Post by radha on Jul 9, 2014 6:58:12 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA:,RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA.
பாதுகா-பிரசாதம்!
Maha Periyavaa, Sri Krishna Sweets April 28, 2012 BAL HANUMAN BLOG.
“இறைவனுக்கு மனத்தில் மட்டுமல்ல; இல்லத்திலும் பூஜிக்கும் இடத்தை விசாலமாக வைத்தால், வாழ்க்கைப் பயணத்தில் இறைவன் எல்லாவற்றையும் மிகப்பெரிதாகத் தந்துவிடுகிறான். இது என் அனுபவம். இதனால் நாளுக்கு நாள் இறைவனுடனான எனது மனவெளிப் பயணம் அதிகமாக்கிக்கொண்டே செல்வதை உணர்கிறேன்” என்கிறார் கோவை கிருஷ்ணா ஸ்வீட் அதிபர் கிருஷ்ணன்.
இவரது விசாலமான பூஜை அறையில், எல்லாத் தெய்வங்களும் கொலு வீற்றிருக்கிறார்கள். கோயில் போன்றே, அர்ச்சகர் இருந்து அன்றாடம் நடக்க வேண்டிய எல்லாப் பூஜைகளையும் முறைப்படி செய்கிறார்; விழா நாட்களிலும் அப்படியே என்பதுதான் ஆச்சரியம்!
“எங்களுக்கு பிரதான தெய்வங்கள் துர்கா தேவி, முருகன், கிருஷ்ணர் ஆகியோர்தான். இந்தத் துர்கை எத்தனை தலைமுறைக்கு முன், எங்கள் இல்லத்துக்கு யாரால் கொண்டு வந்து சேர்க்கப்பட்டவள் என்று தெரியாது. முருகரும் கிருஷ்ணரும் கிராமத்தில் இருந்து எங்களுடன் வந்தவர்கள்.
பௌர்ணமி அன்று லட்சுமி பூஜையும், பிரதோஷத்தன்று சிவபூஜையும், துவாதசி அன்று கலச பூஜையும் நடந்து வருகிறது.
வியாழக்கிழமைகளில், மகாப் பெரியவாளுடைய பாதுகைகளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தி வருகிறோம்” என்றவர், சுவையான அந்த சம்பவத்தை நினைவு கூர்ந்தார்.
“அது 1988ஆம் வருடம். தொழிலை அபிவிருத்தி செய்ய வங்கியில் இருந்து கடன் கேட்டிருந்தோம். கொஞ்சம் உதாசீனமாகப் பதில் கிடைத்தது. இதை தந்தையிடம் சொல்லவேயில்லை. திடீரென்று அப்பா, அம்மா இருவரும் காஞ்சிபுரம் போகலாம் என்று அழைத்த உடன் கிளம்பினேன். பெரியவாளைத் தரிசனம் செய்ய, 300க்கும் அதிகமானோர் நின்றிருக்க, நாங்கள் கடைசியில் நின்றிருந்தோம். திடீரெனப் பெரியவா வழிவிடச் சொல்லி கூட்டத்தை சைகை செய்தார். வழி கிடைத்தவுடன் கடைசியில் நின்றிருந்த எங்களை அருகில் வரும்படி அழைத்தார். மெய் பதற அவர் முன் சென்று நின்றோம். “என்ன வேண்டும்?” என்று இரண்டு முறை கேட்டார். நாங்கள், “எதுவும் வேண்டாம்” என்று, பவ்யமாகத் தலை அசைத்தோம். மூன்றாவது முறை கோபமாகக் கேட்டார். உடனே “பிரசாதம் வேண்டும்” எனக் கூறினோம். உடனே, தனது திருவடிகளில் அணிந்திருந்த பாதுகைகளை எடுத்து, தாமரை மலரை அதன் மேல் வைத்து எங்களிடம் கொடுத்தார்.
பரதாழ்வார், ஸ்ரீராமரின் பாதுகைகளைக் கேட்டுப் பெற்றார். அது மகா புண்ணியம். கேட்காமலேயே – மகா பெரியவாளின் பாதுகை கிடைத்ததும் இதுதான் நினைவுக்கு வந்தது.
