Post by Sumi on Jun 11, 2014 9:12:49 GMT 5.5
அதாவது என்ன தெரியுமென்றால், தற்போது பொதுவாக லோகம் முழூககப் படிப்புமுறை இருக்கும் நிலையில் எங்கே படிப்பு ஜாஸ்தியோ அந்த ஊரில், அந்த நாட்டில்தான் கூறறமும் ஜாஸ்தி நடக்கிறதென்று தெரியும். ஹைஸ்கூல், டிகிரி தரும காலேஜ், டாக்டரேட் தருகிற உயர்ந்த ஸென்டர்கள் என்று ஒன்றுக்குமேல் ஒன்றாக வளர்ந்துகொண்டிருக்கிற நாடுகளில்தான் குற்றங்களும் வளர்ந்துகொண்டிருப்பது தெரியும். எழுத்தறிவில்லாத காட்டுக்குடிகளும் மலைவாஸிகளும் உள்ள இடங்களில்தான் போலீஸ¨க்கு ரொம்பவும் வேலை குறைச்சல், வக்கீல்களுக்குத் தேவை இல்லை என்று தெரியும்.
படிப்பு ஜாஸ்தியாக ஆக நூதன நூதனமாக ஏமாற்று வித்தைகள் செய்கிற ஸாமர்த்யங்களும் வளர்கின்றன. தொழில்கள் நடத்துகிறவர்களும் அரசியல்வாதிகளும் செய்கிற பேற்று மாற்று, எங்கே போனாலும் ரஹஸ்யத்தில் நடக்கும் லஞ்சம் முதலான அநேகக் குற்றங்கள் இந்த ஸாமர்த்தியத்தில் கோர்ட்வரை வராமலே போகின்றன. அதனால் போர்ட் போட்டாலும்கூட அதில் கால்வாசிக் குற்றங்களைத்தான் காட்டமுடியும்!முக்கால்வாசிக் குற்றங்கள் ஸ்தலத்துக்கும், போலீஸுக்கும் வராமலே போயிருக்கும்!படிப்பினால் புத்தி ஸாமர்த்யம் அதிகரிப்பதில் ஸிவில் குற்றங்கள் மாத்ரம்தான் அதிகரித்திருக்கின்றன என்றில்லை. பெரிதான பாங்குக்கொள்ளை, ஒர மந்த்ரி ஸபையையே சுட்டுக் கொன்றுவிடுவது, கோஷ்டி கோஷ்டியாகத் தகாத கார்யத்துக்காகப் பெண்களைக் கடத்திப்போவது மாதிரி க்ரிமினல் குற்றங்களும், ராஜாங்கத்தையே வெறும்பௌதிக பலத்தால் புரட்டிவிடும் "கூ" (coup) முதலியனவும், படிப்பு ஸாமர்த்தயத்தாலேயே நன்றாக ஜோடித்துத் திட்டம் போட்டு நடத்தப்படுகின்றன. இதெல்லாம் போக நேராகவே அடிதடி, பிஸ்டலைக் காட்டுவது, சுடுவது முதலானவையும் படிப்பாளிகள் உள்ள நாடுகளில் ஏறிக்கொண்டே போகின்றன. யூனிவர்ஸிடி லெக்சரர்கள்கூட ஸெனட்டில் நடக்கும் மீட்டிங்குகளில் கல்லெறிவது, நாற்காலிகளைத் தூக்கி அடித்துக்கொள்வது என்று போகிற அளவுக்கு நிலைமை முற்றியிருக்கிறது.
படிக்கத் தெரியாத ஆதிவாஸிகள் குடும்பச் சண்டை, கோஷ்டிச் சண்டை என்று எப்போதாவது ஒருத்தர் தலையை ஒருத்தர் சீவிக்கொள்வதாயிருக்கலாம்.
அது ஏதோ ஆத்திரத்தில் ஒரு வேகம் வந்த ஸமயத்தில் செய்வதாகத் தான் இருக்கும்.மற்றபடி இத்தனை தினுஸு தினுஸான குற்றங்கள் அவர்களுக்குத் தெரியாது. ஃபோர்ஜரியில் ஆரம்பித்து ப்ளான் போட்டு செய்யப்படும் எமாற்றுக் குற்றங்களும், Organised -ஆகச் செய்யப்படும் திருட்டுப் புரட்டுக்களும் படிக்கத் தெரியாத பழங்குடி மக்களுக்குத் தெரியாது.
