Post by Sumi on Feb 5, 2014 8:22:13 GMT 5.5
Email message forwarded by our respected member Sri S Ramanathan
ஸ்ரீ சந்த்ரமௌலீச்வரருக்கு தினமும் ஸ்ரீருத்ர த்ரிசதீ அர்ச்சனைக்கு நிறைய வில்வம் எடுத்து அர்ச்சனை செய்வார். வாடாத, பூச்சி அரிக்காத, மூன்று இலைகளோடு கூடிய வில்வதளங்கள் மட்டுமே பூஜைக்கு சேர்த்துக் கொள்ளப்படும்.
ஒருமுறை காஞ்சிபுரத்தில் பூஜைக்கான வில்வம் கிடைப்பதே மிகவும் அரிதாகப் போனது. சிவன் கோவில்களில் வில்வ மரம் இருந்தாலும், அது சிவ சொத்தாச்சே! அதை எடுப்பதே மஹா பாபம்! அதை பூஜைக்கு மறுபடியும் உபயோகப்படுத்துவது என்றால் இதை எப்படியாவது பெரியவாளிடம் தெரியப்படுத்தணும் என்று ஒரு பாரிஷதர் மெல்லப் பேச்சை ஆரம்பித்தார்....
"காஞ்சிபுரத்ல வரவர வில்வ மரங்கள்ள வெறும் கெளைதான் இருக்கு...பச்சு பச்சுன்னு எலையே காணோம்!..."
"ஹிந்தி பண்டிட்டைக் கேளேன்!.."
"ஆமா...ஹிந்தி பண்டிட் என்ன சர்வக்ஞ்யரா என்ன? அவருக்கு ஹிந்தி, சம்ஸ்ருதம், இங்க்லீஷ்,தமிழ் தெரியும். வில்வமரம் தெரியுமா என்ன?.." உள்ளுக்குள் அலுத்துக் கொண்டார். பெரியவா ஆக்ஞை! மீறமுடியுமா? பண்டிட்டிடம் போனார்.
"பண்டிட் ஸ்வாமி....காஞ்சிபுரத்ல வீடுகளைத் தவிர, வேற எங்கியாவுது வில்வமரம் இருக்கான்னு தெரியுமா? ஒங்களைக் கேக்கச் சொல்லி பெரியவா உத்தரவு.."
ஹிந்தி பண்டிட்டுக்கு ஹ்ருதயமும், மேனியும் சிலிர்த்தது! காரணம்?
பத்து நாட்களுக்கு முன், இவர் ஒரு முனிசிபல் பார்க்கில் அமர்ந்து கொண்டு ஒரு முஸ்லீம் ஆசிரியருக்கு ஹிந்தி டியூஷன் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். பார்க் என்றால் நம் ஊரில், கவனிக்கப்படாமல், காய்ந்து போன ஒன்றிரண்டு செடிகளைத் தவிர, வெறும் குப்பையும் கூளமுமாகத்தானே இருக்கும்? இதுவும் அப்படித்தான் இருந்தது. ஆனால், அவர் பார்வையில் "பளிச்'சென்று பச்சைப்பசேலென்று அந்த வில்வமரம் பட்டது!
"அட! பார்க்ல வில்வமரம் கூட வளக்கறாளா என்ன?..." என்ற நொடிப்பொழுது சிந்தனை அப்போதே மறைந்தது. இப்போது பாரிஷதரின் கேள்வி அந்த சிந்தனையை ஆழத்திலிருந்து ஆச்சர்யமாக மாற்றியது.
"வா.....என்னோட! காட்றேன்.." என்று பார்க்கில் உள்ள வில்வமரத்தைக் காட்டினார். அப்புறம் வெகு நாட்களுக்கு அந்த மரத்தின் வில்வதளங்கள்தான் பூஜைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இரண்டு நாட்களுக்குப் பிறகு அவருடைய மகள் அவரிடம் "ஏம்ப்பா...யாரோட கண்ணுலயும் படாத எடத்ல வில்வமரம் இருக்கறது, ஒங்களுக்கு மட்டும் தெரியும்ன்னு, பெரியவாளுக்கு எப்டி தெரிஞ்சுது?.." கேட்டாள்.
"பெரியவாளோட பல லீலைகள்ள இதுவும் ஒண்ணு...."
"இதுல லீலைக்கு என்னப்பா இருக்கு? ஒங்களுக்கு நெறைய ப்ரெண்ட்ஸ் இருக்கா; நெறைய எடங்களுக்குப் போறேள்; சிவபூஜை பண்றேள்; அதுனால வில்வமரம் எங்கியாவது இடுக்குல இருந்தாக் கூட ஒங்களுக்குத் தெரிஞ்சிருக்க சான்ஸ் ஜாஸ்திங்கற அனுமானத்ல பெரியவா அப்டி சொல்லியிருக்கலாம் இல்லியா?.."
"இல்லம்மா.....இது ஒரு அபூர்வ ஸித்தி!.."
"அப்டீன்னா...பார்க்ல வில்வமரம் இருக்குன்னு பெரியவாளே சொல்லியிருக்கலாமே? ஒங்களை எதுக்குக் கேக்கச் சொன்னா..?"
"பாரும்மா....முனிசிபல் பார்க் மட்டுமில்லே; இந்த அண்டகோளமே பெரியவாளோட அறிவுக்கு உட்பட்டதுதான்! இந்த அமானுஷ்ய சக்தியை மத்தவா புரிஞ்சுக்க முடியாதபடி மறைச்சு வெச்சு, ரொம்ப சாமான்யராட்டம் இருக்கறதுனாலதான் பெரியவாளுக்கு பெருமை! [இது அத்தனை மஹான்களுக்கும், அவதார புருஷர்களுக்கும் மட்டுமே உரித்தான கல்யாண குணம்]
முனிசிபல் பார்க்ல வில்வமரம் இருக்குன்னு சிஷ்யாகிட்ட சொல்லியிருந்தா என்ன ஆயிருக்கும்? சிஷ்யர் தண்டோரா கொறையா, பாக்கறவா அத்தனை பேர்கிட்டயும் "முனிசிபல் பார்க் பக்கம் எட்டிக் கூட பாக்காதா பெரியவாளுக்கு, அங்க வில்வமரம் இருக்குன்னு தெரிஞ்சிருக்கு பாத்தேளா! பெரியவா எப்பேர்ப்பட்ட ஒரு ஸித்தபுருஷர்!"..ன்னு மொழக்கம் போட்டுருப்பார்.
அதை தவிர்க்கறதுக்காக, என்னை ஒரு வ்யாஜமா [காரணமா] காட்டி, எம்மூலமா வரட்டுமேன்னு எனக்கு கௌரவம் குடுத்து, என்னை முன்னுக்குத் தள்ளிவிட்டுட்டு, தன்னை இந்த சம்பவத்துலேர்ந்து சுத்தமா மறைச்சுண்டுட்டார் பாத்தியா?..." கண்களில் கண்ணீரோடு அப்பாவும் மகளும் பெரியவாளின் லீலையை ரசித்தனர்.
-------------------------------------------------------------------
நாம் நம் ஊனக் கண்களால் மட்டுமே பார்க்கிற, பார்க்க முடிந்த இந்த உலகத்தில், எந்த ஒரு காரியமும், காரணம் இல்லாமல் நடக்காது. இதில் எந்த ஆதாரமுமோ, இருப்போ இல்லாத "நான், நான், என்னுடையது" என்று ஒன்று பெரிய பூதமாக கிளம்பி அத்தனை அனர்த்தத்துக்கும் காரணமாகிறதே!
ஸ்ரீ சந்த்ரமௌலீச்வரருக்கு தினமும் ஸ்ரீருத்ர த்ரிசதீ அர்ச்சனைக்கு நிறைய வில்வம் எடுத்து அர்ச்சனை செய்வார். வாடாத, பூச்சி அரிக்காத, மூன்று இலைகளோடு கூடிய வில்வதளங்கள் மட்டுமே பூஜைக்கு சேர்த்துக் கொள்ளப்படும்.
ஒருமுறை காஞ்சிபுரத்தில் பூஜைக்கான வில்வம் கிடைப்பதே மிகவும் அரிதாகப் போனது. சிவன் கோவில்களில் வில்வ மரம் இருந்தாலும், அது சிவ சொத்தாச்சே! அதை எடுப்பதே மஹா பாபம்! அதை பூஜைக்கு மறுபடியும் உபயோகப்படுத்துவது என்றால் இதை எப்படியாவது பெரியவாளிடம் தெரியப்படுத்தணும் என்று ஒரு பாரிஷதர் மெல்லப் பேச்சை ஆரம்பித்தார்....
"காஞ்சிபுரத்ல வரவர வில்வ மரங்கள்ள வெறும் கெளைதான் இருக்கு...பச்சு பச்சுன்னு எலையே காணோம்!..."
"ஹிந்தி பண்டிட்டைக் கேளேன்!.."
"ஆமா...ஹிந்தி பண்டிட் என்ன சர்வக்ஞ்யரா என்ன? அவருக்கு ஹிந்தி, சம்ஸ்ருதம், இங்க்லீஷ்,தமிழ் தெரியும். வில்வமரம் தெரியுமா என்ன?.." உள்ளுக்குள் அலுத்துக் கொண்டார். பெரியவா ஆக்ஞை! மீறமுடியுமா? பண்டிட்டிடம் போனார்.
"பண்டிட் ஸ்வாமி....காஞ்சிபுரத்ல வீடுகளைத் தவிர, வேற எங்கியாவுது வில்வமரம் இருக்கான்னு தெரியுமா? ஒங்களைக் கேக்கச் சொல்லி பெரியவா உத்தரவு.."
ஹிந்தி பண்டிட்டுக்கு ஹ்ருதயமும், மேனியும் சிலிர்த்தது! காரணம்?
