|
Post by soundaryasatheesh on Jul 21, 2014 11:29:56 GMT 5.5
சரணம் பாடுவோம் சரணம் பாடுவோம்! சங்கரா சங்கரா என்றே சொல்லி சரணம் பாடுவோம்! தீமைகள் பலவும் வந்தது, தீங்குகள் பலவும் நேர்ந்தது, அத்தனையும் சங்கரா என்று சொல்லி சுட்டு போடுவோம் (சரணம்)!! காலங்கள் கோலம் போட்டது, கவலைகள் சூழ்ந்து கொண்டது, சங்கரன் நாமம் அதனை பொடியாய் ஆக்கியது (சரணம்)!! ஊமையும் பாட கண்டோம், செவிடரும் கேட்க கண்டோம், சங்கரன் லீலைகள் பல நாமும் கண்டோம் (சரணம்)!! யாருக்கு என்ன தேவை, அதையறிந்து அருளும் பார்வை, சங்கரன் சொல்லே வேதம் என்றே வாழுவோம் (சரணம்)!! சென்றிடும் பாதை அனைத்திலும், அவனது துணையை நாடுவோம் சங்கரன் உடன் வர பயமில்லை என்போம் (சரணம்)!! உயிரினங்கள் அனைத்தும் அவனை, உயிராக பற்றி கொண்டது பொக்கிஷத்தை போல மனதில் பொத்தி வைத்தது (சரணம்)!! சங்கரன் சரணம் பாடிட சங்கரன் பெயரை சொல்லிட, செல்வங்கள் யாவையும் நாம் ஒன்றாய் பெற்றிடுவோம் (சரணம் )!!
|
|
|
Post by kahanam on Jul 25, 2014 23:09:37 GMT 5.5
Maha Periyava ThiruvadigaLee CharaNam! Hara Hara Shankara, Jaya Jaya Shankara!
|
|