Post by Sumi on Jan 11, 2012 11:09:57 GMT 5.5
Courtesy: Shri V Radhakrishnan
Site: www.periva.org
OM SRI GURUPYO NAMAHA : RESPECTFUL NAMASKARAM TO SRI MAHA PERIVA
HARE RAMA HARE RAMA ,RAMA RAMA HARE HARE
HARE KRISHNA HARE KRISHNA,KRISHNA KRISHNA HARE HARE II
HARA HARA SANKARA SIVA SIVA SANKARA
JAYA JAYA SANKARA HARA HARA SANKARA II
திருப்பாவை - பாடல் - 24
அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி
சென்றங்கு தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி
பொன்றச்சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல் போற்றி
என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்.
பொருள்: மூன்றடிகளால் உலகளந்த உன் திருவடிகளுக்கு வணக்கம். தென்னிலங்கை ராவணனை வெற்றி கொள்ள ராமனாய் வந்த உன் வீரத்துக்கு நமஸ்காரம். சக்கர வடிவில் வந்த சகடன் என்ற அசுரனை ஒரே உதையில் வீழ்த்திய உன் புகழுக்கு
வந்தனம். கன்று வடிவில் வந்த வத்சாசுரனை விளாமர வடிவில் வந்த கபித்தாசூரன் மீது எறிந்து அழித்தவனே! உன் கால்களில் அணிந்த வீரக்கழலுக்கு வணக்கம். கோவர்த்தனகிரியை குடையாக்கி ஆயர்குலத்தவரை காத்த உன் இரக்க குணத்துக்கு வந்தனம். பகைவர்களை அழித்த உன் வேலாயுதத்துக்கு நமஸ்காரம். உன் வீரச்செயல்களைப் பாடி, உன்னருளைப் பெறுவதற்கு நாங்கள் வந்து
உள்ளோம். எங்கள் மீது இரக்கம் கொண்டு அருள்செய்.
விளக்கம்: பள்ளிக்குப் புறப்படும் முன், இந்த பாசுரத்தை குழந்தைகள் தினமும் பாராயணம் செய்தால் படிப்பில் திறமை, நடைமுறை வாழ்விலுள்ள சிக்கல்களை எதிர்க்கும் தைரியம் ஏற்படும்.
திருப்பள்ளியெழுச்சி-பாடல் - 4
இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே!
என்னையும் ஆட்கொண்டு இன்னருள் புரியும்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.
பொருள்: திருப்பெருந்துறையில் எழுந்தருளியுள்ள சிவபெருமானே! இந்த அதிகாலையில் வீணைக்கலைஞர்களும், யாழ் வாசிப்பவர்களும் இசை மீட்டியபடி ஒருபுறம் உன் பக்தியில் லயித்து நிற்கிறார்கள். ரிக் உள்ளிட்ட வேதங்களால் உன்னை வணங்குவோரும், தமிழ்
தோத்திரப்பாடல்களைப் பாடுவோர் மறுபுறமும் உன் சிறப்பைப் பாடிக்
கொண்டிருக்கிறார்கள்.
"நமசிவாய' என்ற நாமம் சொல்லியபடி மலர்மாலைகளுடன் பக்தர்கள் ஒருபுறம் நிற்கிறார்கள். வணங்குவோரும், கண்களில் கண்ணீர் மல்க பிரார்த்திப்போரும், உன்னை நினைத்து நெகிழ்பவர்களும் ஒருபுறம் நிற்கிறார்கள். தலையில் கைகூப்பி நீயே சரணாகதி என்று சொல்வோர் ஒருபுறம் காத்திருக்கிறார்கள். எனது இறைவனே! இவர்களது பக்தியின் முன் எனது பக்தி மிகச்சாதாரணம். அப்படிப்பட்ட என்னையும் ஆட்கொண்டவனே! பள்ளியில் இருந்து நீ எழுந்தருள வேண்டும்.
விளக்கம்: இறைவழிபாட்டில் இறங்கி விட்டால், அதைத் தவிர வேறெந்த சிந்தனையும் இருக்கக்கூடாது என்பதை இந்தப் பாடலின் மூலம் புரிந்து கொள்ளலாம்.
