|
Post by soundaryasatheesh on Jul 28, 2014 18:58:58 GMT 5.5
சத்குருவின் விழிகள்: வேள்வி ஒன்று வேகமாக வெளிக்கிளம்புதே, சத்குருவின் விழிகள் மூடி திறந்திடும்போதே!! சாந்தமாக ஒரு விழியும், சம்ஹாரம் செய்ய மறுவிழியும் இணைந்தே இரு துருவமாய் தோன்றுகின்றதே!! கோடி கோடி மின்மினியும், கோடி கோடி மின்னல் ஒளியும் ஒன்றாக சேர்ந்திடுதே அவன் பார்த்திடும் ஓர் நொடிப்போழுதிலே!! கருவறையில் ஒளிந்திருக்கும் சிசுவும் கூட தப்பமுடியாதே, அவன் கதிர்வீச்சு பார்வையின் கூர்மையின் முன்பே!! வாய் மலர்ந்த சிரிப்பதனை பார்த்திருக்கிறேன், ஆனால் கண்கள் கூட சிரிக்கும் என்பதை அவனிடத்தில் கண்டேன் !! காந்தம்போல் அவன் பார்வை ஈர்க்கின்றதே, கன்னாடிபோலே நம் மனதை அளவேடுக்குதே!! அவன் கூறு போடும் கத்தியான பார்வையின் முன்பே, கழுகும் கூட தோற்றோடி தொலைந்து போகுமே!! குறைகள் எல்லாம் தொலைந்தே விடும், களிமண்ணும் சிலையாகும் அவன் பார்வை நம்மீதே பட்டிடும்போதே!! விழியழகை காண காண ஏக்கம் வந்திடுதே, விழிமுன்னே சிறு பொம்மையாக மாறி கொள்ளவே!! பெரியவா சரணம்!!
|
|
|
Post by kahanam on Jul 31, 2014 12:29:40 GMT 5.5
Who can see Maha Periyava's Eyes! Totally penetrating your body, mind and soul! Arumai! Hara Hara Shankara, Jaya Jaya Shankara!
|
|
|
Post by soundaryasatheesh on Aug 1, 2014 19:50:50 GMT 5.5
Humble thanks sir!! Periyava sharanam!!
|
|