Post by radha on Jul 5, 2014 2:33:41 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA:,RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA .
கீதையில் கண்ணன் போட்ட முடிச்சு!
Posted on July 4, 2014 by பார்வதி அருண்குமார் in DINAMANI
ஸ்ரீகிருஷ்ண பகவான் பகவத்கீதையை உபநிஷத் ஸாரமாக அருளியுள்ளார். இதில் விஷயங்கள் சரளமாகவே கூறப்பட்டுள்ளன. எளிய நடையாக இருப்பினும் ஆழ்ந்த கருத்துக்கள் அதிகம். கீதையின் சுலோகங்களில், சம்பிரதாயப்படி குருவிடம் பொருளைக் கேட்டு பல முறை கீதை முழுவதையும் ஆராய்ந்து பார்த்தே உண்மையான கருத்தை அறிய முடியும். இதைக் காட்டுவதற்காகவே கண்ணபிரான் சில முடிச்சுகளை சில இடங்களில் போட்டுள்ளார். கேள்விகளை எழுப்பி விட்டு பதில் கூறாமல் ஓர் முடிச்சு போட்டு விட்டார். அவிழ்க்கச் சிரமமாக உள்ளது போல் இருக்கிறது. ஆனால் அதன் பதிலையும் சாவியையும் அவர் வைத்துத்தான் உள்ளார். இப்படி ஒரு கேள்வி 5-ஆவது அத்யாயத்தில் வருகிறது.
மக்கள் மோகமடைவதற்குக் காரணம் ஞானமாகிய ஆத்ம ஸ்வரூபம் அஞ்ஞானத்தால் மூடப்பட்டு, மறைக்கப்பட்டுள்ளதுதான். எனவே ஞானத்தால் அந்த அஞ்ஞானம் போக்கடிக்கப்பட்டால், அப்போது ஞானத்தால் பரம்பொருள் விளங்கும் என்று ஒரு சுலோகத்தில் கூறுகிறார். ஆனால் அஞ்ஞானத்தால் மறைத்து மூடி அமுக்கப்பட்ட ஞானம் எவ்வாறு அஞ்ஞானத்தைப் போக்கடிக்க முடியும்? முடியுமானால் எவ்வாறு அதனால் மூடப்பட்டு இருக்க முடியும்? முன்பே போக்கி விரட்டி அடித்திருக்க வேணுமே என்றெல்லாம் வரும் கேள்விகள் நிற்கின்றன. பதில் கூறப்படவில்லை. என்ன செய்வது?
இங்கு ஸ்ரீகிருஷ்ணர் கேள்வி கேட்டதைத் தாமே பதில் சூட்சுமமாக 10-ஆவது அத்யாயத்தில் கூறியுள்ளார். “பெரியோர்கள், அறிவாளிகள் என்னை உடல், மனம், வாக்கு எல்லாவற்றாலும் பக்தி செய்கிறார்கள். எப்போதும் என்னிடமே அன்புடன் ஈடுபட்டு வருகிறார்கள். இத்தகைய பக்தர்களுக்கு நானே அந்த ஞானத்தை அளித்து விடுகிறேன் என்று கூறிவிட்டு அத்தகையவர்களுக்குத்தான் நான் அஞ்ஞானத்தை விரட்டும் ஞான ஒளியை ஆத்மபாவஸ்தனாக இருந்து அளித்து அஞ்ஞானத்தை போக்குகிறேன்’ என்கிறார்.
ஞான வடிவினனாக இருப்பினும் பரமாத்மா சகல சாட்சியாக உள்ளதால் எவருக்கும் விரோதி அல்ல. ஆனால் அதே ஞானவடிவமான இவர் ஆத்மபாவம் எனப்படும் வேதாந்த மகாவாக்யார்த்த ஞானமாகிய மனதினுடைய அகண்டாகார வ்ருத்தியில் பிரதிபிம்பித்து ஆத்மபாவஸ்தராக ஆகி அஞ்ஞானத்தை விரட்டுகிறார்.
