Post by radha on Jul 16, 2014 3:07:00 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA:,RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA
கல்கி செய்தி
அருள்வாக்கு - அந்தரங்க சுத்தம்!
13ஜூலை
2014
"அனைத்து அறன்' அதாவது ஸர்வ தர்மமும் என்னவென்றால் அவரவரும் "மனத்துக்கண் மாசிலன் ஆதல்'. அதாவது, தங்கள் மனசைத் தாங்களே துளிகூட அழுக்கில்லாமல் நிர்மலமாகச் சுத்தம் செய்து கொள்வதுதான் என்கிறார் திருவள்ளுவர்.
கர்மாநுஷ்டானத்தால் அவரவரும் சித்தசுத்தி ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற வைதிக ஸம்பிரதாயத்தைத்தான் இங்கே திருக்குறளும் சொல்கிறது. முதலில் இவன் தன்னைத்தானே சுத்தம் பண்ணிக் கொள்ள வேண்டும். இது இல்லாமல் பரோபகாரம். ஸோஷல் ஸர்வீஸ் என்று கிளம்பினால் அது வெற்றுக் காரியம்தான்.
தான் அடங்கியிருக்க வேண்டும். பக்தியோடு ஈஸ்வர சேவை என்று நினைத்து சமூக சேவை செய்ய வேண்டும். அப்போதுதான் அது பலனளிக்கும். அந்தரங்கச் சுத்தமில்லாமல் செய்கிற காரியங்கள் வெறும் படாடோபமாகவும், "ஷோ'வாகவுமே முடிந்து போகும். இந்தப் படாடோபத்தால் "சேவை' என்று செய்கிறவனுக்கு அஹங்காரம் மேலும் ஜாஸ்தியாகத்தான் செய்யும். அஹங்காரம் தொலைவதற்கு உதவவேண்டிய சேவையை அடக்கமும் பணிவும் பக்தியும் அன்பும் இல்லாமல் செய்தால் அஹங்காரத்தை அதிகமாக்கி விடும். குளிக்க வேண்டும் என்று போய்ச் சேற்றை வாரிப் பூசிக் கொண்டதாகி விடும்.
"தான் சுத்தமாவதுதான் ஸர்வ தர்மமும்' என்றால் இது சுயநலம் மாதிரி அல்லவா இருக்கிறது என்று தோன்றலாம். ஆனால் இது நாம் லோக ரீதியில் நினைக்கிற மாதிரியான சுயநலம் இல்லை. பிறத்தியாரைக் கஷ்டப்படுத்தியாவது நம் இந்திரிய சுகங்களைப் பூர்த்தி பண்ணிக் கொள்வதுதான் தப்பான சுய நலம். மனசை சுத்தப்படுத்திக் கொள்ளவேண்டுமானால் நாம் கஷ்டப்பட்டாவது நல்லதே பண்ண வேண்டியதாகிறது.
இது இந்திரிய சௌக்கியங்களிலிருந்து நம் மனசை மீட்டு சாச்வதமான பேரின்பத்தில் சேர்ப்பதற்கு உதவுகிறது.
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL: CHARANAM
கல்கி செய்தி
அருள்வாக்கு - அந்தரங்க சுத்தம்!
13ஜூலை
2014
"அனைத்து அறன்' அதாவது ஸர்வ தர்மமும் என்னவென்றால் அவரவரும் "மனத்துக்கண் மாசிலன் ஆதல்'. அதாவது, தங்கள் மனசைத் தாங்களே துளிகூட அழுக்கில்லாமல் நிர்மலமாகச் சுத்தம் செய்து கொள்வதுதான் என்கிறார் திருவள்ளுவர்.
கர்மாநுஷ்டானத்தால் அவரவரும் சித்தசுத்தி ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற வைதிக ஸம்பிரதாயத்தைத்தான் இங்கே திருக்குறளும் சொல்கிறது. முதலில் இவன் தன்னைத்தானே சுத்தம் பண்ணிக் கொள்ள வேண்டும். இது இல்லாமல் பரோபகாரம். ஸோஷல் ஸர்வீஸ் என்று கிளம்பினால் அது வெற்றுக் காரியம்தான்.
தான் அடங்கியிருக்க வேண்டும். பக்தியோடு ஈஸ்வர சேவை என்று நினைத்து சமூக சேவை செய்ய வேண்டும். அப்போதுதான் அது பலனளிக்கும். அந்தரங்கச் சுத்தமில்லாமல் செய்கிற காரியங்கள் வெறும் படாடோபமாகவும், "ஷோ'வாகவுமே முடிந்து போகும். இந்தப் படாடோபத்தால் "சேவை' என்று செய்கிறவனுக்கு அஹங்காரம் மேலும் ஜாஸ்தியாகத்தான் செய்யும். அஹங்காரம் தொலைவதற்கு உதவவேண்டிய சேவையை அடக்கமும் பணிவும் பக்தியும் அன்பும் இல்லாமல் செய்தால் அஹங்காரத்தை அதிகமாக்கி விடும். குளிக்க வேண்டும் என்று போய்ச் சேற்றை வாரிப் பூசிக் கொண்டதாகி விடும்.
"தான் சுத்தமாவதுதான் ஸர்வ தர்மமும்' என்றால் இது சுயநலம் மாதிரி அல்லவா இருக்கிறது என்று தோன்றலாம். ஆனால் இது நாம் லோக ரீதியில் நினைக்கிற மாதிரியான சுயநலம் இல்லை. பிறத்தியாரைக் கஷ்டப்படுத்தியாவது நம் இந்திரிய சுகங்களைப் பூர்த்தி பண்ணிக் கொள்வதுதான் தப்பான சுய நலம். மனசை சுத்தப்படுத்திக் கொள்ளவேண்டுமானால் நாம் கஷ்டப்பட்டாவது நல்லதே பண்ண வேண்டியதாகிறது.
இது இந்திரிய சௌக்கியங்களிலிருந்து நம் மனசை மீட்டு சாச்வதமான பேரின்பத்தில் சேர்ப்பதற்கு உதவுகிறது.
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL: CHARANAM