பத்து நாட்களுக்கு முன், இவர் ஒரு முனிசிபல் பார்க்கில் அமர்ந்து கொண்டு ஒரு முஸ்லீம் ஆசிரியருக்கு ஹிந்தி டியூஷன் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். பார்க் என்றால் நம் ஊரில், கவனிக்கப்படாமல், காய்ந்து போன ஒன்றிரண்டு செடிகளைத் தவிர, வெறும் குப்பையும் கூளமுமாகத்தானே இருக்கும்? இதுவும் அப்படித்தான் இருந்தது. ஆனால், அவர் பார்வையில் "பளிச்'சென்று பச்சைப்பசேலென்று அந்த வில்வமரம் பட்டது!
"அட! பார்க்ல வில்வமரம் கூட வளக்கறாளா என்ன?..." என்ற நொடிப்பொழுது சிந்தனை அப்போதே மறைந்தது. இப்போது பாரிஷதரின் கேள்வி அந்த சிந்தனையை ஆழத்திலிருந்து ஆச்சர்யமாக மாற்றியது.
"வா.....என்னோட! காட்றேன்.." என்று பார்க்கில் உள்ள வில்வமரத்தைக் காட்டினார். அப்புறம் வெகு நாட்களுக்கு அந்த மரத்தின் வில்வதளங்கள்தான் பூஜைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இரண்டு நாட்களுக்குப் பிறகு அவருடைய மகள் அவரிடம் "ஏம்ப்பா...யாரோட கண்ணுலயும் படாத எடத்ல வில்வமரம் இருக்கறது, ஒங்களுக்கு மட்டும் தெரியும்ன்னு, பெரியவாளுக்கு எப்டி தெரிஞ்சுது?.." கேட்டாள்.
"பெரியவாளோட பல லீலைகள்ள இதுவும் ஒண்ணு...."
"இதுல லீலைக்கு என்னப்பா இருக்கு? ஒங்களுக்கு நெறைய ப்ரெண்ட்ஸ் இருக்கா; நெறைய எடங்களுக்குப் போறேள்; சிவபூஜை பண்றேள்; அதுனால வில்வமரம் எங்கியாவது இடுக்குல இருந்தாக் கூட ஒங்களுக்குத் தெரிஞ்சிருக்க சான்ஸ் ஜாஸ்திங்கற அனுமானத்ல பெரியவா அப்டி சொல்லியிருக்கலாம் இல்லியா?.."
"இல்லம்மா.....இது ஒரு அபூர்வ ஸித்தி!.."
"அப்டீன்னா...பார்க்ல வில்வமரம் இருக்குன்னு பெரியவாளே சொல்லியிருக்கலாமே? ஒங்களை எதுக்குக் கேக்கச் சொன்னா..?"
"பாரும்மா....முனிசிபல் பார்க் மட்டுமில்லே; இந்த அண்டகோளமே பெரியவாளோட அறிவுக்கு உட்பட்டதுதான்! இந்த அமானுஷ்ய சக்தியை மத்தவா புரிஞ்சுக்க முடியாதபடி மறைச்சு வெச்சு, ரொம்ப சாமான்யராட்டம் இருக்கறதுனாலதான் பெரியவாளுக்கு பெருமை! [இது அத்தனை மஹான்களுக்கும், அவதார புருஷர்களுக்கும் மட்டுமே உரித்தான கல்யாண குணம்]
முனிசிபல் பார்க்ல வில்வமரம் இருக்குன்னு சிஷ்யாகிட்ட சொல்லியிருந்தா என்ன ஆயிருக்கும்? சிஷ்யர் தண்டோரா கொறையா, பாக்கறவா அத்தனை பேர்கிட்டயும் "முனிசிபல் பார்க் பக்கம் எட்டிக் கூட பாக்காதா பெரியவாளுக்கு, அங்க வில்வமரம் இருக்குன்னு தெரிஞ்சிருக்கு பாத்தேளா! பெரியவா எப்பேர்ப்பட்ட ஒரு ஸித்தபுருஷர்!"..ன்னு மொழக்கம் போட்டுருப்பார்.
அதை தவிர்க்கறதுக்காக, என்னை ஒரு வ்யாஜமா [காரணமா] காட்டி, எம்மூலமா வரட்டுமேன்னு எனக்கு கௌரவம் குடுத்து, என்னை முன்னுக்குத் தள்ளிவிட்டுட்டு, தன்னை இந்த சம்பவத்துலேர்ந்து சுத்தமா மறைச்சுண்டுட்டார் பாத்தியா?..." கண்களில் கண்ணீரோடு அப்பாவும் மகளும் பெரியவாளின் லீலையை ரசித்தனர்.
-------------------------------------------------------------------
நாம் நம் ஊனக் கண்களால் மட்டுமே பார்க்கிற, பார்க்க முடிந்த இந்த உலகத்தில், எந்த ஒரு காரியமும், காரணம் இல்லாமல் நடக்காது. இதில் எந்த ஆதாரமுமோ, இருப்போ இல்லாத "நான், நான், என்னுடையது" என்று ஒன்று பெரிய பூதமாக கிளம்பி அத்தனை அனர்த்தத்துக்கும் காரணமாகிறதே!