Post by radha on May 27, 2014 16:30:07 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA:,RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA
Kanchi Maha Periavaa- My Guru
அன்னதானம் செய்யுங்க
அன்னதானத்திற்கு என்ன சிறப்பு என்றால், இதில் மட்டும் தான் ஒரு மனிதனை முழுமையாகத் திருப்திபடுத்த முடியும்.
* உயிரோடு உடம்பைக் காப்பது அன்னம். அதனால் தான் 'உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே' என்று சொல்கிறார்கள்.
* அம்பிகையே அன்னதானத்தின் மகிமையை நிலைநாட்டும் விதத்தில் காஞ்சிபுரத்தில் அன்னதானம் செய்தருளியிருக்கிறாள்.
* ஒருவன் தனக்காக மட்டும் உணவு தேடக் கூடாது என்பதை கீதையில் கிருஷ்ணர் உபதேசித்துள்ளார்.
- காஞ்சிப்பெரியவர்
Posted: 27 May 2014 02:09 AM PDT
காஞ்சி மகாபெரியவர் தியானம் செய்வதற்காக, காஞ்சி அருகிலுள்ள தேனம்பாக்கத்திற்கு செல்வது வழக்கம். ஒருமுறை, அங்கு பக்தர்கள் ஏராளமாக கூடியிருந்தனர். அப்போது, பாடகர் சீர்காழி கோவிந்தராஜன், தன் நண்பர் கவிஞர் நெமிலி எழில்மணியுடன் அங்கு வந்தார். தான் அங்கு வருவது தெரிந்தால், கூட்டம் கூடிவிடக்கூடாது என்பதால், யாருக்கும் முன்கூட்டியே தகவல் சொல்லாமல் வந்து விட்டார். தனது உதவியாளரிடம் கூட, காஞ்சிபுரம் செல்வது பற்றி அவர் சொல்லவில்லை. தான் பாடிய பாடல் அடங்கிய இசைத்தட்டுகளை பெரியவரிடம் கொடுத்து ஆசி பெற வேண்டும் என்பது அவரது நோக்கம்.
பெரியவர் அப்போது பூஜையில் ஈடுபட்டிருந்ததால், திரை போடப்பட்டிருந்தது. ஒரு சில பக்தர்களே பெரியவரைக் காண காத்திருந்தனர். அவர்கள் வரிசையில் சீர்காழியும் சேர்ந்து கொண்டார். அப்போது கதவு திறக்கும் சத்தம் கேட்டது. அனைவரும் பெரியவர் தரிசனம் தர வெளியே வருகிறார் என எண்ணி தயாராக நின்றனர். ஆனால், பெரியவரின் சீடர் ஒருவர் மட்டுமே அங்கே வந்தார்.
கூட்டத்தினரை நோக்கி, ""இங்கே சீர்காழி கோவிந்தராஜன் வந்திருக்கிறாரா?'' எனக் கேட்டார். பரபரப்புடன் எழுந்த சீர்காழி, ""இதோ இருக்கிறேன்'' என்று பதிலளித்த படி அவர் முன் வந்தார்.
""உங்களை மகாபெரியவா பாடச் சொன்னா'' என்று சொல்லி விட்டு உள்ளே போய்க் கதவைத் தாழிட்டுக் கொண்டார். மெய் சிலிர்த்துப் போய் விட்டார் சீர்காழி. தான் தேனம்பாக்கம் வந்து, ஒரு சில நிமிடங்கள் ஆகாத நிலையில், அதிலும் யாருக்கும் தெரியாத நிலையில், உள்ளே பூஜை செய்யும் பெரியவருக்கு எப்படி தெரிந்தது?'' என்று பரவசப்பட்டார். தான் பாடுவதற்கு, பெரியவர் உத்தர விட்டதை எண்ணி மகிழ்ந்தார்.
""ஹிமாத்ரிசுதே பாஹிமாம்'' என்ற பாடலைப் பாடத் தொடங்கினார். தொடர்ந்து பெரியவர் மீது, தான் பாடிய பாடல்களையும் பாடினார். சிறிது நேரத்தில் கதவு திறக்கப்பட்டது. அதுவரை, சீர்காழியின் இசைமழையில் நனைந்து, இதயம் குளிர்ந்த பெரியவர், பூஜை முடித்து, காவியுடையில் வெளியே வந்தார். சீர்காழி கோவிந்தராஜன் அவரருகே சென்று, இசைத்தட்டைக் கொடுத்து, ஆசி பெற்றார். பின், ஆனந்தக் கண்ணீருடன் புறப்பட்டார்.
சீர்காழி கோவிந்தராஜனின் மகன் டாக்டர் சிவசிதம்பரம் இந்த சம்பவத்தை இசை மேடைகளில், அடிக்கடி சொல்லி மகிழ்வதுண்டு.
