|
Post by soundaryasatheesh on Jul 19, 2014 9:48:47 GMT 5.5
பொற்கரங்கள் விரித்து கதிரவன் கடல்மீது உதிக்கின்றான்! பலகோடி நாமத்தால் உன் புகழ் பாடி துதிக்கின்றான!் கச்சிமுதூர் ஈசனே சிதம்பர நடராஜா! திருப்பள்ளி எழுந்தருள்வாய் சங்கரா சுப்ரபாதம!!் புவியெல்லாம் பூபாள ஒளி எழுகிறதே! புகலிடத்தை விட்டு காக்கை எல்லாம் வெளி வருகிறதே! சிவதாண்டவம் புரியும் பொன்னம்பல நாதனே! திருப்பள்ளி எழுந்தருள்வாய் சங்கரா சுப்ரபாதம!!் தேவாதி தேவர் எல்லாம் உன் தரிசனம் காண நிற்கின்றனரே!! உன் திருநாமம் பல்லாயிரம் பாடி வானிலே துதிக்கின்றனரே! கண் மலர்வாய் கச்சி புகழ் ஏகாம்பரனே! திருப்பள்ளி எழுந்தருள்வாய் சங்கரா சுப்ரபாதம!!் நிலவது மறையவே தாமரை இதழ் விரிக்க துடிக்கின்றது! நிலவை சூடிய சிவசக்திரூபனே சற்குருநாதா! நித்திரை விடுத்தே அருள் புரிய வருமாறு வேண்டினோம!் திருப்பள்ளி எழுந்தருள்வாய் சங்கரா சுப்ரபாதம!!் பறவைகளின் ரீங்காரம் சங்கரா சங்கார என்று ஒலிக்கிறதே! பார்முழுதும் பெரும்புண்ணியமே நீ கருணை கண் திறந்தால்! பலஜென்ம பாவங்கள் தீருமே உன் நெற்றிக்கண் திறந்தால!் திருப்பள்ளி எழுந்தருள்வாய் சங்கரா சுப்ரபாதம!!் அடியவர்கள் அனைவரும் உனக்காக கரம் குவித்து நிற்கின்றனரே!! வேதம் அதை ஓதியே வேதியர்கள் எல்லோரும் வைத்தகண் இமைக்காமல் உரைகின்றனரே! வேதத்துக்கே நாயகனே! வேதமாய் உள்ளவனே! திருப்பள்ளி எழுந்தருள்வாய் சங்கரா சுப்ரபாதம!!் சித்தர்கள் எல்லோரும் உனைக்காண சித்தமாக இருக்கின்றனரே! சத்யஜோதியே சர்வரோக நிவாரணனே! சோகம் அதை விரட்டிடும் சர்வலோக ரட்சகனே! சர்வமங்களமும் அளித்திடும் சங்கரா சுப்ரபாதம!!் பெரியவா சரணம!!்
|
|
|
Post by kahanam on Jul 19, 2014 10:50:07 GMT 5.5
Maha Periyava ThiruvadigaLee CharaNam! Suprabhatham Arumai! "Kanchiyilee KaN VaLarum Kuzhanthai" Ulaka Rakshanaakividdathaal Avarai Ezhuppuvathu Namakku Suprabhatham! May Maha Periyava's Blessings be showered on you and your prodigious talent at such a young age!Hara Hara Shankara, Jaya Jaya Shankara!
|
|
|
Post by soundaryasatheesh on Jul 20, 2014 12:49:07 GMT 5.5
Humble thanks sir for ur valuable comments!! Periyava sharanam!!
|
|