எனவே சுத்த சைதன்யம் அறியாமையைத் தெரிவிக்கும் ஜோதிஸாக இருப்பினும், அகண்டாகாரமான அஹம் ப்ரஹ்மாஸ்மி என்ற நிலையில் நிலைத்த மனோ வ்ருத்தியினுள் புகுந்து அறியாமையை நிவர்த்தி பண்ணும் என்பது கருத்து. எனவே முன்பு 5-ஆவது அத்யாயத்தில் கேட்ட கேள்விக்குப் பதிலை இங்கு மறைமுகமாக பகவான் கூறிவிட்டார்.
இதை வைத்துத்தான் பின்பு வந்த ஸ்ரீவித்யாரண்யர் போன்றவர்கள் உதாரணங்களுடன் இதே விஷயத்தை இவ்விதம் விளக்குகின்றனர். எவ்வாறு சூர்ய கிரணம் ஜோதிர்மயமாக உள்ளதாயினும் தனிப்பட்ட கிரணம் பஞ்சு முதலியவற்றை பிரகாசப்படுத்திவிட்டு நின்றுவிட்டாலும்கூட, அதே கிரணங்கள் குறிப்பிட்ட லென்ஸ் வழியே சென்றால் அந்தப் பஞ்சு முதலியவற்றை அழித்து விடுகிறதோ இதே போலத்தான் ஆத்மஸ்வரூபமான அறிவும் தனிப்பட்ட ரீதியில் அறியாமைக்கு விரோதியாக இல்லாமல் அதை விளக்குவதாக அமைந்தாலும்கூட, அகண்டாகார வ்ருத்தியில் (மனசின் நிலை) உட்புகுந்து அறியாமையை எரித்து விடுகிறது. எனவே நாமனைவரும் வேதாந்த சாஸ்திரங்களைக் கேட்டு, அந்த உன்னதமான மன நிலையை அடைய படிப்படியாக முயல வேண்டும்.
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
கீதையில் கண்ணன் போட்ட முடிச்சு!
Posted on July 4, 2014 by பார்வதி அருண்குமார் in DINAMANI
ஸ்ரீகிருஷ்ண பகவான் பகவத்கீதையை உபநிஷத் ஸாரமாக அருளியுள்ளார். இதில் விஷயங்கள் சரளமாகவே கூறப்பட்டுள்ளன. எளிய நடையாக இருப்பினும் ஆழ்ந்த கருத்துக்கள் அதிகம். கீதையின் சுலோகங்களில், சம்பிரதாயப்படி குருவிடம் பொருளைக் கேட்டு பல முறை கீதை முழுவதையும் ஆராய்ந்து பார்த்தே உண்மையான கருத்தை அறிய முடியும். இதைக் காட்டுவதற்காகவே கண்ணபிரான் சில முடிச்சுகளை சில இடங்களில் போட்டுள்ளார். கேள்விகளை எழுப்பி விட்டு பதில் கூறாமல் ஓர் முடிச்சு போட்டு விட்டார். அவிழ்க்கச் சிரமமாக உள்ளது போல் இருக்கிறது. ஆனால் அதன் பதிலையும் சாவியையும் அவர் வைத்துத்தான் உள்ளார். இப்படி ஒரு கேள்வி 5-ஆவது அத்யாயத்தில் வருகிறது.
மக்கள் மோகமடைவதற்குக் காரணம் ஞானமாகிய ஆத்ம ஸ்வரூபம் அஞ்ஞானத்தால் மூடப்பட்டு, மறைக்கப்பட்டுள்ளதுதான். எனவே ஞானத்தால் அந்த அஞ்ஞானம் போக்கடிக்கப்பட்டால், அப்போது ஞானத்தால் பரம்பொருள் விளங்கும் என்று ஒரு சுலோகத்தில் கூறுகிறார். ஆனால் அஞ்ஞானத்தால் மறைத்து மூடி அமுக்கப்பட்ட ஞானம் எவ்வாறு அஞ்ஞானத்தைப் போக்கடிக்க முடியும்? முடியுமானால் எவ்வாறு அதனால் மூடப்பட்டு இருக்க முடியும்? முன்பே போக்கி விரட்டி அடித்திருக்க வேணுமே என்றெல்லாம் வரும் கேள்விகள் நிற்கின்றன. பதில் கூறப்படவில்லை. என்ன செய்வது?