அப்படியானால் கல்வி வேண்டாமா? ரொம்பப் பெரியவர்கள் கல்வி ரொம்ப அவசியம், 'எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்' என்று சொல்லியிரக்கிறார்களே? ஒளவை இன்னொன்றுகூடச் சொல்லியிருக்கிறாளே -
கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
அவையல்ல நல்ல மரங்கள் - சவைநடுவே
நீட்டோலை வாசியா நின்றான், குறிப்பறிய
மாட்ட தவன்நன் மரம்.
என்பதாக எழுத்தறிவற்றவனை மரத்துக்கு ஸமானம் என்கிறாளே!பர்த்ருஹரியோ அவன் மிருகத்துக்கு ஸமானம் - "வித்யாவிஹீந:பசு:" - என்கிறாரே படித்தவர் லக்ஷணம் நாம் ப்ரத்யக்ஷமாகப் பார்ப்பது ஒரு விதமாயிருக்கிறது. நேர் மாறாக ரொம்பப் பெரியவர்களோ கல்வியை ஏகமாக ச்லாகிக்கிறார்கள். ஏன் இப்படி முரண்பாடாக இருக்கிறது?
ஆழ்ந்து அலசிப் பார்த்தால் முரண் எதுவும் இல்லை என்று தெரியும். அந்தப் பெரியவர்கள் சொன்ன கல்வி வேறாகவும், இன்று அமலாகிற கல்வி வேறாகவும் இருக்கின்றன. இதுதான் முரண்பாட்டுக்குக் காரணம். அவர்கள் சொன்னபடி கல்வி இருந்தால் குற்றம் வளராது, குறைந்து மறைந்தே போய்விடும்.
என்ன சொன்னார்கள்? அவர்கள் புத்தி வளர்ச்சி தருகிற கல்வியை மட்டும் சொல்லவில்லை. பக்தி வளர்ச்சி அளிப்பதாகவும் உள்ள கல்வியையே சொன்னார்கள்.
கற்றதனால் ஆயபயன் என்கொல்? வாலறிவன்
நற்றாள் தொழ (அர்) எனின்
என்று திருவள்ளுவர் சொன்னதுதான், அவர்கள் எல்லாருடைய அபிப்ராயமும்.
தெய்வ ஸம்பதமில்லாமல் அதாவது தெய்வத்திடம் பயப்படவேண்டும் என்று பண்ணாமல் படிப்பை மட்டும் கொடுப்பதால்தான் வீபரிதமாகப் போயிருக்கிறது.
படிப்பு ஜாஸ்தியாக ஆக நூதன நூதனமாக ஏமாற்று வித்தைகள் செய்கிற ஸாமர்த்யங்களும் வளர்கின்றன. தொழில்கள் நடத்துகிறவர்களும் அரசியல்வாதிகளும் செய்கிற பேற்று மாற்று, எங்கே போனாலும் ரஹஸ்யத்தில் நடக்கும் லஞ்சம் முதலான அநேகக் குற்றங்கள் இந்த ஸாமர்த்தியத்தில் கோர்ட்வரை வராமலே போகின்றன. அதனால் போர்ட் போட்டாலும்கூட அதில் கால்வாசிக் குற்றங்களைத்தான் காட்டமுடியும்!முக்கால்வாசிக் குற்றங்கள் ஸ்தலத்துக்கும், போலீஸுக்கும் வராமலே போயிருக்கும்!படிப்பினால் புத்தி ஸாமர்த்யம் அதிகரிப்பதில் ஸிவில் குற்றங்கள் மாத்ரம்தான் அதிகரித்திருக்கின்றன என்றில்லை. பெரிதான பாங்குக்கொள்ளை, ஒர மந்த்ரி ஸபையையே சுட்டுக் கொன்றுவிடுவது, கோஷ்டி கோஷ்டியாகத் தகாத கார்யத்துக்காகப் பெண்களைக் கடத்திப்போவது மாதிரி க்ரிமினல் குற்றங்களும், ராஜாங்கத்தையே வெறும்பௌதிக பலத்தால் புரட்டிவிடும் "கூ" (coup) முதலியனவும், படிப்பு ஸாமர்த்தயத்தாலேயே நன்றாக ஜோடித்துத் திட்டம் போட்டு நடத்தப்படுகின்றன. இதெல்லாம் போக நேராகவே அடிதடி, பிஸ்டலைக் காட்டுவது, சுடுவது முதலானவையும் படிப்பாளிகள் உள்ள நாடுகளில் ஏறிக்கொண்டே போகின்றன. யூனிவர்ஸிடி லெக்சரர்கள்கூட ஸெனட்டில் நடக்கும் மீட்டிங்குகளில் கல்லெறிவது, நாற்காலிகளைத் தூக்கி அடித்துக்கொள்வது என்று போகிற அளவுக்கு நிலைமை முற்றியிருக்கிறது.
படிக்கத் தெரியாத ஆதிவாஸிகள் குடும்பச் சண்டை, கோஷ்டிச் சண்டை என்று எப்போதாவது ஒருத்தர் தலையை ஒருத்தர் சீவிக்கொள்வதாயிருக்கலாம்.
அது ஏதோ ஆத்திரத்தில் ஒரு வேகம் வந்த ஸமயத்தில் செய்வதாகத் தான் இருக்கும்.மற்றபடி இத்தனை தினுஸு தினுஸான குற்றங்கள் அவர்களுக்குத் தெரியாது. ஃபோர்ஜரியில் ஆரம்பித்து ப்ளான் போட்டு செய்யப்படும் எமாற்றுக் குற்றங்களும், Organised -ஆகச் செய்யப்படும் திருட்டுப் புரட்டுக்களும் படிக்கத் தெரியாத பழங்குடி மக்களுக்குத் தெரியாது.
அப்படியானால் கல்வி வேண்டாமா? ரொம்பப் பெரியவர்கள் கல்வி ரொம்ப அவசியம், 'எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்' என்று சொல்லியிரக்கிறார்களே? ஒளவை இன்னொன்றுகூடச் சொல்லியிருக்கிறாளே -
கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
அவையல்ல நல்ல மரங்கள் - சவைநடுவே
நீட்டோலை வாசியா நின்றான், குறிப்பறிய
மாட்ட தவன்நன் மரம்.
என்பதாக எழுத்தறிவற்றவனை மரத்துக்கு ஸமானம் என்கிறாளே!பர்த்ருஹரியோ அவன் மிருகத்துக்கு ஸமானம் - "வித்யாவிஹீந:பசு:" - என்கிறாரே படித்தவர் லக்ஷணம் நாம் ப்ரத்யக்ஷமாகப் பார்ப்பது ஒரு விதமாயிருக்கிறது. நேர் மாறாக ரொம்பப் பெரியவர்களோ கல்வியை ஏகமாக ச்லாகிக்கிறார்கள். ஏன் இப்படி முரண்பாடாக இருக்கிறது?
ஆழ்ந்து அலசிப் பார்த்தால் முரண் எதுவும் இல்லை என்று தெரியும். அந்தப் பெரியவர்கள் சொன்ன கல்வி வேறாகவும், இன்று அமலாகிற கல்வி வேறாகவும் இருக்கின்றன. இதுதான் முரண்பாட்டுக்குக் காரணம். அவர்கள் சொன்னபடி கல்வி இருந்தால் குற்றம் வளராது, குறைந்து மறைந்தே போய்விடும்.
என்ன சொன்னார்கள்? அவர்கள் புத்தி வளர்ச்சி தருகிற கல்வியை மட்டும் சொல்லவில்லை. பக்தி வளர்ச்சி அளிப்பதாகவும் உள்ள கல்வியையே சொன்னார்கள்.
கற்றதனால் ஆயபயன் என்கொல்? வாலறிவன்
நற்றாள் தொழ (அர்) எனின்
என்று திருவள்ளுவர் சொன்னதுதான், அவர்கள் எல்லாருடைய அபிப்ராயமும்.
தெய்வ ஸம்பதமில்லாமல் அதாவது தெய்வத்திடம் பயப்படவேண்டும் என்று பண்ணாமல் படிப்பை மட்டும் கொடுப்பதால்தான் வீபரிதமாகப் போயிருக்கிறது.