அந்த நொடியில் என் சர்வ நாடியும் அடங்கின. சர்வாங்கமும் ஒடுங்கின. மேனி புல்லரித்து, எத்தனை நேரம் உறைந்து போனேன் என்று தெரியாமல் செய்த அபார கருணை அது. பரவசமான நேரம்!
உயிர் உள்ளவரை இறைவனது எல்லையில்லாக் கருணை என்னை ஆள வேண்டும் என்ற இறைஞ்சுதலுடன், அந்தப் பாதுகைகளைச் சுமந்து வந்தேன்.
தேரில் தெய்வம் உலா வந்து கொண்டிருக்கும்போது, தெருவில் இறங்கி, நாம் அந்தத் தெய்வத்தை தரிசனம் செய்யப் போகும் சமயத்தில், அந்தத் தெய்வம் தேரிலிருந்து இறங்கி வந்து நம் கைகளைப் பிடித்துக்கொண்டு கருணை செய்தால் எப்படி இருக்கும்? அந்த மாதிரியான ஒரு புளகாங்கிதம் அது. காஞ்சியில் இருந்து திரும்பி வந்த உடன், வங்கியில் இருந்து அழைப்பு வந்தது. ‘ஏதோ ஒரு டென்ஷனில் சொல்லிவிட்டோம். எத்தனை லட்சம் வேண்டுமானாலும் கடன் தருகிறோம். வேண்டுமானால், செக்கை அனுப்பி வைக்கிறோம்’ என்றனர். இப்படி ஒன்றிரண்டு அல்ல; 20 வருடங்களுக்கும் அதிகமாக வாடாமல் அதே மலர்களுடன், சந்தனப் பேழையில் இருந்துகொண்டு, நிறையத் திருப்பங்களை, நானே எதிர்பார்க்காத அளவுக்கு நடத்தி வருகின்றன, அந்தப் பாதுகைகள்.”
சொல்லும்போதே அவர் குரலில் பரவசம் தெறிக்கிறது. அந்தப் பரவசம் நமக்குள்ளும் ததும்பத்தான் செய்கிறது.
–நன்றி தீபம் (கல்கி வழங்கும் ஆன்மீக இதழ்)
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
பாதுகா-பிரசாதம்!
Maha Periyavaa, Sri Krishna Sweets April 28, 2012 BAL HANUMAN BLOG.
“இறைவனுக்கு மனத்தில் மட்டுமல்ல; இல்லத்திலும் பூஜிக்கும் இடத்தை விசாலமாக வைத்தால், வாழ்க்கைப் பயணத்தில் இறைவன் எல்லாவற்றையும் மிகப்பெரிதாகத் தந்துவிடுகிறான். இது என் அனுபவம். இதனால் நாளுக்கு நாள் இறைவனுடனான எனது மனவெளிப் பயணம் அதிகமாக்கிக்கொண்டே செல்வதை உணர்கிறேன்” என்கிறார் கோவை கிருஷ்ணா ஸ்வீட் அதிபர் கிருஷ்ணன்.
இவரது விசாலமான பூஜை அறையில், எல்லாத் தெய்வங்களும் கொலு வீற்றிருக்கிறார்கள். கோயில் போன்றே, அர்ச்சகர் இருந்து அன்றாடம் நடக்க வேண்டிய எல்லாப் பூஜைகளையும் முறைப்படி செய்கிறார்; விழா நாட்களிலும் அப்படியே என்பதுதான் ஆச்சரியம்!
“எங்களுக்கு பிரதான தெய்வங்கள் துர்கா தேவி, முருகன், கிருஷ்ணர் ஆகியோர்தான். இந்தத் துர்கை எத்தனை தலைமுறைக்கு முன், எங்கள் இல்லத்துக்கு யாரால் கொண்டு வந்து சேர்க்கப்பட்டவள் என்று தெரியாது. முருகரும் கிருஷ்ணரும் கிராமத்தில் இருந்து எங்களுடன் வந்தவர்கள்.
பௌர்ணமி அன்று லட்சுமி பூஜையும், பிரதோஷத்தன்று சிவபூஜையும், துவாதசி அன்று கலச பூஜையும் நடந்து வருகிறது.