இங்கு ஸ்ரீகிருஷ்ணர் கேள்வி கேட்டதைத் தாமே பதில் சூட்சுமமாக 10-ஆவது அத்யாயத்தில் கூறியுள்ளார். “பெரியோர்கள், அறிவாளிகள் என்னை உடல், மனம், வாக்கு எல்லாவற்றாலும் பக்தி செய்கிறார்கள். எப்போதும் என்னிடமே அன்புடன் ஈடுபட்டு வருகிறார்கள். இத்தகைய பக்தர்களுக்கு நானே அந்த ஞானத்தை அளித்து விடுகிறேன் என்று கூறிவிட்டு அத்தகையவர்களுக்குத்தான் நான் அஞ்ஞானத்தை விரட்டும் ஞான ஒளியை ஆத்மபாவஸ்தனாக இருந்து அளித்து அஞ்ஞானத்தை போக்குகிறேன்’ என்கிறார்.
ஞான வடிவினனாக இருப்பினும் பரமாத்மா சகல சாட்சியாக உள்ளதால் எவருக்கும் விரோதி அல்ல. ஆனால் அதே ஞானவடிவமான இவர் ஆத்மபாவம் எனப்படும் வேதாந்த மகாவாக்யார்த்த ஞானமாகிய மனதினுடைய அகண்டாகார வ்ருத்தியில் பிரதிபிம்பித்து ஆத்மபாவஸ்தராக ஆகி அஞ்ஞானத்தை விரட்டுகிறார்.
எனவே சுத்த சைதன்யம் அறியாமையைத் தெரிவிக்கும் ஜோதிஸாக இருப்பினும், அகண்டாகாரமான அஹம் ப்ரஹ்மாஸ்மி என்ற நிலையில் நிலைத்த மனோ வ்ருத்தியினுள் புகுந்து அறியாமையை நிவர்த்தி பண்ணும் என்பது கருத்து. எனவே முன்பு 5-ஆவது அத்யாயத்தில் கேட்ட கேள்விக்குப் பதிலை இங்கு மறைமுகமாக பகவான் கூறிவிட்டார்.
இதை வைத்துத்தான் பின்பு வந்த ஸ்ரீவித்யாரண்யர் போன்றவர்கள் உதாரணங்களுடன் இதே விஷயத்தை இவ்விதம் விளக்குகின்றனர். எவ்வாறு சூர்ய கிரணம் ஜோதிர்மயமாக உள்ளதாயினும் தனிப்பட்ட கிரணம் பஞ்சு முதலியவற்றை பிரகாசப்படுத்திவிட்டு நின்றுவிட்டாலும்கூட, அதே கிரணங்கள் குறிப்பிட்ட லென்ஸ் வழியே சென்றால் அந்தப் பஞ்சு முதலியவற்றை அழித்து விடுகிறதோ இதே போலத்தான் ஆத்மஸ்வரூபமான அறிவும் தனிப்பட்ட ரீதியில் அறியாமைக்கு விரோதியாக இல்லாமல் அதை விளக்குவதாக அமைந்தாலும்கூட, அகண்டாகார வ்ருத்தியில் (மனசின் நிலை) உட்புகுந்து அறியாமையை எரித்து விடுகிறது. எனவே நாமனைவரும் வேதாந்த சாஸ்திரங்களைக் கேட்டு, அந்த உன்னதமான மன நிலையை அடைய படிப்படியாக முயல வேண்டும்.
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM