|
Post by soundaryasatheesh on Jul 26, 2014 15:43:55 GMT 5.5
குன்றுதோறும் குடியிருக்கும்சுவாமிநாதனாய் வந்த சந்திரசேகரா! குணமின்றி நடப்பவரை கற்பூர விழியால் நீ வென்றிடுவாய் சசி சேகரேந்திரா!! ஸ்ரீசக்கரத்தின் நடுவின் நின்றே, அருளாட்சி செய்யும் சந்த்ரசேகரா! ஸ்ரீதேவியும் உன் திருமார்பை, அலங்கரித்தே நிற்பாள் சசி சேகரேந்திரா!! சுழலுகின்ற உலகமதில் சுவாசம்போல் எங்கும் நிறைந்தாயே சந்த்ரசேகரா! சுவாசிக்கும் ஜீவனோடு அனைத்துக்கும் பொதுவானாய் சசி சேகரேந்திரா!! கல்லினுள் வசிக்கும் தேரைக்கும் உணவளித்தாய் சந்த்ரசேகரா! கல்லுக்குள் இருக்கின்ற ஈரமதும் நீதானே சசி சேகரேந்திரா!! கண்ணுக்கு கண்ணாக, கண்கண்ட தெய்வமாக வந்துதித்தாய் சந்த்ரசேகரா! கண்மணிபோல் இமை மூடி கவசம்போல் எமைக்காத்திடவே சசி சேகரேந்திரா!! எண்பது வயது குழந்தை நீ, அடம்பிடித்தால் விடமாட்டாய் சந்த்ரசேகரா! எட்டு வயது சிறுவனே தேவலையென தோன்றும், நீ உண்ணாமல் படுத்தும்போது சசி சேகரேந்திரா!! சொன்னாலும் கேட்பதில்லை, பல தூரம் நடந்தே வந்திடுவாய் சந்த்ரசேகரா! உன் உடல் பாராமல், எமக்காக ஓடி ஓடி அலைந்திடுவாய் சசி சேகரேந்திரா!! உன் பெயரை கூட சொல்லும் தகுதி, எமக்கு இல்லை சந்த்ரசேகரா! உன் அன்பை பெற்றிடவே, என்ன தவம் செய்தோமோ சசி சேகரேந்திரா!! பெரியவா சரணம்!!
|
|
|
Post by kahanam on Jul 31, 2014 12:39:12 GMT 5.5
"உன் அன்பை பெற்றிடவே, என்ன தவம் செய்தோமோ சசி சேகரேந்திரா!!" Arumai! Maha Periyava ThiruvadigaLee CharaNam! Hara Hara Shankara, Jaya Jaya Shankara!
|
|
|
Post by mkaraman on Jul 31, 2014 14:03:01 GMT 5.5
DIVINE BEYOND WORDS. YOU ARE VERILY BLESSED MADAM
|
|
|
Post by soundaryasatheesh on Aug 1, 2014 19:47:21 GMT 5.5
Humble thanks sir!! Periyava sharanam!!
|
|