Post by radha on Jun 5, 2014 9:28:37 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA:,RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA.
அருள்வாக்கு: ஹிந்து மதம் கண்ட பாதிப்பு
05ஜூன்2014 -Kalki
சுதந்திர போராட்டமும் கூட இந்த அம்சத்தில் மக்களை உரிய திசையில் திருப்பி விட தவறிவிட்டது என்ற துரதிர்ஷ்வசமான உண்மையை கூறாதிருக்கவியலாது. இப்போராட்டத்தின் முக்கியமான தலைவர் மேல் நாட்டினரின் ஆட்சியை களைவாதோடு கூட அல்லது அதனினும் முக்கியமாக அவர்தம் வாழ்முறையில் இந்தியர்களுக்கு ஏற்பட்ட மோகத்தையும் களைந்தெறிய வேண்டுமென்ற கொள்கை உடையராயினும், ஏனைய போராட்டத் தலைவர்களும் அவற்றை பின்பற்றிய ஏராளமான மக்களும் அதில் அவ்வளவாக கவனம் கொள்ளவில்லை.
நாட்டை அந்நியரின் அரசியல் ஆளுகையிலிருந்து மீட்பதென்றுக்கே முழு கவனமும் கொடுக்க வேண்டும் என்று அவர்கள் கருதியதால் மக்களின் மனப்பான்மையையும் வாழ்முறையையும் அந்நிய வழிகளின் நாடு அந்நியராட்சியிலிருந்து அரசியல் சுதந்திரம் பெறும்போது அதிலுள்ள பிரஜைகள் ஹிந்து மதம் மட்டுமின்றி எம்மதத்தினராயினும் ஏதோ ஒரு மதத்தின் மூலம் உள்ள உயர்வு பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்பதை கருதாது. அரசியல் சுதந்திரத்துக்காக மட்டுமே தான் போராட்டம் நடத்தப்பட்டது. எனவே குறிப்பாக ஹிந்து மதஸ்தர் மனிதாபிமானத்தில் பின்னடைவு காணும் நிலையே நீடித்துவந்தது. அந்நிலையில் தான் இறுதியாக சுதந்திரம் வந்திருப்பதும்.
இங்கு கவனத்திற்குரிய அம்சம் யாதெனில் இந்திய மக்களில் ஹிந்துக்கள் மாத்திரம் தான் இவ்விதம் சுயமனிதாபிமானம் குன்றியது. இஸ்லாமியர் எப்போதுமே தீவிரமான சுயமத பற்றும் சமுதாய கட்டுப்பாடும் உள்ளோராதலின் அவர்கள் மேனாட்டு வழிகளில் ஹிந்துக்கள் போல் மயங்கி சுய மதக்காப்பில் பின் தங்கவில்லை. கிறிஸ்துவர்களோ அம்மேனாட்டினரின் மதத்தை சேர்ந்தோரேயாதலின், அவர்கள் விஷயத்தில் இப்பிரச்னை எழும்பவே இல்லை. அதாவது ஹிந்து மதம் மட்டுமே பாதிப்புற்றது.
சுதந்திர போராட்ட காலத்தின் ÷ாபதும் ஹிந்து சமுதாயத்துக்காவும் அதன் சமூகத்தினருக்காகவும் சமய ஸ்தாபனம் என கூறமுடியாமல் சமூக ஸ்தாபனமாகவே இருந்து கொண்டு எழுச்சியுடன் போராடிய ஓரிரு இயகி"கங்கள் ஆற்றிய சிறு பங்கை தவிர, மாö பரும் சுதந்திர போராட்ட இயக்கிம் எதுவும் செய்யாமல் ஹிந்து சமயம் பின்னடைவிலேயே உள்ள நிலையில் தான் முடிவாக சுதந்திரம் வந்திருப்பது.
இந்த நடைமுறை உண்மை களை ஹிந்துகளல்லாதாரும், நடுவு நிலையிலிருந்து நோக்கினால், சுதந்திர பாரத அரசாங்கமானது மக்களின் உள்ள உயருவுக்கு தமது பங்கான பணியை ஆற்ற வேண்டுமென்றும், மதத்தின் மூலம் தான் அவ்வுயர்வு நடப்பதாக சரித்திரம் காட்டியிருப்பதால் இங்குள்ள எல்லா மதங்களுக்கும் எம்மாதமாயினும் போஷணையளிக்கவேண்டும் என்றும் உணர்ந்து அதை செயற்படுத்துமாயின், மிகவும் பாதிப்புற்றிருப்பதும் மிகப்பெரும்பாலோருக்கு உரியதுமான ஹிந்து மதத்துக்கே அரசாங்கத்தின் வழியாக அதிக பொருள் உதவி அளிக்க வேண்டும் என்பதை ஒப்பு கொள்ளவே செய்வர்.
- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீசந்திரசேகரந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்.
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
அருள்வாக்கு: ஹிந்து மதம் கண்ட பாதிப்பு
05ஜூன்2014 -Kalki
சுதந்திர போராட்டமும் கூட இந்த அம்சத்தில் மக்களை உரிய திசையில் திருப்பி விட தவறிவிட்டது என்ற துரதிர்ஷ்வசமான உண்மையை கூறாதிருக்கவியலாது. இப்போராட்டத்தின் முக்கியமான தலைவர் மேல் நாட்டினரின் ஆட்சியை களைவாதோடு கூட அல்லது அதனினும் முக்கியமாக அவர்தம் வாழ்முறையில் இந்தியர்களுக்கு ஏற்பட்ட மோகத்தையும் களைந்தெறிய வேண்டுமென்ற கொள்கை உடையராயினும், ஏனைய போராட்டத் தலைவர்களும் அவற்றை பின்பற்றிய ஏராளமான மக்களும் அதில் அவ்வளவாக கவனம் கொள்ளவில்லை.
நாட்டை அந்நியரின் அரசியல் ஆளுகையிலிருந்து மீட்பதென்றுக்கே முழு கவனமும் கொடுக்க வேண்டும் என்று அவர்கள் கருதியதால் மக்களின் மனப்பான்மையையும் வாழ்முறையையும் அந்நிய வழிகளின் நாடு அந்நியராட்சியிலிருந்து அரசியல் சுதந்திரம் பெறும்போது அதிலுள்ள பிரஜைகள் ஹிந்து மதம் மட்டுமின்றி எம்மதத்தினராயினும் ஏதோ ஒரு மதத்தின் மூலம் உள்ள உயர்வு பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்பதை கருதாது. அரசியல் சுதந்திரத்துக்காக மட்டுமே தான் போராட்டம் நடத்தப்பட்டது. எனவே குறிப்பாக ஹிந்து மதஸ்தர் மனிதாபிமானத்தில் பின்னடைவு காணும் நிலையே நீடித்துவந்தது. அந்நிலையில் தான் இறுதியாக சுதந்திரம் வந்திருப்பதும்.
இங்கு கவனத்திற்குரிய அம்சம் யாதெனில் இந்திய மக்களில் ஹிந்துக்கள் மாத்திரம் தான் இவ்விதம் சுயமனிதாபிமானம் குன்றியது. இஸ்லாமியர் எப்போதுமே தீவிரமான சுயமத பற்றும் சமுதாய கட்டுப்பாடும் உள்ளோராதலின் அவர்கள் மேனாட்டு வழிகளில் ஹிந்துக்கள் போல் மயங்கி சுய மதக்காப்பில் பின் தங்கவில்லை. கிறிஸ்துவர்களோ அம்மேனாட்டினரின் மதத்தை சேர்ந்தோரேயாதலின், அவர்கள் விஷயத்தில் இப்பிரச்னை எழும்பவே இல்லை. அதாவது ஹிந்து மதம் மட்டுமே பாதிப்புற்றது.
சுதந்திர போராட்ட காலத்தின் ÷ாபதும் ஹிந்து சமுதாயத்துக்காவும் அதன் சமூகத்தினருக்காகவும் சமய ஸ்தாபனம் என கூறமுடியாமல் சமூக ஸ்தாபனமாகவே இருந்து கொண்டு எழுச்சியுடன் போராடிய ஓரிரு இயகி"கங்கள் ஆற்றிய சிறு பங்கை தவிர, மாö பரும் சுதந்திர போராட்ட இயக்கிம் எதுவும் செய்யாமல் ஹிந்து சமயம் பின்னடைவிலேயே உள்ள நிலையில் தான் முடிவாக சுதந்திரம் வந்திருப்பது.
இந்த நடைமுறை உண்மை களை ஹிந்துகளல்லாதாரும், நடுவு நிலையிலிருந்து நோக்கினால், சுதந்திர பாரத அரசாங்கமானது மக்களின் உள்ள உயருவுக்கு தமது பங்கான பணியை ஆற்ற வேண்டுமென்றும், மதத்தின் மூலம் தான் அவ்வுயர்வு நடப்பதாக சரித்திரம் காட்டியிருப்பதால் இங்குள்ள எல்லா மதங்களுக்கும் எம்மாதமாயினும் போஷணையளிக்கவேண்டும் என்றும் உணர்ந்து அதை செயற்படுத்துமாயின், மிகவும் பாதிப்புற்றிருப்பதும் மிகப்பெரும்பாலோருக்கு உரியதுமான ஹிந்து மதத்துக்கே அரசாங்கத்தின் வழியாக அதிக பொருள் உதவி அளிக்க வேண்டும் என்பதை ஒப்பு கொள்ளவே செய்வர்.
- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீசந்திரசேகரந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்.
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM