|
Post by soundaryasatheesh on Jul 22, 2014 12:28:02 GMT 5.5
நீராட்டல்: ஈச்சங்குடி பெருமானே! மஹாலெட்சுமி மைந்தனே! பொழுதும் நகர்ந்து கொண்டே இருக்கின்றதே! இவ்வுலகுக்கு இந்நாளை பொன்னாளாக்க, சங்கரா நீராட வாராய்!! எப்பொழுதும் உன் நினைவால் உள்ளம் நிறைந்தே இருக்கின்றதே! என்றுமே வேதத்துக்கே வித்தான வைகுண்ட நாதனே! இன்பங்கள் பல அருளும் திருமஞ்சனம் காண, சங்கரா நீராட வாராய்!! அகிலம் முழுதும் அமைதியால் ஆழ்ந்திருக்க வேண்டுமே! அண்டத்தவர் எல்லோரும் ஆண்டுகள் பல உன் நாமம் போற்றிடவேண்டுமே! பால் கலந்தே திருமஞ்சனம் காண, சங்கரா நீராட வாராய்!! துன்பங்கள் எல்லாம் போக்கிடும் சிவசக்தி ரூபம் கொண்டவனே! தூயவர் எல்லோரும் துயரின்றி தெம்போடு இருந்திட வேண்டுமே! இளநீரது கலந்தே திருமஞ்சனம் காண, சங்கரா நீராட வாராய்!! எதிரிகள் எல்லோரும் ஓட வெற்றிவேல் கொண்டே காத்தவனே! ஈன செயல் புரியும் ஈனர்களை எரித்து எறிய வந்தவனே! திருநீரது கலந்தே திருமஞ்சனம் காண, சங்கரா நீராட வாராய்!! மாதம் தவறாமல் மும்மாரி பொழிந்திட வேண்டுமே! மண்ணும் வளம் பெற்று பயிர்கள் வாடாமல் வளர்ந்திட வேண்டுமே! தேன் கலந்த திருமஞ்சனம், காண சங்கரா நீராட வாராய்!! செழுமைகள் எங்கும் செழித்தோங்க பதகமலம் பதித்தே நடந்தவனே! செம்மைகள் பல எல்லோரும் பெற்று சிரிப்பொலி எங்கும் கேட்டிடவேண்டுமே! சந்தனமது கலந்தே திருமஞ்சனம் காண, சங்கரா நீராட வாராய்!! பசிப்பிணி அகல பார்முழுதும் பிடிஅரிசி பரவச் செய்தவனே! பவளம் போல் மின்னும் மனமதை யாவரும் பெற்றிட வேண்டுமே! அத்தரும் பன்னீரும் கலந்தே, திருமஞ்சனம் காண சங்கரா நீராட வாராய்!! நற்குணங்கள் அடைந்தே அடியவர்கள் அனைவரும் நட்போடு இருக்க வேண்டுமே! நன்மைகள் பல புரிந்தே அன்பர்கள் எல்லோரும் நலமோடு இருக்க வேண்டுமே! மஞ்சள் குங்குமம் கலந்தே திருமஞ்சனம் காண, சங்கரா நீராட வாராய்!! சகலசெல்வங்கள் அளித்திடும் ஷ்யாமளத் திருமேனி கொண்டவனே! சகலகாரிய சித்தி நல்கும் சர்வமங்களம் கிட்டுமே! சத்குருநாதா திருமஞ்சனம் காண, சங்கரா நீராட வாராய்!! பெரியவா சரணம்!!
|
|
|
Post by kahanam on Jul 25, 2014 23:14:50 GMT 5.5
Nice song bathing Maha Periyava. Hara Hara Sankara, Jaya Jaya Sankara! "Thirumanjanam" is the word used for bathing Lord VishNu! "Abhisheekam" is the word more appropriate to Maha Periyava, Lord Sankara! Of course, Hariyum Sivanum oNNu!
|
|
|
Post by soundaryasatheesh on Jul 26, 2014 15:42:24 GMT 5.5
Sorry sir me from iyengar family tat may reflects sir. Periyava sharanam!!
|
|
|
Post by kahanam on Jul 26, 2014 23:19:30 GMT 5.5
Sorry sir me from iyengar family tat may reflects sir. Periyava sharanam!! No need to be sorry. All in usage only. Bhagavan Ramana used to tell," Athanaalenna, Ellaam oNNuthaane!" Hara Hara Shankara, Jaya Jaya Shankara! Om Namo NaarayaNaaya! Om Nama Shivaaya! தாழ்சடையும் நீள் முடியும் ஒண் மழுவும் சக்கரமும் சூழரவும் பொன்னாணும் தோன்றுமால் சூழும் திரண்டருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு இரண்டுருவும் ஒன்றாய் இசைந்து. (பேயாழ்வார் பாசுரம்)
|
|
|
neeraattal
Jul 27, 2014 18:54:14 GMT 5.5
via mobile
Post by soundaryasatheesh on Jul 27, 2014 18:54:14 GMT 5.5
Thank u sir!!
|
|