|
Post by soundaryasatheesh on Jul 20, 2014 18:27:56 GMT 5.5
அல்லல் படும் எளியோரை அணைக்கவேண்டும் சங்கரா! ஆத்திரம் கொள்ளா கனி இதயம் வேண்டும் சங்கரா! இம்மை மறுமை இரண்டிலும் உன் துணை வேண்டும் சங்கரா! ஈடுஇணை இல்லா உன் கருணை வேண்டும் சங்கரா! உண்ணும் பொழுதும் உறங்கும் பொழுதும் உன் நினைவு வேண்டும் சங்கரா! ஊழ்வினை எல்லாம் நீ துடைக்க வேண்டும் சங்கரா! எப்பொழுதும் நன்றிமாறா உள்ளம் வேண்டும் சங்கரா! ஏற்றத்தாழ்வு இல்லா நல் உலகம் வேண்டும் சங்கரா ஐந்து புலனும் உனக்காக இயங்க வேண்டும் சங்கரா! ஒன்றுபட்ட வாழ்வுதனை அருளவேண்டும் சங்கரா! ஓடிவரும் பாதங்களை காண வேண்டும் சங்கரா! ஔவை போல தனித்தமிழால் உனை பாடவேண்டும் சங்கரா! இஃகுதே எந்நாளும் உனை வேண்டுகிறோம் சங்கரா! பெரியவா சரணம்!!!
|
|
|
Post by kahanam on Jul 25, 2014 23:08:17 GMT 5.5
Maha Periyava ThiruvadigaLee CharaNam! Hara Hara Shankara, Jaya Jaya Shankara!
|
|