Site: www.periva.org
OM SRI GURUPYO NAMAHA : RESPECTFUL NAMASKARAM TO SRI MAHA PERIVA
HARE RAMA HARE RAMA ,RAMA RAMA HARE HARE
HARE KRISHNA HARE KRISHNA,KRISHNA KRISHNA HARE HARE II
HARA HARA SANKARA SIVA SIVA SANKARA
JAYA JAYA SANKARA HARA HARA SANKARA II
திருப்பாவை - பாடல் - 24
அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி
சென்றங்கு தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி
பொன்றச்சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல் போற்றி
என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்.
பொருள்: மூன்றடிகளால் உலகளந்த உன் திருவடிகளுக்கு வணக்கம். தென்னிலங்கை ராவணனை வெற்றி கொள்ள ராமனாய் வந்த உன் வீரத்துக்கு நமஸ்காரம். சக்கர வடிவில் வந்த சகடன் என்ற அசுரனை ஒரே உதையில் வீழ்த்திய உன் புகழுக்கு
வந்தனம். கன்று வடிவில் வந்த வத்சாசுரனை விளாமர வடிவில் வந்த கபித்தாசூரன் மீது எறிந்து அழித்தவனே! உன் கால்களில் அணிந்த வீரக்கழலுக்கு வணக்கம். கோவர்த்தனகிரியை குடையாக்கி ஆயர்குலத்தவரை காத்த உன் இரக்க குணத்துக்கு வந்தனம். பகைவர்களை அழித்த உன் வேலாயுதத்துக்கு நமஸ்காரம். உன் வீரச்செயல்களைப் பாடி, உன்னருளைப் பெறுவதற்கு நாங்கள் வந்து
உள்ளோம். எங்கள் மீது இரக்கம் கொண்டு அருள்செய்.
விளக்கம்: பள்ளிக்குப் புறப்படும் முன், இந்த பாசுரத்தை குழந்தைகள் தினமும் பாராயணம் செய்தால் படிப்பில் திறமை, நடைமுறை வாழ்விலுள்ள சிக்கல்களை எதிர்க்கும் தைரியம் ஏற்படும்.
திருப்பள்ளியெழுச்சி-பாடல் - 4
இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே!
என்னையும் ஆட்கொண்டு இன்னருள் புரியும்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.
பொருள்: திருப்பெருந்துறையில் எழுந்தருளியுள்ள சிவபெருமானே! இந்த அதிகாலையில் வீணைக்கலைஞர்களும், யாழ் வாசிப்பவர்களும் இசை மீட்டியபடி ஒருபுறம் உன் பக்தியில் லயித்து நிற்கிறார்கள். ரிக் உள்ளிட்ட வேதங்களால் உன்னை வணங்குவோரும், தமிழ்
தோத்திரப்பாடல்களைப் பாடுவோர் மறுபுறமும் உன் சிறப்பைப் பாடிக்
கொண்டிருக்கிறார்கள்.
"நமசிவாய' என்ற நாமம் சொல்லியபடி மலர்மாலைகளுடன் பக்தர்கள் ஒருபுறம் நிற்கிறார்கள். வணங்குவோரும், கண்களில் கண்ணீர் மல்க பிரார்த்திப்போரும், உன்னை நினைத்து நெகிழ்பவர்களும் ஒருபுறம் நிற்கிறார்கள். தலையில் கைகூப்பி நீயே சரணாகதி என்று சொல்வோர் ஒருபுறம் காத்திருக்கிறார்கள். எனது இறைவனே! இவர்களது பக்தியின் முன் எனது பக்தி மிகச்சாதாரணம். அப்படிப்பட்ட என்னையும் ஆட்கொண்டவனே! பள்ளியில் இருந்து நீ எழுந்தருள வேண்டும்.
விளக்கம்: இறைவழிபாட்டில் இறங்கி விட்டால், அதைத் தவிர வேறெந்த சிந்தனையும் இருக்கக்கூடாது என்பதை இந்தப் பாடலின் மூலம் புரிந்து கொள்ளலாம்.