|
Post by kahanam on Jun 13, 2014 23:19:47 GMT 5.5
"காஞ்சியிலே குழந்தை ஒன்று கண்ணயர்ந்து தூங்குவதை காண கோடிகண்கள் வேண்டும் தாலேலோ!" பாடலை எழுதியவர்:- திருமதி சௌந்தர்யா சதீஷ் பாடலை பாடியவர் :- திரு கணேஷ் கிருஷ்ணா மிருதங்கம்:- திரு திருச்சேரி கௌஷிக் வயலின்:- திரு திருச்சேரி கார்த்திக் Kanchiyil KaN Valarum Kannan! "Ayarpaadi Maaligaiyil" tunil Maha Periyava Song! Listen and Enjoy! Hara Hara Shankara, Jaya Jaya Shankara! youtu.be/4pLrKnFIIpcThanks to Halasya Sundaram Iyer from Facebook காஞ்சியிலே குழந்தை ஒன்று கண்ணயர்ந்து தூங்குவதை காணக் கோடி கண்கள் வேண்டும் தாலேலோ!
தென்னாட்டவர் உடன் இணைந்து எந்நாட்டவரும் போற்றும் கருணைக்கடல் தூங்குகிறான் தாலேலோ! (காஞ்சியிலே)
செந்தமிழில் சந்தம் வைத்து போற்றுகின்ற பரம்பொருளே தென்றல் போல உறங்கிடுதே தாலேலோ! (காஞ்சியிலே)
சந்தனத்தின் சிறுகீற்றில் கண்மையை தோய்த்தெடுத்து பொட்டு வைக்க ஏக்கம் வந்தது தாலேலோ! (காஞ்சியிலே)
அன்னம் போல நடை நடந்து அவன் அருகில் அமர்ந்து கொண்டு அழகன் அவன் அழகு காண தாலேலோ! (காஞ்சியிலே)
வீணை அதை மீட்டுகின்ற நாதனவன் விரல்களிலே சொடுக்கெடுக்க ஆசை வந்தது தாலேலோ! (காஞ்சியிலே)
பார்முழுதும் நடந்து வந்த பரந்தாமன் பாதம் அதை பிடித்துவிட தோன்றிடுதே தாலேலோ! (காஞ்சியிலே)
தூக்கம் என்பதே இன்றி அகிலம் காக்க ஓடியவன் தனை மறந்து தூங்குகின்றான் தாலேலோ! (காஞ்சியிலே)
இப்படியே தூங்கவிட்டால் இவ்வுலகம் இருண்டுவிடும் அன்பர்களே துயில் எழுப்ப வாரீரோ (காஞ்சியிலே)
பெரியவா சரணம்.இந்த பாடலை எழுதியவர் திருமதி. சௌந்தர்யா சதீஷ் அவர்கள்
|
|
|
Post by Sumi on Jun 14, 2014 9:30:41 GMT 5.5
Beautiful. Thank you for sharing this Sri kahanam. Please do share the lyrics also, if possible.
|
|
|
Post by kahanam on Jun 14, 2014 22:31:09 GMT 5.5
Thanks to Haalasya Sundaram Iyer from Facebook, I am able to add the lyrics by Smt. Soundarya Satheesh. May Maha Periyava's Boundless Blessings be on them all to continue to give such great songs! Hara Hara Shankara, Jaya Jaya Shankara!
|
|
|
Post by echurravi on Jul 14, 2014 11:05:21 GMT 5.5
HE is our GNANA KUZHANTHAI ALLAVO
|
|