|
Post by soundaryasatheesh on Jul 16, 2014 10:40:32 GMT 5.5
விதியெனும் சுழலிலே சிக்கிக் கொண்டோம் சங்கரா! விதியையே மாற்றிவிடும் வித்தகன் நீ சங்கரா! நவகிரஹமும் என்வாழ்வை நெருக்கிடுடே சங்கரா! நீ இன்றி ஒரு கிரஹமும் இயங்காதே சங்கரா! காக்க காக்க காக்க காக்க என்று சொன்னோம் சங்கரா! கண்ணீர் மல்கி வேண்டுகிறோம் வந்திடுவாய் சங்கரா! உன்னைத்தவிர வேறு யாரையும் அறியேனே சங்கரா உன்னைத் தவிர்த்து வேறு எதுவும் தேவையில்லை சங்கரா! அன்பர்களை ஒரு நாளும் கைவிடாத சங்கரா! அடியவரின் குறை தீர்க்க ஓடி வரும் சங்கரா! சுமைகள் பல எங்களையே சுழன்று கொண்டது சங்கரா! சுடர்கின்ற பார்வையால் அதை சுட்டெரிக்கும் சங்கரா! நாடிவரும் பக்தர்களை தேடிவரும் சங்கரா! நாடி நரம்பெல்லாம் உன் பெயர் தானே சங்கரா! குங்குமத்தை அள்ளித் தந்து குறை களைந்தாய் சங்கரா குற்றமே புரிந்தாலும் மன்னித்தருள் சங்கரா! எந்நாளும் பாதம் பணிந்து நின்றிடுவோம் சங்கரா! எண்ணிய எண்ணம் எல்லாம் கை கூடும் சங்கரா! இமைப்பொழுதும் விலகாமல் இருந்திடுவாய் சங்கரா! இனி எமக்கு ஒரு நொடியும் துன்பம் இல்லை சங்கரா! பெரியவா சரணம்
|
|
|
Post by halasyasundaram on Jul 17, 2014 15:00:18 GMT 5.5
//இமைப்பொழுதும் விலகாமல் இருந்திடுவாய் சங்கரா! இனி எமக்கு ஒரு நொடியும் துன்பம் இல்லை சங்கரா! பெரியவா சரணம்//
பெரியவா இருக்க பயமேது. பெரியவா சரணம்
|
|
|
Post by kahanam on Jul 17, 2014 19:23:51 GMT 5.5
Maha Periyava Blessings will be ever on Devotees! May the composer sing many such soulful songs and maka Maha Periyava Devotees Blessed! Hara hara Shankara, Jaya Jaya Shankara!
|
|
|
Post by soundaryasatheesh on Jul 18, 2014 9:13:26 GMT 5.5
Humble thanks sir. Periyava sharanam!!
|
|