சீர்காழியைப் பாடச் சொல்லி உத்தரவிட்ட காஞ்சிப்பெரியவர், ஞானசக்தியால் அனைத்தையும் அறியும் திறமை பெற்றிருந்தார் என்பதற்கு இந்நிகழ்ச்சி ஒரு எடுத்துக்காட்டு
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
Kanchi Maha Periavaa- My Guru
அன்னதானம் செய்யுங்க
அன்னதானத்திற்கு என்ன சிறப்பு என்றால், இதில் மட்டும் தான் ஒரு மனிதனை முழுமையாகத் திருப்திபடுத்த முடியும்.
* உயிரோடு உடம்பைக் காப்பது அன்னம். அதனால் தான் 'உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே' என்று சொல்கிறார்கள்.
* அம்பிகையே அன்னதானத்தின் மகிமையை நிலைநாட்டும் விதத்தில் காஞ்சிபுரத்தில் அன்னதானம் செய்தருளியிருக்கிறாள்.
* ஒருவன் தனக்காக மட்டும் உணவு தேடக் கூடாது என்பதை கீதையில் கிருஷ்ணர் உபதேசித்துள்ளார்.
- காஞ்சிப்பெரியவர்
Posted: 27 May 2014 02:09 AM PDT
காஞ்சி மகாபெரியவர் தியானம் செய்வதற்காக, காஞ்சி அருகிலுள்ள தேனம்பாக்கத்திற்கு செல்வது வழக்கம். ஒருமுறை, அங்கு பக்தர்கள் ஏராளமாக கூடியிருந்தனர். அப்போது, பாடகர் சீர்காழி கோவிந்தராஜன், தன் நண்பர் கவிஞர் நெமிலி எழில்மணியுடன் அங்கு வந்தார். தான் அங்கு வருவது தெரிந்தால், கூட்டம் கூடிவிடக்கூடாது என்பதால், யாருக்கும் முன்கூட்டியே தகவல் சொல்லாமல் வந்து விட்டார். தனது உதவியாளரிடம் கூட, காஞ்சிபுரம் செல்வது பற்றி அவர் சொல்லவில்லை. தான் பாடிய பாடல் அடங்கிய இசைத்தட்டுகளை பெரியவரிடம் கொடுத்து ஆசி பெற வேண்டும் என்பது அவரது நோக்கம்.
பெரியவர் அப்போது பூஜையில் ஈடுபட்டிருந்ததால், திரை போடப்பட்டிருந்தது. ஒரு சில பக்தர்களே பெரியவரைக் காண காத்திருந்தனர். அவர்கள் வரிசையில் சீர்காழியும் சேர்ந்து கொண்டார். அப்போது கதவு திறக்கும் சத்தம் கேட்டது. அனைவரும் பெரியவர் தரிசனம் தர வெளியே வருகிறார் என எண்ணி தயாராக நின்றனர். ஆனால், பெரியவரின் சீடர் ஒருவர் மட்டுமே அங்கே வந்தார்.
கூட்டத்தினரை நோக்கி, ""இங்கே சீர்காழி கோவிந்தராஜன் வந்திருக்கிறாரா?'' எனக் கேட்டார். பரபரப்புடன் எழுந்த சீர்காழி, ""இதோ இருக்கிறேன்'' என்று பதிலளித்த படி அவர் முன் வந்தார்.
""உங்களை மகாபெரியவா பாடச் சொன்னா'' என்று சொல்லி விட்டு உள்ளே போய்க் கதவைத் தாழிட்டுக் கொண்டார். மெய் சிலிர்த்துப் போய் விட்டார் சீர்காழி. தான் தேனம்பாக்கம் வந்து, ஒரு சில நிமிடங்கள் ஆகாத நிலையில், அதிலும் யாருக்கும் தெரியாத நிலையில், உள்ளே பூஜை செய்யும் பெரியவருக்கு எப்படி தெரிந்தது?'' என்று பரவசப்பட்டார். தான் பாடுவதற்கு, பெரியவர் உத்தர விட்டதை எண்ணி மகிழ்ந்தார்.
""ஹிமாத்ரிசுதே பாஹிமாம்'' என்ற பாடலைப் பாடத் தொடங்கினார். தொடர்ந்து பெரியவர் மீது, தான் பாடிய பாடல்களையும் பாடினார். சிறிது நேரத்தில் கதவு திறக்கப்பட்டது. அதுவரை, சீர்காழியின் இசைமழையில் நனைந்து, இதயம் குளிர்ந்த பெரியவர், பூஜை முடித்து, காவியுடையில் வெளியே வந்தார். சீர்காழி கோவிந்தராஜன் அவரருகே சென்று, இசைத்தட்டைக் கொடுத்து, ஆசி பெற்றார். பின், ஆனந்தக் கண்ணீருடன் புறப்பட்டார்.
சீர்காழி கோவிந்தராஜனின் மகன் டாக்டர் சிவசிதம்பரம் இந்த சம்பவத்தை இசை மேடைகளில், அடிக்கடி சொல்லி மகிழ்வதுண்டு.
சீர்காழியைப் பாடச் சொல்லி உத்தரவிட்ட காஞ்சிப்பெரியவர், ஞானசக்தியால் அனைத்தையும் அறியும் திறமை பெற்றிருந்தார் என்பதற்கு இந்நிகழ்ச்சி ஒரு எடுத்துக்காட்டு
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM