|
Post by soundaryasatheesh on Jul 23, 2014 12:41:23 GMT 5.5
எனக்கு என்ன தேவை என்று, எனக்கே தெரியாமல், என்தேவை பூர்த்தி செய்தாய் சத்குருநாதா!! என் தேவை என்னவென்று, நானே அறியேனே, அதை அறிந்து வைத்தாயே சத்குருநாதா!! அமுதம் போல் கலங்கமில்லா, அன்பதனை அருள் புரிந்து, அன்பனாக்கி விட்டாயே சத்குருநாதா!! அன்பனுக்கு அன்பனாகி, அன்புக்கே அடிமையாய், எனை மாற்றிவிட்டாயே சத்குருநாதா!! பாத ரேகை பார்வை இட்டு, புண்ணியம் அதை பெருக்கி கொள்ள, பல ஜென்ம தவமிருந்தோம் சத்குருநாதா!! காருண்ய மூர்த்தியாய், கருணை கண் திறந்தே, கலியுகம் களிப்புற வந்தாயே சத்குருநாதா!! கோவம் கூட தனி அழகு, என்றே உணர்ந்தேனே, உன் கோவம் கண்ட பின்னே சத்குருநாதா!! கோவம் தீர்ந்த பின்னாலே, கனிமொழியால் அறிவுருத்தி, குழந்தைபோல் பார்ப்பாயே சத்குருநாதா!! இந்த அன்பை நாங்கள் பெற, என்ன தவம் செய்தோமோ, என்று கூட தெரியாதே சத்குருநாதா!! சத்குருநாதா சிவ சத்குருநாதா!! பெரியவா சரணம்!!
|
|
|
Post by kahanam on Jul 25, 2014 23:16:19 GMT 5.5
Arumai! Maha Periyava ThiruvadigaL CharaNam! Hara Hara Shankara, Jaya Jaya Shankara!
|
|
|
Post by soundaryasatheesh on Jul 26, 2014 15:45:59 GMT 5.5
Humble thanks sir!! Periyava sharanam!!
|
|
|
Post by white40 on Aug 5, 2014 17:26:05 GMT 5.5
மிகவும் அற்புதம். மஹாபெரியவாளின் கருணை பரிபூர்ணமாக உள்ளது. கோ.வைத்யநாதன்
|
|
|
Post by soundaryasatheesh on Aug 5, 2014 21:19:24 GMT 5.5
Humble thanks sir! Periyava sharanam!!
|
|