வியாழக்கிழமைகளில், மகாப் பெரியவாளுடைய பாதுகைகளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தி வருகிறோம்” என்றவர், சுவையான அந்த சம்பவத்தை நினைவு கூர்ந்தார்.
“அது 1988ஆம் வருடம். தொழிலை அபிவிருத்தி செய்ய வங்கியில் இருந்து கடன் கேட்டிருந்தோம். கொஞ்சம் உதாசீனமாகப் பதில் கிடைத்தது. இதை தந்தையிடம் சொல்லவேயில்லை. திடீரென்று அப்பா, அம்மா இருவரும் காஞ்சிபுரம் போகலாம் என்று அழைத்த உடன் கிளம்பினேன். பெரியவாளைத் தரிசனம் செய்ய, 300க்கும் அதிகமானோர் நின்றிருக்க, நாங்கள் கடைசியில் நின்றிருந்தோம். திடீரெனப் பெரியவா வழிவிடச் சொல்லி கூட்டத்தை சைகை செய்தார். வழி கிடைத்தவுடன் கடைசியில் நின்றிருந்த எங்களை அருகில் வரும்படி அழைத்தார். மெய் பதற அவர் முன் சென்று நின்றோம். “என்ன வேண்டும்?” என்று இரண்டு முறை கேட்டார். நாங்கள், “எதுவும் வேண்டாம்” என்று, பவ்யமாகத் தலை அசைத்தோம். மூன்றாவது முறை கோபமாகக் கேட்டார். உடனே “பிரசாதம் வேண்டும்” எனக் கூறினோம். உடனே, தனது திருவடிகளில் அணிந்திருந்த பாதுகைகளை எடுத்து, தாமரை மலரை அதன் மேல் வைத்து எங்களிடம் கொடுத்தார்.
பரதாழ்வார், ஸ்ரீராமரின் பாதுகைகளைக் கேட்டுப் பெற்றார். அது மகா புண்ணியம். கேட்காமலேயே – மகா பெரியவாளின் பாதுகை கிடைத்ததும் இதுதான் நினைவுக்கு வந்தது.
அந்த நொடியில் என் சர்வ நாடியும் அடங்கின. சர்வாங்கமும் ஒடுங்கின. மேனி புல்லரித்து, எத்தனை நேரம் உறைந்து போனேன் என்று தெரியாமல் செய்த அபார கருணை அது. பரவசமான நேரம்!
உயிர் உள்ளவரை இறைவனது எல்லையில்லாக் கருணை என்னை ஆள வேண்டும் என்ற இறைஞ்சுதலுடன், அந்தப் பாதுகைகளைச் சுமந்து வந்தேன்.
தேரில் தெய்வம் உலா வந்து கொண்டிருக்கும்போது, தெருவில் இறங்கி, நாம் அந்தத் தெய்வத்தை தரிசனம் செய்யப் போகும் சமயத்தில், அந்தத் தெய்வம் தேரிலிருந்து இறங்கி வந்து நம் கைகளைப் பிடித்துக்கொண்டு கருணை செய்தால் எப்படி இருக்கும்? அந்த மாதிரியான ஒரு புளகாங்கிதம் அது. காஞ்சியில் இருந்து திரும்பி வந்த உடன், வங்கியில் இருந்து அழைப்பு வந்தது. ‘ஏதோ ஒரு டென்ஷனில் சொல்லிவிட்டோம். எத்தனை லட்சம் வேண்டுமானாலும் கடன் தருகிறோம். வேண்டுமானால், செக்கை அனுப்பி வைக்கிறோம்’ என்றனர். இப்படி ஒன்றிரண்டு அல்ல; 20 வருடங்களுக்கும் அதிகமாக வாடாமல் அதே மலர்களுடன், சந்தனப் பேழையில் இருந்துகொண்டு, நிறையத் திருப்பங்களை, நானே எதிர்பார்க்காத அளவுக்கு நடத்தி வருகின்றன, அந்தப் பாதுகைகள்.”
சொல்லும்போதே அவர் குரலில் பரவசம் தெறிக்கிறது. அந்தப் பரவசம் நமக்குள்ளும் ததும்பத்தான் செய்கிறது.
–நன்றி தீபம் (கல்கி வழங்கும் ஆன்மீக இதழ்)
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM