|
Post by Sumi on Jul 16, 2014 16:48:30 GMT 5.5
உன் கருணைக்கு அளவே இல்லையா, சத்குருனாதா ! எத்தனை அற்புதங்கள் தான் செய்வாய் !
சரியான முடிவெடுக்க தடுமாறும் தருணத்தில், ஓடி வந்து உபதேசிக்கிறாய் எங்கிருந்தோ அதிசியத்தக்க உதவிகளை அள்ளி தருகிறாய்
விட்டு போன உறவுகளை ஒன்று சேர்க்கிறாய் அவர்கள் எல்லோரும் என் மீது பாச மழை பொழிய வைக்கிறாய்
வார்த்தை ஜாலம் பேசி வீண் பழி சுமத்தியவர்களை வேரோடு அகற்றுகிறாய் நியாயமும் தர்மமும் கைவிடாது என்று நிரூபிக்கவும் செய்கிறாய்
சிறு பிரச்சனைகளுக்கும் கலங்கும் எனக்கு "நான் இருக்கிறேன்" என்று ஆறுதல் சொல்கிறாய்
என் வாழ்வையே ஒரேடியாக மாற்றிவிட்டாயே நீ இந்த மூன்று வருடத்தில்!
அப்படி என்ன தான் புண்ணியம் செய்துவிட்டேன் ஏன் இத்தனை அன்பும் பாசமும் என்மீது ?
அது சரி, கருணையே வடிவானவன் தானே நீ! உன்னை நம்பிக்கையோடு நாடி வருவோரை கலங்க விட்டு விடுவாயா என்ன?
ஆனாலும், என் இப்படி தாங்குகிறாய் சங்கரா? ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு பொழுதும் உன் நினைப்பே உள்ளதாலா?
இல்லை, உன் உபதேசங்களையும், அற்புதங்களையும் உன் பக்தர்களுக்கு கொண்டு செல்கிறேன் என்பதாலா ?
அல்லது, உன்னை நான் முழுமையாக சரணடைந்து விட்டேன் என்பதாலா? எது எப்படி போனாலும், ஒரே ஒரு உறுதியை மட்டும் எனக்கு கொடு
உனக்கு சேவை செய்யும் பாக்கியம் என் வாழ்நாள் முழுவதும் கிடைக்க வேண்டும் எப்பொழுதும், எந்நாளும், உன் துதி பாட வேண்டும் உன் திருவடிகளை நித்தமும் என் கண்ணீரால் கழுவ வேண்டும் உன் உபதேசங்களை முடிந்தவரை கடைப்பிடிக்க வேண்டும் உன் கருணை மழையில் நாள்தோறும் நனைய வேண்டும்
இந்த வரத்தை மட்டும் எனக்குத் தா நான் உன் பொற்பாதங்களை அடையும் நாள் வரும் வரை !!
ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்
|
|
|
Post by uma2806 on Jul 16, 2014 18:29:43 GMT 5.5
VEry nice... who had written this?
|
|
|
Post by Sumi on Jul 16, 2014 18:43:19 GMT 5.5
Dear Smt Uma Shankar, I wrote this. Found a little time at office today, and thought I will pen a few lines etched deep within. VEry nice... who had written this?
|
|
|
Post by kahanam on Jul 31, 2014 12:43:46 GMT 5.5
Saw this only today. Great song penned by our Respected moderator Smt. Sumi. Simply superb. Pray to Maha Periyava to be Blessed by the Manappaangu enunciated by the author. Only Great Bhakthas will get that. Hara HaraShankara, Jaya Jaya Shankara! Maha Periyava ThiruvadigaLee CharaNam!
|
|