Power of Gayathri Mantram - R.Venkatasaamy's book extract
Feb 11, 2014 15:56:35 GMT 5.5
Sumi likes this
Post by uma2806 on Feb 11, 2014 15:56:35 GMT 5.5
மஹாபெரியவா முன்னிலையில் 1963-ஆம் ஆண்டு கும்பகோணம் கும்பேஸ்வர ஆலயத்தில் திருப்பாவை, திருவெம்பாவை மகாநாடு வெகு விமரிசையாக நடைபெற்றது. அப்போது தமிழக முதல்வர் பெரியவர் திரு.பக்தவத்சலம் அவர்கள், அவருடன் மதுரை மீனாட்சி கோயில் திருப்பணியில் ஈடுபட்டிருந்த தமிழ்வேள் திரு.பி.டி.ராஜன் அவர்கள் ஆகியோர் இந்த மகாநாட்டிற்கு வருகை புரிந்திருந்தார்கள்.
அப்போது மாலை நேரம் மஹானின் அருளுரையைக் கேட்கப் பலர் கூடியிருந்தனர். கும்பகோணம் பஞ்சாபகேச சாஸ்திரிகள் மஹானின் அருகில் ஓரமாக அமர்ந்திருந்தார்.
மஹான் உபதேசத்தைத் தொடங்கும் முன் சாஸ்திரிகளைப் பார்த்து, ஆசமனம் செய்வது போல் தன் கையை வைத்துக்கொண்டு சாஸ்திரிகளை வெளியே செல்லுமாறு சைகை காட்டினார். அதன் அர்த்தம் என்ன? ‘இது சந்தியா காலம். உன் கடமை இப்போது சந்தியாவந்தனம் செய்வது தான். என் உபதேசத்தைக் கேட்பதற்காக உரிய காலத்தில் செய்யவேண்டிய ஜபத்தை செய்யாமல் இருக்காதே’ என்பதுதான் அது. அதைப் புரிந்து கொண்ட பஞ்சாபகேச சாஸ்திரிகள் அருகில் இருந்த திருக்குளத்திற்குச் சென்று சந்தியாவந்தன ஜபத்தைச் செய்து முடித்துவிட்டு வந்தார்.
அன்று இரவு நடந்ததென்ன?
சாஸ்திரிகள் அழைக்காமலேயே அவர் வீட்டுக்கு மஹான் எழுந்தருளி, ஒரு மணி நேரம் உபதேசம் செய்தார். சாஸ்திரிகளின் வீடு மேலக்காவிரியில் இருந்தது. பிராம்மணனுக்கு சந்தியாவந்தனம் முதலிய கர்மாக்கள் மிகவும் முக்கியமானது. வேறு எதுவும் உயர்ந்தது இல்லை. பிராம்மணன் தன் கடமையை ஒழுங்காகச் செய்தால், நானே நேரில் வந்து அனுக்கிரஹம் செய்கிறேன் என்கிற உண்மையை உலகிற்கு மஹான் இந்த சம்பவத்தின் மூலம் வெளிப்படுத்தினார்.
இதை விவரமாகத் தெரியப்படுத்தியவர் கும்பகோணம் பஞ்சாபகேச சாஸ்திரிகள் தான்.
வேதங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்கிற விஷயத்தில் மஹான் மிகவும் கண்டிப்பாக இருந்தார். யார் செய்கிறார்களோ இல்லையோ பிராமணனுக்கு பிறந்தவன் வேதங்களுக்கு உரிய மரியாதையைத் தரவேண்டும். அதைக் குறிக்கும் மற்றொரு சம்பவம்.
ஒரு சமயம் மஹாபெரியவாளைத் தரிசிக்க தேனாம்பேட்டையில் இருந்து நாற்பதுக்கும் மேற்பட்ட அந்தணர்கள் வந்திருந்தனர். வந்தவர்கள் மஹானை வணங்கிய பின் தங்களுடைய பொதுவான மனவேதனையை வெளியிட்டனர்.
சென்னை தேனாம்பேட்டை பகுதியில் பொதுவாக அந்தணர்களின் நெற்றியில் விபூதி, திருமண் தோளில் பூணூல் ஆகியவற்றைக் கண்டால் சில நாஸ்திகர்கள் கேலி கிண்டல் செய்து கலாட்டாக்களில் இறங்கி விடுவதாகவும் அதனால் அந்தப் பகுதியில் பிராமணர்கள் கெளரவமாக நடமாட முடியவில்லை என்றும் தெரிவித்தனர். அதைப் பற்றி விவரமாகத் தெரிந்து கொண்ட மஹான் அவர்களிடம் சொன்னது ஒரே ஒரு விஷயந்தான்:
“நீங்கள் தினமும் காயத்ரி மந்திரத்தை ஜெபம் செய்யுங்கள். எல்லாமே பிறகு சரியாகிவிடும்” என்றார்.
மஹானின் உத்தரவுக்கு மறுப்பேது?
அதேபோல் அவர்கள் இரண்டு மாதம் தொடர்ந்து ஜெபம் செய்து முடிப்பதற்குள், அங்கிருந்த மஹானிடம் நேரில் வந்து எல்லாமே சரியானதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்கள்.
