முடியும், ஆனால் தெரிந்தே செய்த குற்றத்தையும் மன்னிக்க உன்னை தவிர வேறு யாரால் முடியும் சத்குருநாதா!! உன்னை விட சிறந்த காப்பு எனக்கு வேறொன்று இருப்பதாக தோன்றவில்லை, இருந்தபோதும் அது எனக்கு தேவை இல்லை சத்குருநாதா!! நீ விரும்பி கொடுத்தால் துன்பமும் எனக்கு பேரின்பமே, உன் விருப்பம் அன்றி கிடைக்கும் சிறு இன்பம் கூட எனக்கு கொடுமையே இதில் மாற்றம் ஏதும் இல்லை சத்தியமிது சத்குருநாதா!! அன்னையானவள் தன் மகவுக்கு செய்யும் தீமையிலும் பெரும் நன்மை உண்டு என்பதை எந்த மகவும் அறிவதில்லை, அன்னைக்கே அன்னையாகி உலகையே காக்கும் உன்னை கொஞ்சம் நானும் அறிவேனே சத்குருநாதா!! பெரியவா சரணம்!!
|
|
|
Post by kahanam on Jul 31, 2014 12:35:26 GMT 5.5
Maha Periyava Kadaaksham will be ever on the author! Total understanding of His Greatness at such a young age! Much Blessed! Maha Periyava ThiruvadigaLee CharaNam! Hara Hara Shankara, Jaya Jaya Shankara!
|
|
|
Post by soundaryasatheesh on Aug 1, 2014 19:50:01 GMT 5.5
Humble thanks sir!! Periyava sharanam!!
|
|