அப்போது அவர் அவர்களிடம் சொன்னார்:
“நீங்கள் எல்லாம் ஸ்ரீகாயத்ரி மந்திரத்தை விட்டதால் வந்த கோளாறு” என்று சொல்லியபின் காயத்ரி மந்திரத்தின் சக்தி அளவிடமுடியாது என்பதை அவர்களுக்கு மீண்டுமொருமுறை தெளிவாக விளக்கினார்.
ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!
அப்போது மாலை நேரம் மஹானின் அருளுரையைக் கேட்கப் பலர் கூடியிருந்தனர். கும்பகோணம் பஞ்சாபகேச சாஸ்திரிகள் மஹானின் அருகில் ஓரமாக அமர்ந்திருந்தார்.
மஹான் உபதேசத்தைத் தொடங்கும் முன் சாஸ்திரிகளைப் பார்த்து, ஆசமனம் செய்வது போல் தன் கையை வைத்துக்கொண்டு சாஸ்திரிகளை வெளியே செல்லுமாறு சைகை காட்டினார். அதன் அர்த்தம் என்ன? ‘இது சந்தியா காலம். உன் கடமை இப்போது சந்தியாவந்தனம் செய்வது தான். என் உபதேசத்தைக் கேட்பதற்காக உரிய காலத்தில் செய்யவேண்டிய ஜபத்தை செய்யாமல் இருக்காதே’ என்பதுதான் அது. அதைப் புரிந்து கொண்ட பஞ்சாபகேச சாஸ்திரிகள் அருகில் இருந்த திருக்குளத்திற்குச் சென்று சந்தியாவந்தன ஜபத்தைச் செய்து முடித்துவிட்டு வந்தார்.
அன்று இரவு நடந்ததென்ன?
சாஸ்திரிகள் அழைக்காமலேயே அவர் வீட்டுக்கு மஹான் எழுந்தருளி, ஒரு மணி நேரம் உபதேசம் செய்தார். சாஸ்திரிகளின் வீடு மேலக்காவிரியில் இருந்தது. பிராம்மணனுக்கு சந்தியாவந்தனம் முதலிய கர்மாக்கள் மிகவும் முக்கியமானது. வேறு எதுவும் உயர்ந்தது இல்லை. பிராம்மணன் தன் கடமையை ஒழுங்காகச் செய்தால், நானே நேரில் வந்து அனுக்கிரஹம் செய்கிறேன் என்கிற உண்மையை உலகிற்கு மஹான் இந்த சம்பவத்தின் மூலம் வெளிப்படுத்தினார்.
இதை விவரமாகத் தெரியப்படுத்தியவர் கும்பகோணம் பஞ்சாபகேச சாஸ்திரிகள் தான்.
வேதங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்கிற விஷயத்தில் மஹான் மிகவும் கண்டிப்பாக இருந்தார். யார் செய்கிறார்களோ இல்லையோ பிராமணனுக்கு பிறந்தவன் வேதங்களுக்கு உரிய மரியாதையைத் தரவேண்டும். அதைக் குறிக்கும் மற்றொரு சம்பவம்.
ஒரு சமயம் மஹாபெரியவாளைத் தரிசிக்க தேனாம்பேட்டையில் இருந்து நாற்பதுக்கும் மேற்பட்ட அந்தணர்கள் வந்திருந்தனர். வந்தவர்கள் மஹானை வணங்கிய பின் தங்களுடைய பொதுவான மனவேதனையை வெளியிட்டனர்.
சென்னை தேனாம்பேட்டை பகுதியில் பொதுவாக அந்தணர்களின் நெற்றியில் விபூதி, திருமண் தோளில் பூணூல் ஆகியவற்றைக் கண்டால் சில நாஸ்திகர்கள் கேலி கிண்டல் செய்து கலாட்டாக்களில் இறங்கி விடுவதாகவும் அதனால் அந்தப் பகுதியில் பிராமணர்கள் கெளரவமாக நடமாட முடியவில்லை என்றும் தெரிவித்தனர். அதைப் பற்றி விவரமாகத் தெரிந்து கொண்ட மஹான் அவர்களிடம் சொன்னது ஒரே ஒரு விஷயந்தான்:
“நீங்கள் தினமும் காயத்ரி மந்திரத்தை ஜெபம் செய்யுங்கள். எல்லாமே பிறகு சரியாகிவிடும்” என்றார்.
மஹானின் உத்தரவுக்கு மறுப்பேது?
அதேபோல் அவர்கள் இரண்டு மாதம் தொடர்ந்து ஜெபம் செய்து முடிப்பதற்குள், அங்கிருந்த மஹானிடம் நேரில் வந்து எல்லாமே சரியானதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்கள்.
அப்போது அவர் அவர்களிடம் சொன்னார்:
“நீங்கள் எல்லாம் ஸ்ரீகாயத்ரி மந்திரத்தை விட்டதால் வந்த கோளாறு” என்று சொல்லியபின் காயத்ரி மந்திரத்தின் சக்தி அளவிடமுடியாது என்பதை அவர்களுக்கு மீண்டுமொருமுறை தெளிவாக விளக்கினார்.
ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!